இணக்கறியீர் இதமறியீர் இருந்தநிலை அறியீர்
இடமறியீர் தடமறியீர் இவ்வுடம்பை யெடுத்த
கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்
கலக்கமற நடிக்கின்ற துலக்கமறி வீரோ?
பிணக்கறிவீர் புரட்டறிவீர் பிழைசெயவே யறிவீர்
பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்திலிட அறிவீர்
மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே
வடைக்குழம்பே சாறேவென் றடைக்க அறிவீரே
-வள்ளலார்
பலபிறவிகளுக்குப் பிறகு மானுடப் பிறப்பை அடைந்த நாம் நம் வாழ்க்கையில் எதை விடுத்து, என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று சற்றே கடுமையான மொழியில் கடிந்துகொள்கிறார் அடிகளார் இப்பாடலில். எளிமையான பாடல்தான்.
//இணக்கறியீர் இதமறியீர் இருந்தநிலை அறியீர் இடமறியீர் தடமறியீர் இவ்வுடம்பை யெடுத்த கணக்கறியீர் வழக்கறியீர்//
இணக்கறியீர் - இணக்கம் அறியீர். ஒருவருக்கு ஒருவர் அநுசரணையாய் உதவி செய்து இணக்கமாக வாழ அறியவில்லை நாம். மாறாய், இருக்கும் குறைந்த வாழ்நாளில் பக்கத்துவீட்டினருடன் நடக்கும் குழாயடிச்சண்டை தொடங்கி அண்டைநாட்டின் வளம்சுருட்ட உலகப்போர் வரை நடத்துகிறோம்.
இதமறியீர் - இதமாய் பதமாய் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டாலே உலகில் பலபிரச்சனைகள் தீர்ந்துவிடும். ஒவ்வொருவரும் முறுக்கிக்கொண்டு வறட்டுப் பிடிவாதம், விதண்டாவாதம் என ஈகோவை திருப்திசெய்ய வீண் சவடால் செய்வதாலேயே பிரச்சனைகள் பெரிதாகின்றன. முடிவற்று நம்மை அலைக்கழிக்கின்றன.
இருந்தநிலை அறியீர் - நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்கு அடிப்படையானது என்ன என்பது அறியோம். இடமறியீர் - நாம் போய்ச் சேரவேண்டிய இடம் யாது என்பது அறியோம். இது என்னடா, போகவேண்டிய இடம் தெரியாதா என்று நினைக்கலாம். அது இறைவனது திருவடி என்பதில் சந்தேகமில்லாமல் இருந்தாலும் எந்த ஞானவழியில் சென்றால் அதை அடையாலாம் என்று அறிய முற்பட மாட்டோம். முயற்சி அற்ற நிலையில் போகவேண்டிய இடமும், பற்ற வேண்டிய தடமும் மறந்து இகமே பரமென மாயையில் வீழ்ந்து காலத்துக்கும் பிடிப்பின்றி அலைவோம்.
இவ்வுடம்பை யெடுத்த கணக்கறியீர் - நாம் யார் என்று தொடங்கி ஏன் இந்த பிரபஞ்சத்தில் இந்த உடலில் நாம் இருக்கின்றோம் என்ற இறைவனின் கணக்கையாவது அறிவோமா? அல்லது அறியத்தான் முயல்வோமா? மாட்டோம்.
வழக்கறியீர் - ஒரு வழக்கு என்று வந்தால் அத்தியாவசியமானவை: நீதியும், தர்மமும், நேர்மையும், நியாயமும், கருணையும், அஹிம்சையும், மன்னிக்கும் குணமும்: இவற்றில் ஒன்றாவது அரியதான மானிடப்பிறவி பெற்ற நாம் அறிவோமா? மாறாய் குரோதமும், கோபமும், கர்வமும், வன்முறையும், வஞ்சனையுமே அறிவோம்.
//அம்பலத்தே மாயைக் கலக்கமற நடிக்கின்ற துலக்கமறி வீரோ?//
இப்படி நம் பிறப்பிற்கும், வாழ்விற்கும், உய்விற்கும் அடிப்படையான ஒன்றையுமே அறியாத நாம், மாயை என்னும் திரைவிலகாமல் சிற்சபையில் பிரபஞ்சமும் மயங்க ஆடுகின்ற நாயகனின் ஆட்டத்தின் தன்மையை, அதன் அருமையை, அதன் கம்பீரத்தை, அதன் முழுமையை: அவன் ஈடற்ற விளையாட்டை அறியவும் முடியுமோ?
அதிமுக்கியமான இறைவனை நாடும் வழியை விட்டு எதை தேடுகிறோம்? எதில் திளைக்கிறோம்?
//பிணக்கறிவீர் புரட்டறிவீர் பிழைசெயவே யறிவீர்//
பிணக்கறிவீர் - சண்டை சச்சரவு செய்ய முழுவதும் அறிவோம்.
புரட்டறிவீர் - பொய், புரட்டு, சூது, ஏமாற்றுவித்தைகளை கற்றுத் தேர்ந்தோம். பிழைசெயவே அறிவீர் - நல்லது எது உகந்தது எது உய்விக்கும் வழியெது எனத் தெரிந்தும் முன்னோர்வழி படித்தும்; அறிந்த நல்வழியை முற்றிலும் துறந்து, அவ்வழிக்கு எதிர்மறையாக எது பிழையானதோ எது பாவமோ அதைச் செய்வதையே தொழிலாய் அறிந்தவர்கள் நாம்.
இவையெல்லாவற்றையும் விட நாம் நன்கு அறிந்தது எது?
//பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்திலிட அறிவீர் மணக்கறியே
பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே வடைக்குழம்பே சாறேவென் றடைக்க அறிவீரே//
பெரும் கொள்திறன்கொண்ட வயிற்றிற்கு மூச்சுமுட்ட உணவிட அறிவோம். ஊன்கறியும், மரக்கறியும் அதை வகைவகையாய் பொரித்தும் வறுத்தும் வாட்டியும் வதக்கியும் சாறெடுத்தும் வாயில் மூச்சுமுட்ட முட்ட அடைக்க நன்றாய் அறிவோம்.
இந்த அரியவாய்ப்பான மனித்தப்பிறவியிலும்; அடுத்தவேளை உணவிற்கும், பொழுதுபோக சூதும், பொருளீட்ட பொய்யும் போரும் எனச் செய்துவந்தால் அண்டமெங்கும் அதிர ஆடும் அம்பலத்தரசனின் விளையாட்டைப் புரிந்து அவன் கழல்நாடி அவனை அடையும் பிறவிதான் பின்னெப்போது என்று சற்றே கடுமையாக நம்மிடம் கேட்கிறார் அடிகளார்.
Showing posts with label இராமலிங்க அடிகளார். Show all posts
Showing posts with label இராமலிங்க அடிகளார். Show all posts
Thursday, June 07, 2007
Monday, February 06, 2006
10. உவட்டாமல் இனிப்பதுவே!
வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுஞ்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
போன பதிவில எப்படி இறைவனை வணங்க வேண்டுமென்று வள்ளலார் சொல்லியிருந்தார் என்று பார்த்தோமில்லியா? இந்தப் பாட்டுல பாருங்க. இறைவனப் பாடினா எப்படி இனிக்கும், எப்படி சுவைக்கும்னு உவமைகள் சொல்றாரு. அந்த அநுபவத்திற்கு ஈடு இணை கிடையாதுன்னாலும், எப்படி இனிக்கும்னு நமக்குப் புரியறா மாதிரி தோராயமா சொல்றார்.
வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
இதுக்கு ரெண்டு விதமா பொருள் எடுத்துக்கலாம். ஆனா, அடிப்படைக் கருத்து ஒன்றே.
வானில் கலந்திருக்கும் மாணிக்கம் போன்ற விலைமதிக்க முடியாதவனே, அளவறிய முடியாதவனே உன் அருளால் நமக்குக் கிடைக்கப்பெற்ற திருப்பாடல்களை...
இன்னொன்னு, மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம். திருவாசகத்துக்கு உருகாதார்னு தமிழில் ஒரு சொலவடை கூட இருக்கே. அப்படி எத்தனை கனமான மனதையும் உருக்கக்கூடிய தன்மையைப் பெற்றது திருவாசகம். அது இறைவனைப் பற்றியே பாடுவதாலே தான் அத்தனை சிறப்பு. அம்மாதிரி இறைவனைப் பாடி அவனோடவே இரண்டறக் கலந்த மாணிக்கவாசகா! உன் திருவாசகத்தை நான் படிக்கும்போது...
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
நான் என்னை மறந்து அவனுடன் கலந்து திருப்பாடல்களை (or திருவாசகத்தை) பாடும்போது எப்படி இருக்கு? கருப்பஞ் சாறுன்னா கரும்பு ஜூஸ். நம்மூர் திருவிழாலேலாம் பாத்தா நீலக் கலர்லே ஒரு மஷின் இருக்கும். அதுல கரும்ப இந்தப் பக்கம் உட்டாக்க, அந்தப் பக்கம் ஜூஸா வரும். கரும்போட சுவை எப்படி இருக்கும்னு சொல்லனுமா என்ன? எல்லா கரும்பும் நல்ல கரும்பில்ல. சிலதுக்கு ஸ்பெஷல் டேஸ்ட் இருக்கும். மலைப்பழம், ரஸ்தாளின்னு நாம தேடிப்போய் வாங்கறதப் போல. இல்ல? வெளிநாட்டுல கிடைக்கற, ஈக்குவேடார் ப்ரேஸிலேர்ந்து வர்ற வாழைப்பழமெல்லாம் பெரிசா இருக்குமே தவிர நம்மூர்ல கிடைக்கற அளவிற்கு சுவையா இருக்காது.
அந்த மாதிரி நல்ல கரும்பு ஜூஸோட...
தேன்கலந்து பால்கலந்து செழுஞ்கனித்தீஞ் சுவைகலந்
கரும்பு ஜூஸே இனிப்பா இருக்கும். ஆனா அந்த இனிப்பு இறைவனப் பாடும்போது கிடைக்கும் இனிப்புக்கு இணையாகாதாம். அதனால அந்த மாதிரி நல்ல கரும்பு ஜூஸுலே தேன் கலந்த மாதிரி இருக்கு. தேன் மட்டுமா? நல்ல அருமையான கெட்டி எருமைப் பாலையும் லிஸ்ட்ல சேர்த்திருக்காரு. இதுவே திகட்டும்னு நினைக்கறவங்கள பார்த்து கிண்டல் செய்யறா மாதிரி கரும்பு ஜூஸ், தேன், பாலோட சேர்த்து உலகத்துல இருக்கற அத்தனை சுவையான பழங்களையும், அவற்றின் சுவைகளையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடிக்கறார். படிக்கறத நிறுத்திட்டு வள்ளலார் சொல்ற cocktailஓட திதிப்பு எப்படி இருக்குமுன்னு ஒரு நிமிஷம் கற்பனை பண்ணிப்பாருங்க. திகட்டுதில்ல?
தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
இதோட நிறுத்திட்டா எப்படி? பாடும் போது அவரோட உடலும், உயிரும், ஆன்மாவும் கலந்தில்ல பாடுது? அதத்தானே போன பதிவில சொன்னாரு. இத்தனை இனிமையான விஷயங்கள் கலந்தா மாதிரி இருக்கு. சுடச்சுட ஜாங்கிரி பண்றாங்கன்னு வச்சுக்கோங்க வீட்ல. ரொம்ப பிடிக்கும்னு சொல்லி எவ்வளவு திம்பீங்க? அஞ்சு ஆறுக்கு மேல உள்ள போகாதில்லீயா? ஏன்னா, எவ்ளோ தான் புடிக்கும்னாலும் திகட்டிப்போயிடும். அளவுக்கு மிஞ்சினால்னு நம்ம மக்கள் சொல்லி வச்சுட்டு போயிருக்காங்களே. ஆனா, இதெல்லாம் சேர்த்து இவ்ளோ இனிமையா இருக்குது உன்னப் பத்திப் பாடறது. ஆனாலும், எவ்வளவு இனிமை, திதிப்புன்னு சொன்னாலும் திகட்டாமல் இனிச்சிகிட்டே இருக்கே உன் பாட்டெல்லாம்னு சொல்றார்.
-------
இந்தப்பாட்டும் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். இதே போல இன்னொரு பாட்டும் இருக்கு. அதுதான் அடுத்தது. ஸ்கூல்-ல படிக்காம போனவங்களே கிடையாதுன்னு சொல்லலாம்னு வச்சுக்கங்க. ஈஸியா guess பண்ணலாம். யாராவது பண்றீங்களான்னு பார்ப்போம்.
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுஞ்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
போன பதிவில எப்படி இறைவனை வணங்க வேண்டுமென்று வள்ளலார் சொல்லியிருந்தார் என்று பார்த்தோமில்லியா? இந்தப் பாட்டுல பாருங்க. இறைவனப் பாடினா எப்படி இனிக்கும், எப்படி சுவைக்கும்னு உவமைகள் சொல்றாரு. அந்த அநுபவத்திற்கு ஈடு இணை கிடையாதுன்னாலும், எப்படி இனிக்கும்னு நமக்குப் புரியறா மாதிரி தோராயமா சொல்றார்.
வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
இதுக்கு ரெண்டு விதமா பொருள் எடுத்துக்கலாம். ஆனா, அடிப்படைக் கருத்து ஒன்றே.
வானில் கலந்திருக்கும் மாணிக்கம் போன்ற விலைமதிக்க முடியாதவனே, அளவறிய முடியாதவனே உன் அருளால் நமக்குக் கிடைக்கப்பெற்ற திருப்பாடல்களை...
இன்னொன்னு, மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம். திருவாசகத்துக்கு உருகாதார்னு தமிழில் ஒரு சொலவடை கூட இருக்கே. அப்படி எத்தனை கனமான மனதையும் உருக்கக்கூடிய தன்மையைப் பெற்றது திருவாசகம். அது இறைவனைப் பற்றியே பாடுவதாலே தான் அத்தனை சிறப்பு. அம்மாதிரி இறைவனைப் பாடி அவனோடவே இரண்டறக் கலந்த மாணிக்கவாசகா! உன் திருவாசகத்தை நான் படிக்கும்போது...
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
நான் என்னை மறந்து அவனுடன் கலந்து திருப்பாடல்களை (or திருவாசகத்தை) பாடும்போது எப்படி இருக்கு? கருப்பஞ் சாறுன்னா கரும்பு ஜூஸ். நம்மூர் திருவிழாலேலாம் பாத்தா நீலக் கலர்லே ஒரு மஷின் இருக்கும். அதுல கரும்ப இந்தப் பக்கம் உட்டாக்க, அந்தப் பக்கம் ஜூஸா வரும். கரும்போட சுவை எப்படி இருக்கும்னு சொல்லனுமா என்ன? எல்லா கரும்பும் நல்ல கரும்பில்ல. சிலதுக்கு ஸ்பெஷல் டேஸ்ட் இருக்கும். மலைப்பழம், ரஸ்தாளின்னு நாம தேடிப்போய் வாங்கறதப் போல. இல்ல? வெளிநாட்டுல கிடைக்கற, ஈக்குவேடார் ப்ரேஸிலேர்ந்து வர்ற வாழைப்பழமெல்லாம் பெரிசா இருக்குமே தவிர நம்மூர்ல கிடைக்கற அளவிற்கு சுவையா இருக்காது.
அந்த மாதிரி நல்ல கரும்பு ஜூஸோட...
தேன்கலந்து பால்கலந்து செழுஞ்கனித்தீஞ் சுவைகலந்
கரும்பு ஜூஸே இனிப்பா இருக்கும். ஆனா அந்த இனிப்பு இறைவனப் பாடும்போது கிடைக்கும் இனிப்புக்கு இணையாகாதாம். அதனால அந்த மாதிரி நல்ல கரும்பு ஜூஸுலே தேன் கலந்த மாதிரி இருக்கு. தேன் மட்டுமா? நல்ல அருமையான கெட்டி எருமைப் பாலையும் லிஸ்ட்ல சேர்த்திருக்காரு. இதுவே திகட்டும்னு நினைக்கறவங்கள பார்த்து கிண்டல் செய்யறா மாதிரி கரும்பு ஜூஸ், தேன், பாலோட சேர்த்து உலகத்துல இருக்கற அத்தனை சுவையான பழங்களையும், அவற்றின் சுவைகளையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடிக்கறார். படிக்கறத நிறுத்திட்டு வள்ளலார் சொல்ற cocktailஓட திதிப்பு எப்படி இருக்குமுன்னு ஒரு நிமிஷம் கற்பனை பண்ணிப்பாருங்க. திகட்டுதில்ல?
தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
இதோட நிறுத்திட்டா எப்படி? பாடும் போது அவரோட உடலும், உயிரும், ஆன்மாவும் கலந்தில்ல பாடுது? அதத்தானே போன பதிவில சொன்னாரு. இத்தனை இனிமையான விஷயங்கள் கலந்தா மாதிரி இருக்கு. சுடச்சுட ஜாங்கிரி பண்றாங்கன்னு வச்சுக்கோங்க வீட்ல. ரொம்ப பிடிக்கும்னு சொல்லி எவ்வளவு திம்பீங்க? அஞ்சு ஆறுக்கு மேல உள்ள போகாதில்லீயா? ஏன்னா, எவ்ளோ தான் புடிக்கும்னாலும் திகட்டிப்போயிடும். அளவுக்கு மிஞ்சினால்னு நம்ம மக்கள் சொல்லி வச்சுட்டு போயிருக்காங்களே. ஆனா, இதெல்லாம் சேர்த்து இவ்ளோ இனிமையா இருக்குது உன்னப் பத்திப் பாடறது. ஆனாலும், எவ்வளவு இனிமை, திதிப்புன்னு சொன்னாலும் திகட்டாமல் இனிச்சிகிட்டே இருக்கே உன் பாட்டெல்லாம்னு சொல்றார்.
-------
இந்தப்பாட்டும் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். இதே போல இன்னொரு பாட்டும் இருக்கு. அதுதான் அடுத்தது. ஸ்கூல்-ல படிக்காம போனவங்களே கிடையாதுன்னு சொல்லலாம்னு வச்சுக்கங்க. ஈஸியா guess பண்ணலாம். யாராவது பண்றீங்களான்னு பார்ப்போம்.
Thursday, February 02, 2006
9. அனுபவங்காண் பெருந்தகையே!
வள்ளலாரின் பிரபலமான பாடல்களில் ஒன்று இது. நம்மில் பெரும்பாலானோர் பள்ளிநாட்களில் இப்பாடலை மனப்பாடம் செய்திருப்போம்.
தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே.
தேன்படிக்கும் அமுதாம் உன்திருப்பாட்டைத் தினந்தோறும்
பரமேஸ்வரனின் புகழ்ப்பாடும் பாட்டெல்லாம் பொதுப்பாட்டே. புதுப்பாட்டே என்று முன்னர் பார்த்தோம். அவை திருப்பாட்டும் அல்லவா? இங்கு திரு என்பதற்கு புனிதமான என்று அர்த்தம் கொள்வோம். அவனைப் பாடும் பாட்டுகள் எத்தகையவை? பொதுவாகவே, ஒரு மனிதரைக் குறித்த பாட்டைவிடவும் இறையின் மீது பாடப்படும் பாடல்களுக்கு சுவை அதிகம். இந்த ஒப்பீடே தவறு என்று நீங்கள் சண்டைக்கு வரலாம். ஆனாலும், வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள உதவும் என்பதால்.
'என் தலைவா, நீ இருக்க எனக்கு என்ன கவலை? என் மன்னவா, உன்னை இந்த நாடே போற்றுதே!' என்று இளையத் தளபதி விஜயைக் குறித்து பாடலாம். அப்படி பாடல்கள் வந்தும் உள்ளன. இவர் தமிழ்சினிமாவின் இளையதளபதி. இன்னொரு இளைய தளபதி இருக்கிறான். அவனே அண்டசராசரங்களுக்கும் உண்மையான இளைய தளபதி. வேறு யார்? என்றும் இளையவனான தேவசேனாதிபதியான முருகனே. ஒருவர் மேல் பாடப்படும் பாடலை ஒரு வரிகூட மாற்றாமல் மற்றவர்க்கும் பாடமுடியும். மேற்சொன்ன உதாரணப் பாடலையே எடுத்துக்கொள்ளுங்கள். அது விஜயின் அடுத்த படத்தில் அதிரடி எண்ட்ரி பாடலாக இருக்கலாம். அல்லது, கோயிலில் முருகனை நினைத்து இட்டுக்கட்டியும் பாடலாம். இல்லையா? ஆனால், எது தித்திக்கும்? பக்தியுடன் பாடப்படும் கந்தனைக்குறித்த பாடலே தித்திக்கும் என்ற முடிவுக்கு வர சிந்திக்கவும் வேண்டுமா? ஏன் என்ற கேள்வியும் வருகிறதல்லவா? காரணம் ஒன்றுமில்லை. இறைவனின் திருநாமங்களையும், அவன் புகழையும் பாடும்போது அவனின் அருளையும் இயல்பிலேயே அப்பாடல் பெற்றுவிடுகிறது. சுருதிச் சுத்தமாக பாடவேண்டுமென்பது கூட இல்லை. பஜனைக் கோஷ்டிகளை கேட்டிருக்கிறீர்கள் தானே? ஆளாளுக்கு ஒரு கட்டையில் பாடிக்கொண்டிருப்பார்கள். இருந்தும் காதுக்கு இனிமையாகத்தான் இருக்கும். அதுவே இறைவனின் கடாக்ஷம். பாடல் சுத்தமான சங்கத்தமிழில் இருக்கவேண்டுமென்பதும் இல்லை. 'பழம் நீயப்பா', 'திருச்செந்தூரின் கடலோரத்தில்' ஆரம்பித்து அண்மையில் வந்த 'அன்பென்ற மழையிலே' வரை இதைக்காண முடியும். விஷயத்தை விட்டு ரொம்ப தூரம் போய்விட்டோமென்று நினைக்கிறேன்.
அம்மாதிரி தினந்தோறும் தேனினும் இனிய அமுதம் போன்ற உன் புகழ்போற்றும் பாடல்களைப் பாடும்போது..
நான்படிக்கும் போதென்னை நானறியேன்
நான் பாடும்போது என்னையே பக்தியில் மறந்து எனக்கே நான் யார் என்று அறியாத ஆனந்த நிலையில் மூழ்கிவிடுகிறேன்.
நாஒன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும்
நா என்றால் நாக்கு. ஒலி வருவது நாக்கிலிருந்துதான். ஆனால் என் நாக்கு ஒன்று மட்டுமா உன்னைப் பாடுகிறது? இல்லை என் ஊனின் (உடல்) ஒவ்வொரு அணுவும் உன் புகழ்பாடுகிறது. என் உள்ளம் உன்னையே நினைத்து நாவோடும் உடலோடும் சேர்ந்து உன் திருப்பாட்டை படிக்கிறது.
உயிர்க்குயிரும் தான்படிக்கும்
உயிருக்குயிர் என்பது என்ன? நம்ம ஆன்மாவே. அது இல்லாமல் உயிர் என்பது இல்லை. நமது உயிருக்கு ஆதாரமானது ஆன்மா. நம்மின் உள்ளுக்குள்ளே இருந்து நம்மை ஆட்டிவைப்பது அதுவே.
மேற்சொன்னவற்றோடு, என் ஆத்மாவும் சேர்ந்து உன் புகழ் பாடுகிறது.
அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே
உடல், உயிர், ஆவி கொண்டு நான் அடையும் இந்த பேரினிய அனுபவம் நீ காணமாட்டாயோ? கண்டருள மாட்டாயோ? தனிப் பெருந்தகையே. ஈடு இணையில்லாத கருணையை உடையவனே.
----
அம்மாதிரி தினந்தோறும் தேனினும் இனிய அமுதம் போன்ற உன் புகழ்போற்றும் பாடல்களைப் பாடும்போது..
என் உள்ளம் உன்னையே நினைத்து நாவோடும் உடலோடும் சேர்ந்து உன் திருப்பாட்டை படிக்கிறது.
மேற்சொன்னவற்றோடு, என் ஆத்மாவும் சேர்ந்து உன் புகழ் பாடுகிறது.
நான் அடையும் இந்த பேரினிய அனுபவம் நீ காணமாட்டாயோ? தனிப் பெருந்தகையே. ஈடு இணையில்லாத கருணையை உடையவனே.
----
இப்பாடல் மூலம் வள்ளலார் தான் அனுபவிப்பதை இறைவனுக்கு சொல்வதாய் பாடி, நம்மைப் போன்றவர்களுக்கு இறைவனின் பாடல்களை எத்தனை சிரத்தையுடன் எப்படி அவனிடமே ஊன்றிப்போய் பாட வேண்டும் என்று சின்னப்பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பது போல் எளிதாக விளக்குகிறார். நாளைக்கு இறைவனின் திருப்பாடல்களை பாடுகையில் எப்படி இனிக்கிறது என்று சொல்லுவார். அது என்ன பாட்டுன்னு யூகியுங்களேன். நிறைய பாடல்கள் இருக்கிறதே.
தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே.
தேன்படிக்கும் அமுதாம் உன்திருப்பாட்டைத் தினந்தோறும்
பரமேஸ்வரனின் புகழ்ப்பாடும் பாட்டெல்லாம் பொதுப்பாட்டே. புதுப்பாட்டே என்று முன்னர் பார்த்தோம். அவை திருப்பாட்டும் அல்லவா? இங்கு திரு என்பதற்கு புனிதமான என்று அர்த்தம் கொள்வோம். அவனைப் பாடும் பாட்டுகள் எத்தகையவை? பொதுவாகவே, ஒரு மனிதரைக் குறித்த பாட்டைவிடவும் இறையின் மீது பாடப்படும் பாடல்களுக்கு சுவை அதிகம். இந்த ஒப்பீடே தவறு என்று நீங்கள் சண்டைக்கு வரலாம். ஆனாலும், வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள உதவும் என்பதால்.
'என் தலைவா, நீ இருக்க எனக்கு என்ன கவலை? என் மன்னவா, உன்னை இந்த நாடே போற்றுதே!' என்று இளையத் தளபதி விஜயைக் குறித்து பாடலாம். அப்படி பாடல்கள் வந்தும் உள்ளன. இவர் தமிழ்சினிமாவின் இளையதளபதி. இன்னொரு இளைய தளபதி இருக்கிறான். அவனே அண்டசராசரங்களுக்கும் உண்மையான இளைய தளபதி. வேறு யார்? என்றும் இளையவனான தேவசேனாதிபதியான முருகனே. ஒருவர் மேல் பாடப்படும் பாடலை ஒரு வரிகூட மாற்றாமல் மற்றவர்க்கும் பாடமுடியும். மேற்சொன்ன உதாரணப் பாடலையே எடுத்துக்கொள்ளுங்கள். அது விஜயின் அடுத்த படத்தில் அதிரடி எண்ட்ரி பாடலாக இருக்கலாம். அல்லது, கோயிலில் முருகனை நினைத்து இட்டுக்கட்டியும் பாடலாம். இல்லையா? ஆனால், எது தித்திக்கும்? பக்தியுடன் பாடப்படும் கந்தனைக்குறித்த பாடலே தித்திக்கும் என்ற முடிவுக்கு வர சிந்திக்கவும் வேண்டுமா? ஏன் என்ற கேள்வியும் வருகிறதல்லவா? காரணம் ஒன்றுமில்லை. இறைவனின் திருநாமங்களையும், அவன் புகழையும் பாடும்போது அவனின் அருளையும் இயல்பிலேயே அப்பாடல் பெற்றுவிடுகிறது. சுருதிச் சுத்தமாக பாடவேண்டுமென்பது கூட இல்லை. பஜனைக் கோஷ்டிகளை கேட்டிருக்கிறீர்கள் தானே? ஆளாளுக்கு ஒரு கட்டையில் பாடிக்கொண்டிருப்பார்கள். இருந்தும் காதுக்கு இனிமையாகத்தான் இருக்கும். அதுவே இறைவனின் கடாக்ஷம். பாடல் சுத்தமான சங்கத்தமிழில் இருக்கவேண்டுமென்பதும் இல்லை. 'பழம் நீயப்பா', 'திருச்செந்தூரின் கடலோரத்தில்' ஆரம்பித்து அண்மையில் வந்த 'அன்பென்ற மழையிலே' வரை இதைக்காண முடியும். விஷயத்தை விட்டு ரொம்ப தூரம் போய்விட்டோமென்று நினைக்கிறேன்.
அம்மாதிரி தினந்தோறும் தேனினும் இனிய அமுதம் போன்ற உன் புகழ்போற்றும் பாடல்களைப் பாடும்போது..
நான்படிக்கும் போதென்னை நானறியேன்
நான் பாடும்போது என்னையே பக்தியில் மறந்து எனக்கே நான் யார் என்று அறியாத ஆனந்த நிலையில் மூழ்கிவிடுகிறேன்.
நாஒன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும்
நா என்றால் நாக்கு. ஒலி வருவது நாக்கிலிருந்துதான். ஆனால் என் நாக்கு ஒன்று மட்டுமா உன்னைப் பாடுகிறது? இல்லை என் ஊனின் (உடல்) ஒவ்வொரு அணுவும் உன் புகழ்பாடுகிறது. என் உள்ளம் உன்னையே நினைத்து நாவோடும் உடலோடும் சேர்ந்து உன் திருப்பாட்டை படிக்கிறது.
உயிர்க்குயிரும் தான்படிக்கும்
உயிருக்குயிர் என்பது என்ன? நம்ம ஆன்மாவே. அது இல்லாமல் உயிர் என்பது இல்லை. நமது உயிருக்கு ஆதாரமானது ஆன்மா. நம்மின் உள்ளுக்குள்ளே இருந்து நம்மை ஆட்டிவைப்பது அதுவே.
மேற்சொன்னவற்றோடு, என் ஆத்மாவும் சேர்ந்து உன் புகழ் பாடுகிறது.
அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே
உடல், உயிர், ஆவி கொண்டு நான் அடையும் இந்த பேரினிய அனுபவம் நீ காணமாட்டாயோ? கண்டருள மாட்டாயோ? தனிப் பெருந்தகையே. ஈடு இணையில்லாத கருணையை உடையவனே.
----
அம்மாதிரி தினந்தோறும் தேனினும் இனிய அமுதம் போன்ற உன் புகழ்போற்றும் பாடல்களைப் பாடும்போது..
என் உள்ளம் உன்னையே நினைத்து நாவோடும் உடலோடும் சேர்ந்து உன் திருப்பாட்டை படிக்கிறது.
மேற்சொன்னவற்றோடு, என் ஆத்மாவும் சேர்ந்து உன் புகழ் பாடுகிறது.
நான் அடையும் இந்த பேரினிய அனுபவம் நீ காணமாட்டாயோ? தனிப் பெருந்தகையே. ஈடு இணையில்லாத கருணையை உடையவனே.
----
இப்பாடல் மூலம் வள்ளலார் தான் அனுபவிப்பதை இறைவனுக்கு சொல்வதாய் பாடி, நம்மைப் போன்றவர்களுக்கு இறைவனின் பாடல்களை எத்தனை சிரத்தையுடன் எப்படி அவனிடமே ஊன்றிப்போய் பாட வேண்டும் என்று சின்னப்பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பது போல் எளிதாக விளக்குகிறார். நாளைக்கு இறைவனின் திருப்பாடல்களை பாடுகையில் எப்படி இனிக்கிறது என்று சொல்லுவார். அது என்ன பாட்டுன்னு யூகியுங்களேன். நிறைய பாடல்கள் இருக்கிறதே.
Monday, January 30, 2006
6. பித்தரென்று பெயர்படைத்தார்க்கு! - சமயச்சண்டைகள்
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிறசமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயரொவ் வாதோ
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
சிற்சபையில் என்கணவர் செய்யும் ஒரு ஞானத்
திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி
-இராமலிங்க அடிகளார்
சைவம் தவிர்த்து மனிதர்களுக்கு இன்னும் ஆறு முக்கிய மதங்கள் இருக்கின்றன. அவை...
வைணவம் - மாயவனான திருமாலைப் பரம்பொருளாய் வழிபடுவது.
கௌமாரம் - கந்தக் கடவுளை பரம்பொருளாய் கொண்டது.
சாக்தம் - சக்தியை வழிபடுவது
காணபத்யம் - கணங்களுக்கெல்லாம் அதிபதியான பிள்ளையாரை பிரதானமாய்க் கொண்டது.
சௌரம் - சூரியனை வழிபடுவது.
இவற்றையும் மசாலாவாய் இன்னும் சில schools of thoughts-களையும் தூவி கலந்த அவியலே தற்காலத்தில் நமக்குப் பரிச்சயமான இந்துமதம். இதில் சைவர்களை பொருத்தவரை ஆதிபரம்பொருள் சிவனே. அவனுக்கு பின்னரே மற்ற தெய்வங்கள். வைணவருக்கு நேரெதிர் கொள்கைகள். இந்த சமயச் சண்டையின் போது நடந்தது Spanish Inquisitionக்கு போட்டியாக இருந்திருக்கும் என்பது என் கற்பனை. ஏனென்றால் இருசாராரும் தம் கருத்துகளை மாற்றிக்கொள்ள, அல்ல மற்ற கருத்துகளை பொருத்துக்கொள்ளக்கூட முடியாத மனநிலையில் இருந்திருக்கின்றனர். இந்த சர்ச்சைக்குள் நாம் போகவேண்டாம். இது அதற்கான இடமன்று. மேலும், சிக்கலான ஒருவிஷயத்தை மிக அழகாய், நிதானமாய் கையாள்கிறார் அடிகளார்.
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
நமது மனங்களில் மட்டுமன்றி அண்டசராசரங்களிலும் அங்கிங்கெனாதபடி ஆனந்த தாண்டவம் புரிகிறான் அந்த நாயகன். ஆனந்தத் தாண்டவம் புரிவது என்ற உடனேயே அந்தத் தில்லையம்பலத்தில் ஆடுகின்றவன் தானே நினைவுக்கு வருகின்றான். நடராஜப்பெருமான் இல்லாத இடமேது? அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு...
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
சரி. அவன் சிவன் என்று சொல்லியாயிற்று. அதனால் மற்ற தெய்வங்கள் மட்டமானவர்களா? இல்லை அவனை விட உயர்ந்தவர்களா? இதெல்லாம் வெட்டிப்பேச்சு என்று சைவத்தின் பெருமைமட்டும் பாடும் அடியார்க்கு விளக்குகிறார் வள்ளலார். மற்ற சமயப் பெயர்கள் நம் நாயகனுக்கு பொருந்தாது என்றும் நினைப்பாயோ? அப்படி நீ நினைப்பின், சிவன் எங்கும் எதிலும் இருக்கிறான் என்ற நம்பிக்கை உனக்கில்லையென்று அர்த்தம். அது சிவனுக்கே செய்யும் அவமரியாதையல்லவா?
மற்றச் சமயக் கடவுள்களின் பெயர்கள் நம் நாயகனுக்கு பொருந்துமோ என்று அறியாமையால் கேட்கிறாய்...
பிறசமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
நமக்கென்று சமயம் ஒன்றிருந்தாலும், நம் சமயத்தை பின்பற்றாத மற்றவரின் கடவுளின் பெயரும் நமது கடவுளின் பெயரே என்று நினைக்க ஆரம்பிப்போமானால் மத மாத்சர்யங்கள் குறையத்தானே செய்யும். அது உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். முற்றிலுமாய் அதைப் புரிந்தவன் பரம்பொருளே. நமக்கு புரியக்கூடியதா இது? ஆனால் அடுத்தவருடைய தெய்வத்தையும் நம் தெய்வமாய் எண்ணி வணங்கவேண்டாம், துவேஷம் செய்யாமல் இருந்தாலே போதுமே. இல்லையா?
அதையே, மற்ற சமயக் கடவுளர்களின் பெயரும் நம் நாயகனின் பெயர்தான் என்று உணர்ந்துகொள்வாய் என்கிறார்.
பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயரொவ் வாதோ
திருநாவுக்கரசர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நான்கு முக்கிய சைவ நாயன்மார்களுக்கிடையில் சுந்தரருக்கு முக்கிய இடமுண்டு. மற்ற மூவருக்கும் சிவபெருமான் தெய்வம் என்ற நிலையிலேயே இருந்தார். ஆனால், சுந்தருக்கு? "பித்தா!" என்று சுந்தரர் இழிவாய் அழைத்தும் எம்பெருமானுக்கு கோபம் வரவில்லையே! ஒரு நண்பனைப் போலல்லாவா சுந்தரருடன் கலாட்டா செய்து விளையாடினார். அதுவே சுந்தரரின் சிறப்பு.
வள்ளலாரும் நகைச்சுவை பொங்கக் கூறுகிறார். ஒரு தெய்வத்தை 'ஆதி பரம்பொருளே, என் தாயே, தந்தையே, ஆட்கொண்டானே, குருவே' என்றெல்லாம் பெயரிட்டு கைகூப்பி, சிரந்தாழ்த்தி வணங்குவோம். ஆனால், நம் சிவனையோ ஒரு பித்தன் அதாவது வெறும் பைத்தியக்காரன், புத்தி பேதலித்தவன் என்றளவில் புகழ்ந்தாகிவிட்டது! அத்தகைய ஈனமான பெயரையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட கருணைக் கடலல்லவா அவன்? பித்தன் என்றே அழைத்துமுடித்த பின், வேறெந்தப் பெயர்தான் இன்னும் மோசமாக இருந்துவிட முடியும்? மேலும், இந்த இழிசொல்லையே பெயராய், பக்தியாய் ஒப்புக்கொண்டவனுக்கு ஏனைய தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கசக்கவா போகிறது? அது அறியாமற்போய் பிற தெய்வப்பெயர்கள் சிவனுக்கு ஒவ்வாது என்று பிதற்றலாமோ?
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் அவர்பெயரே
அவ்வாறு வேற்று மத தேவர், அசுர, தெய்வப் பெயர்கள் மட்டுமின்றி சாதாரண மனிதர்களாகிய உன் பெயரும் என் பெயரும்கூட அவனுக்கு பொருந்தாமல் போகுமோ? எல்லாமே அவன் பெயர்கள் தான்.
எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
மனிதன், தேவர், முனிவர், கடவுளர்கள் என்று மட்டும் ஏன் பார்க்கிறாய்? எல்லா மிருகங்களின், இவ்வுலகில் வாழும் செடி, கொடி, புழு, பூச்சி என அனைத்து ஜீவராசிகளின் பெயர்களும் அவன் பெயரே!
இதனை யார் உணர்ந்துகொள்வார்கள்?
சிற்சபையில் என்கணவர் செய்யும் ஒரு ஞானத்திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி
யாரொருவர், அண்டசராசரங்களிலும் என் கணவர் (இதில் பதி = அரசன்/துணைவன் என்றும் கொள்ளலாம்) நடத்துகின்ற தெய்வீக மாய நடனத்தை, அதிலடங்கியிருக்கும் பரமானந்தத்தை கண்டோரோ, அவன் அருளால் அதை ஆத்மார்த்தமாய் உணர்ந்தோரோ மட்டுமே அறிவர்.
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிறசமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயரொவ் வாதோ
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
சிற்சபையில் என்கணவர் செய்யும் ஒரு ஞானத்
திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி
-இராமலிங்க அடிகளார்
சைவம் தவிர்த்து மனிதர்களுக்கு இன்னும் ஆறு முக்கிய மதங்கள் இருக்கின்றன. அவை...
வைணவம் - மாயவனான திருமாலைப் பரம்பொருளாய் வழிபடுவது.
கௌமாரம் - கந்தக் கடவுளை பரம்பொருளாய் கொண்டது.
சாக்தம் - சக்தியை வழிபடுவது
காணபத்யம் - கணங்களுக்கெல்லாம் அதிபதியான பிள்ளையாரை பிரதானமாய்க் கொண்டது.
சௌரம் - சூரியனை வழிபடுவது.
இவற்றையும் மசாலாவாய் இன்னும் சில schools of thoughts-களையும் தூவி கலந்த அவியலே தற்காலத்தில் நமக்குப் பரிச்சயமான இந்துமதம். இதில் சைவர்களை பொருத்தவரை ஆதிபரம்பொருள் சிவனே. அவனுக்கு பின்னரே மற்ற தெய்வங்கள். வைணவருக்கு நேரெதிர் கொள்கைகள். இந்த சமயச் சண்டையின் போது நடந்தது Spanish Inquisitionக்கு போட்டியாக இருந்திருக்கும் என்பது என் கற்பனை. ஏனென்றால் இருசாராரும் தம் கருத்துகளை மாற்றிக்கொள்ள, அல்ல மற்ற கருத்துகளை பொருத்துக்கொள்ளக்கூட முடியாத மனநிலையில் இருந்திருக்கின்றனர். இந்த சர்ச்சைக்குள் நாம் போகவேண்டாம். இது அதற்கான இடமன்று. மேலும், சிக்கலான ஒருவிஷயத்தை மிக அழகாய், நிதானமாய் கையாள்கிறார் அடிகளார்.
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
நமது மனங்களில் மட்டுமன்றி அண்டசராசரங்களிலும் அங்கிங்கெனாதபடி ஆனந்த தாண்டவம் புரிகிறான் அந்த நாயகன். ஆனந்தத் தாண்டவம் புரிவது என்ற உடனேயே அந்தத் தில்லையம்பலத்தில் ஆடுகின்றவன் தானே நினைவுக்கு வருகின்றான். நடராஜப்பெருமான் இல்லாத இடமேது? அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு...
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
சரி. அவன் சிவன் என்று சொல்லியாயிற்று. அதனால் மற்ற தெய்வங்கள் மட்டமானவர்களா? இல்லை அவனை விட உயர்ந்தவர்களா? இதெல்லாம் வெட்டிப்பேச்சு என்று சைவத்தின் பெருமைமட்டும் பாடும் அடியார்க்கு விளக்குகிறார் வள்ளலார். மற்ற சமயப் பெயர்கள் நம் நாயகனுக்கு பொருந்தாது என்றும் நினைப்பாயோ? அப்படி நீ நினைப்பின், சிவன் எங்கும் எதிலும் இருக்கிறான் என்ற நம்பிக்கை உனக்கில்லையென்று அர்த்தம். அது சிவனுக்கே செய்யும் அவமரியாதையல்லவா?
மற்றச் சமயக் கடவுள்களின் பெயர்கள் நம் நாயகனுக்கு பொருந்துமோ என்று அறியாமையால் கேட்கிறாய்...
பிறசமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
நமக்கென்று சமயம் ஒன்றிருந்தாலும், நம் சமயத்தை பின்பற்றாத மற்றவரின் கடவுளின் பெயரும் நமது கடவுளின் பெயரே என்று நினைக்க ஆரம்பிப்போமானால் மத மாத்சர்யங்கள் குறையத்தானே செய்யும். அது உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். முற்றிலுமாய் அதைப் புரிந்தவன் பரம்பொருளே. நமக்கு புரியக்கூடியதா இது? ஆனால் அடுத்தவருடைய தெய்வத்தையும் நம் தெய்வமாய் எண்ணி வணங்கவேண்டாம், துவேஷம் செய்யாமல் இருந்தாலே போதுமே. இல்லையா?
அதையே, மற்ற சமயக் கடவுளர்களின் பெயரும் நம் நாயகனின் பெயர்தான் என்று உணர்ந்துகொள்வாய் என்கிறார்.
பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயரொவ் வாதோ
திருநாவுக்கரசர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நான்கு முக்கிய சைவ நாயன்மார்களுக்கிடையில் சுந்தரருக்கு முக்கிய இடமுண்டு. மற்ற மூவருக்கும் சிவபெருமான் தெய்வம் என்ற நிலையிலேயே இருந்தார். ஆனால், சுந்தருக்கு? "பித்தா!" என்று சுந்தரர் இழிவாய் அழைத்தும் எம்பெருமானுக்கு கோபம் வரவில்லையே! ஒரு நண்பனைப் போலல்லாவா சுந்தரருடன் கலாட்டா செய்து விளையாடினார். அதுவே சுந்தரரின் சிறப்பு.
வள்ளலாரும் நகைச்சுவை பொங்கக் கூறுகிறார். ஒரு தெய்வத்தை 'ஆதி பரம்பொருளே, என் தாயே, தந்தையே, ஆட்கொண்டானே, குருவே' என்றெல்லாம் பெயரிட்டு கைகூப்பி, சிரந்தாழ்த்தி வணங்குவோம். ஆனால், நம் சிவனையோ ஒரு பித்தன் அதாவது வெறும் பைத்தியக்காரன், புத்தி பேதலித்தவன் என்றளவில் புகழ்ந்தாகிவிட்டது! அத்தகைய ஈனமான பெயரையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட கருணைக் கடலல்லவா அவன்? பித்தன் என்றே அழைத்துமுடித்த பின், வேறெந்தப் பெயர்தான் இன்னும் மோசமாக இருந்துவிட முடியும்? மேலும், இந்த இழிசொல்லையே பெயராய், பக்தியாய் ஒப்புக்கொண்டவனுக்கு ஏனைய தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கசக்கவா போகிறது? அது அறியாமற்போய் பிற தெய்வப்பெயர்கள் சிவனுக்கு ஒவ்வாது என்று பிதற்றலாமோ?
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் அவர்பெயரே
அவ்வாறு வேற்று மத தேவர், அசுர, தெய்வப் பெயர்கள் மட்டுமின்றி சாதாரண மனிதர்களாகிய உன் பெயரும் என் பெயரும்கூட அவனுக்கு பொருந்தாமல் போகுமோ? எல்லாமே அவன் பெயர்கள் தான்.
எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
மனிதன், தேவர், முனிவர், கடவுளர்கள் என்று மட்டும் ஏன் பார்க்கிறாய்? எல்லா மிருகங்களின், இவ்வுலகில் வாழும் செடி, கொடி, புழு, பூச்சி என அனைத்து ஜீவராசிகளின் பெயர்களும் அவன் பெயரே!
இதனை யார் உணர்ந்துகொள்வார்கள்?
சிற்சபையில் என்கணவர் செய்யும் ஒரு ஞானத்திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி
யாரொருவர், அண்டசராசரங்களிலும் என் கணவர் (இதில் பதி = அரசன்/துணைவன் என்றும் கொள்ளலாம்) நடத்துகின்ற தெய்வீக மாய நடனத்தை, அதிலடங்கியிருக்கும் பரமானந்தத்தை கண்டோரோ, அவன் அருளால் அதை ஆத்மார்த்தமாய் உணர்ந்தோரோ மட்டுமே அறிவர்.
5. நமச்சிவாயத்தை நான்மறவேனே!
பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே!
-இராமலிங்க அடிகளார்
பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
தந்தை என்ற சொந்தத்தை விட தாய்க்கு இன்னும் ஒருபடி அதிக இடமுண்டு நம் வாழ்வில். ஏனென்றால் சுமந்து பெற்று, சீராட்டி வளர்த்தவள் அவள். அதனாலேயே, தன் தாயை அவமதித்தவன், அவளுக்கு துரோகம் செய்தவன் என்று தீயவை செய்து தாய்ச் சாபம் பெற்றவன் இவ்வுலகில் நல்வாழ்க்கையும், மறுவுலகில் முக்தியும் அடையவே முடியாது என்று நம் பெரியோர்கள் மிகக் கடுமையான தண்டனையைப் பற்றி எச்சரித்திருக்கிறார்கள் (மகவு என்றால் குழந்தை பொருள் வரும். எனக்கென்னமோ மகன் என்றே அர்த்தம் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் பெற்றோருக்கு ஐம்பது வயது ஆண்மகனும் இன்னமும் குழந்தைதானே?). ஆனால், இம்மாதிரி தண்டனைகளுக்கு அஞ்சாமல் கூட தாயை மறப்பானெனினும்...
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
முன்சொன்னதாவது நடக்கக்கூடிய ஒன்றானாலும், பெற்ற பிள்ளையை என்றாவது தாய் மறப்பாளா? மறக்கத்தான் முடியுமா? எப்பேர்ப்பட்ட கொடிய குணமுடைய பெண்மணிக்கும் தான் ஈன்ற பிள்ளையெனும் பொழுது, கருணை வரத்தான் செய்யும். அதனாலேயே முன்னால் கூறிய உதாரணம் நடப்பதும் அரிது. ஏனென்றால் ஒரு தாய் தன் பிள்ளையை, அவன் எவ்வளவு கொடுரமானவனாக இருந்தாலும், தனக்கு துன்பத்தையே இழைத்தாலும் சபிக்காமல் மன்னிக்கவே விரும்புவாள். ஆனாலும் இந்த மிகைப்படுத்தப்பட்ட உதாரணத்தை அடிகளார் பயன்படுத்துகிறார்.
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
இந்த உடலும் உயிரும் சக்தியும் சிவமும் மாதிரி. திருவிளையாடல்ல சிவனும் பார்வதியும் நல்லா சண்டையெல்லாம் போட்டு, சிவாஜி தாம்தூம் இரத்தச் சிவப்பு கண்களோட ஆட்டமும் போட்டு; பாம்பு, நெருப்பு ராக்கெட்லாம் விட்டு.. கடசியா சமாதானமாப் போவாங்களே. 'சக்தியில்லையேல் சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியில்லை'. அந்த மாதிரி இந்த நம் உயிராகிய ஆத்மா என்பது உடலாகிய மெய்யிலிருந்து பிரிந்து இந்த மண்ணுலகில் வாழமுடியாது. அதேபோல், மெய்யாகிய உடலும் உயிராகிய ஆத்மா இல்லாவிட்டால் வெறும் பிணம் தான். இப்படி இரண்டும் ஒருவர்கொருவர் இல்லாமல் இருக்க முடியாது. அப்போது இரண்டில் ஒன்று மற்றொன்றை மறப்பது என்பது சாத்தியமா? மறந்தாலும், இழப்பு இருவருக்கும் தானே.
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
ஒரு கலையைக் கற்பது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்? ஜாலியா கத்துகிட்டா பத்து பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து பயின்று வந்தால் சாதாரண கலைஞனாகலாம். அவங்களால எளிதா மறந்துட முடியும். நானே அதுக்கு நல்ல உதாரணம். :)
ஆனா அதிலேயே மூழ்கி, வழி தவறாமல் கடுமையாய் உழைத்தால் தான் ஒரு கலைஞனாகலாம். அத்தகைய ஒரு கலைஞன், உதாரணத்துக்கு எம்.எஸ் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோமே. ஐம்பது ஆண்டுகள் உயிரைக் கொடுத்து உழைத்துக் கற்ற கலையை திடிரென்று ஒரு நாள் மறக்க முடியுமா? மறக்க நினைத்தாலும் தான் முடியுமா? ஏனென்றால் நம் இரத்தத்திலேயே ஊறிவிட்டிருக்குமல்லவா? இதில் கலை என்பது சாஸ்திரம், அறிவியல் என்னவேனா வச்சுக்கலாம். ஆனாலும், அந்த மாதிரி பலவாண்டுகள் கற்ற கலையை ஒரு கலைஞன் மறந்தாலும்...
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நம் உடலில் நடக்கும் பல விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தலாம். ஆனால் மிகவும் conscious ஆக முயற்சி எடுத்து செய்யவேண்டும். மேலும், அவற்றை வீம்புக்காக தீவிரமாய் நிறுத்துவதால் பாதிப்புகளே உண்டாகும். மூச்சு, இதயத்துடிப்பு என்ற வரிசையில் கண் இமைப்பதும் வரும். நாம் நினைக்காமலேயே நம் கண்கள் தாமாகவே இமைகளை மூடி திறப்பதன் மூலம் காற்றிலுள்ள தூசு போன்றவை நம் கண்களை உறுத்தாமல் காத்துக்கொள்கிறது. இரண்டு நிமிடம் இமைக்காமல் இருக்க முயன்று பாருங்கள். உடனே கண்ணீர் வரும். அதுவும் தற்காப்பு முயற்சியே. ப்ளஷ் செய்வது போல நம் கண்ணீர் சுரப்பிகள் வேலை செய்வதன் பயனே கண்ணீர். இது மாதிரி, கண்கள் இமைப்பது என்பது அக்கண்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒன்று. அதைச் செய்ய கண்கள் மறந்தாலும்..
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
முனிவர்கள், கடவுளர்கள், தேவர்கள் போன்றவர்களை நற்றவத்தவர் என்கிறோம். ஏன் கடவுளர்கள்? பிரம்மா முதலிய பிற கடவுள்களும், இந்திராதி தேவர்களும் கூட பரம்பொருளை நோக்கி பல தவங்கள் செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அம்மாதிரி பெரும் தவவலிமை உடையோரின் நெஞ்சத்தின், ஆத்மாவின் உள்ளே ஓங்கிஉயர நின்று ஒளிதரும்..
நமச்சிவாயத்தை நான்மறவேனே!
மேற்கூறிய கொடுரமான, மிகைப்படுத்தப்பட்ட செயல்கள் எல்லாம் இயற்கையாய் நடந்தாலும், நமச்சிவாய மந்திரத்தை நான் என்றென்றும் மறவாமல் ஜபித்துக் கொண்டிருப்பேனே!
---
என்னடா ஆரமிச்சாலும் ஆரமிச்சான், வரிசையா போட்டுத்தாக்கறானேன்னு நினைக்கவேணாம். இன்னும் ஒரு வாரத்துக்கு வேலை கம்மி. அதான்... அதுக்கப்புறம் எல்லாம் சரியாயிடும். பயப்படாதீங்க.
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே!
-இராமலிங்க அடிகளார்
பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
தந்தை என்ற சொந்தத்தை விட தாய்க்கு இன்னும் ஒருபடி அதிக இடமுண்டு நம் வாழ்வில். ஏனென்றால் சுமந்து பெற்று, சீராட்டி வளர்த்தவள் அவள். அதனாலேயே, தன் தாயை அவமதித்தவன், அவளுக்கு துரோகம் செய்தவன் என்று தீயவை செய்து தாய்ச் சாபம் பெற்றவன் இவ்வுலகில் நல்வாழ்க்கையும், மறுவுலகில் முக்தியும் அடையவே முடியாது என்று நம் பெரியோர்கள் மிகக் கடுமையான தண்டனையைப் பற்றி எச்சரித்திருக்கிறார்கள் (மகவு என்றால் குழந்தை பொருள் வரும். எனக்கென்னமோ மகன் என்றே அர்த்தம் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் பெற்றோருக்கு ஐம்பது வயது ஆண்மகனும் இன்னமும் குழந்தைதானே?). ஆனால், இம்மாதிரி தண்டனைகளுக்கு அஞ்சாமல் கூட தாயை மறப்பானெனினும்...
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
முன்சொன்னதாவது நடக்கக்கூடிய ஒன்றானாலும், பெற்ற பிள்ளையை என்றாவது தாய் மறப்பாளா? மறக்கத்தான் முடியுமா? எப்பேர்ப்பட்ட கொடிய குணமுடைய பெண்மணிக்கும் தான் ஈன்ற பிள்ளையெனும் பொழுது, கருணை வரத்தான் செய்யும். அதனாலேயே முன்னால் கூறிய உதாரணம் நடப்பதும் அரிது. ஏனென்றால் ஒரு தாய் தன் பிள்ளையை, அவன் எவ்வளவு கொடுரமானவனாக இருந்தாலும், தனக்கு துன்பத்தையே இழைத்தாலும் சபிக்காமல் மன்னிக்கவே விரும்புவாள். ஆனாலும் இந்த மிகைப்படுத்தப்பட்ட உதாரணத்தை அடிகளார் பயன்படுத்துகிறார்.
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
இந்த உடலும் உயிரும் சக்தியும் சிவமும் மாதிரி. திருவிளையாடல்ல சிவனும் பார்வதியும் நல்லா சண்டையெல்லாம் போட்டு, சிவாஜி தாம்தூம் இரத்தச் சிவப்பு கண்களோட ஆட்டமும் போட்டு; பாம்பு, நெருப்பு ராக்கெட்லாம் விட்டு.. கடசியா சமாதானமாப் போவாங்களே. 'சக்தியில்லையேல் சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியில்லை'. அந்த மாதிரி இந்த நம் உயிராகிய ஆத்மா என்பது உடலாகிய மெய்யிலிருந்து பிரிந்து இந்த மண்ணுலகில் வாழமுடியாது. அதேபோல், மெய்யாகிய உடலும் உயிராகிய ஆத்மா இல்லாவிட்டால் வெறும் பிணம் தான். இப்படி இரண்டும் ஒருவர்கொருவர் இல்லாமல் இருக்க முடியாது. அப்போது இரண்டில் ஒன்று மற்றொன்றை மறப்பது என்பது சாத்தியமா? மறந்தாலும், இழப்பு இருவருக்கும் தானே.
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
ஒரு கலையைக் கற்பது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்? ஜாலியா கத்துகிட்டா பத்து பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து பயின்று வந்தால் சாதாரண கலைஞனாகலாம். அவங்களால எளிதா மறந்துட முடியும். நானே அதுக்கு நல்ல உதாரணம். :)
ஆனா அதிலேயே மூழ்கி, வழி தவறாமல் கடுமையாய் உழைத்தால் தான் ஒரு கலைஞனாகலாம். அத்தகைய ஒரு கலைஞன், உதாரணத்துக்கு எம்.எஸ் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோமே. ஐம்பது ஆண்டுகள் உயிரைக் கொடுத்து உழைத்துக் கற்ற கலையை திடிரென்று ஒரு நாள் மறக்க முடியுமா? மறக்க நினைத்தாலும் தான் முடியுமா? ஏனென்றால் நம் இரத்தத்திலேயே ஊறிவிட்டிருக்குமல்லவா? இதில் கலை என்பது சாஸ்திரம், அறிவியல் என்னவேனா வச்சுக்கலாம். ஆனாலும், அந்த மாதிரி பலவாண்டுகள் கற்ற கலையை ஒரு கலைஞன் மறந்தாலும்...
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நம் உடலில் நடக்கும் பல விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தலாம். ஆனால் மிகவும் conscious ஆக முயற்சி எடுத்து செய்யவேண்டும். மேலும், அவற்றை வீம்புக்காக தீவிரமாய் நிறுத்துவதால் பாதிப்புகளே உண்டாகும். மூச்சு, இதயத்துடிப்பு என்ற வரிசையில் கண் இமைப்பதும் வரும். நாம் நினைக்காமலேயே நம் கண்கள் தாமாகவே இமைகளை மூடி திறப்பதன் மூலம் காற்றிலுள்ள தூசு போன்றவை நம் கண்களை உறுத்தாமல் காத்துக்கொள்கிறது. இரண்டு நிமிடம் இமைக்காமல் இருக்க முயன்று பாருங்கள். உடனே கண்ணீர் வரும். அதுவும் தற்காப்பு முயற்சியே. ப்ளஷ் செய்வது போல நம் கண்ணீர் சுரப்பிகள் வேலை செய்வதன் பயனே கண்ணீர். இது மாதிரி, கண்கள் இமைப்பது என்பது அக்கண்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒன்று. அதைச் செய்ய கண்கள் மறந்தாலும்..
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
முனிவர்கள், கடவுளர்கள், தேவர்கள் போன்றவர்களை நற்றவத்தவர் என்கிறோம். ஏன் கடவுளர்கள்? பிரம்மா முதலிய பிற கடவுள்களும், இந்திராதி தேவர்களும் கூட பரம்பொருளை நோக்கி பல தவங்கள் செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அம்மாதிரி பெரும் தவவலிமை உடையோரின் நெஞ்சத்தின், ஆத்மாவின் உள்ளே ஓங்கிஉயர நின்று ஒளிதரும்..
நமச்சிவாயத்தை நான்மறவேனே!
மேற்கூறிய கொடுரமான, மிகைப்படுத்தப்பட்ட செயல்கள் எல்லாம் இயற்கையாய் நடந்தாலும், நமச்சிவாய மந்திரத்தை நான் என்றென்றும் மறவாமல் ஜபித்துக் கொண்டிருப்பேனே!
---
என்னடா ஆரமிச்சாலும் ஆரமிச்சான், வரிசையா போட்டுத்தாக்கறானேன்னு நினைக்கவேணாம். இன்னும் ஒரு வாரத்துக்கு வேலை கம்மி. அதான்... அதுக்கப்புறம் எல்லாம் சரியாயிடும். பயப்படாதீங்க.
4. பிறத்தமை தீங்குசொல்லாத் தெளிவும்!
தமிழ்மணத்தில் நிலவும் பிரச்சனைக்கும் வள்ளலார் அழகா இந்தப் பாட்டில் ஒரு வரி சொல்லிருக்கார்.
ஆகவே எனக்கு மிகவும் திருவருட்பாக்களில் ஒன்றை குமரனின் பதிவில் சொன்னது போல, அருமையான கருத்துகளை உள்ளடக்கிய இப்பாடலை வலையேற்றியிருக்கிறேன்.
பாடியது: விஜய் சிவா
கேட்க
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)
தீங்குசொல் லாத்தெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
கேட்டுப்பாருங்கள்.
---
கேட்பதில் சிக்கல் ஏதும் இருப்பின் [?].
----
என்னென்ன வேண்டும்
//ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத இயல்பும்//
ஒரு பொருளை எனக்கு தானமாக கொடுங்கள் என்று நான் யாதொருவரிடமும் போய் "ஈ" (யாசகமாக கொடு) என்று மன்றாடக்கூடிய நிலையும், அப்படிக் கேட்பதையே என் இயல்பாக கொள்ளாமையும்
//என் னிடம்ஒருவர்ஈ திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல் இடுகின்ற திறமும்//
என்னிடம் ஒருவர் வந்து ஒரு பொருளை தானமாக தந்துதவுங்கள் என்று கேட்கும்போது அவர் கேட்பதை மறுக்காமல், கேட்கும் பொருளை அளித்துதுதவ வேண்டும் என்று நிலைதவறாத, உறுதியான கொள்கையும்
//இறையாம் நீஎன்றும் எனைவிடா நிலையும்//
யாவர்க்கும் இறைவனான நீ என்னை மறவாமல், எந்நேரமும் என்னருகில் இருந்து அருளக் கூடிய உன்னத நிலையும்
//நான் என்றும்உள நினைவிடா நெறியும்//
நான் ஒரு நொடிகூட உள்ளத்தால் உன்னை மறவாமல், எந்நேரமும் உன்னையே சிந்தையில் வைத்து போற்றிப் பாடக் கூடிய பக்தி நெறியும்
//அயலார் நிதிஒன்றும் நயவாத மனமும் //
அடுத்தவர்களின் பொருள் மீது பேராசைப் பட்டு, அதனை கவர வேண்டாம். அதனை திருட வேண்டும் என்ற எண்ணம் கூட வாராத நல்ல மனமும்
//மெய்ந் நிலைநின்று நெகிழாத திடமும்//
மெய்யானாதான உனை அடையும் வழியிலிருந்து என்றென்றும் பிறழாமல், மனம் தளராமல் இருக்கக்கூடிய உறுதியும்
//உலகில்சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)தீங்குசொல் லாத்தெளிவும்//
அடுத்தவரை சீ, பேய், நாய் என்று இகழ்சொற்களால் தூற்றாமல் இருக்கக்கூடிய தெளிவான, அன்பான சிந்தனையும்இதில் பிறத்தமை என்று அர்த்தம் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதென் கருத்து.ஒருவரின் பிறப்பைக் கொண்டு அவரை வன்சொற்களால் இகழாத அன்பான சிந்தனையும்
//திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக் காளாக்குவாய்//
உறுதியாய் இவையெல்லாவற்றையும், அவற்றுடன் கூட முக்கியமாக சத்தியத்தையே என்றும் பேசும் தன்மையும், உடற்தூய்மையுடன் சேர்த்து மனத்தூய்மையும் எனக்கு அருளிச்செய்து, உன் அழகிய தெய்வீகத் திருவடிகளை அடையக் கூடிய தகுதியை உடையவனாக என்னை செய்வாய்!யார் இவையெல்லாம் தந்தருள வேண்டும்?
//தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே//
சென்னையிலிருக்கும் கந்தக்கோட்டத்தமெனும் போற்றப்படற்குரிய(வளர்) தலத்தில் அனைவரும் புகழ, என் தாயின் ஸ்தானத்தில் நிற்கும் கந்தவேளே!
//தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே!//
தனக்குள்ளேயே எல்லாமுமாய் நிற்கும் மணியே!உன்னையே நினைத்து, தம்முள் இழுத்து, நிறுத்தியிருப்போர்க்கு முடிவில்லாமல் அருளும் சைவ மணியே!ஆறுமுகத்தை உடைய என் தெய்வமணியே!
ஆகவே எனக்கு மிகவும் திருவருட்பாக்களில் ஒன்றை குமரனின் பதிவில் சொன்னது போல, அருமையான கருத்துகளை உள்ளடக்கிய இப்பாடலை வலையேற்றியிருக்கிறேன்.
பாடியது: விஜய் சிவா
கேட்க
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)
தீங்குசொல் லாத்தெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
கேட்டுப்பாருங்கள்.
---
கேட்பதில் சிக்கல் ஏதும் இருப்பின் [?].
----
என்னென்ன வேண்டும்
//ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத இயல்பும்//
ஒரு பொருளை எனக்கு தானமாக கொடுங்கள் என்று நான் யாதொருவரிடமும் போய் "ஈ" (யாசகமாக கொடு) என்று மன்றாடக்கூடிய நிலையும், அப்படிக் கேட்பதையே என் இயல்பாக கொள்ளாமையும்
//என் னிடம்ஒருவர்ஈ திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல் இடுகின்ற திறமும்//
என்னிடம் ஒருவர் வந்து ஒரு பொருளை தானமாக தந்துதவுங்கள் என்று கேட்கும்போது அவர் கேட்பதை மறுக்காமல், கேட்கும் பொருளை அளித்துதுதவ வேண்டும் என்று நிலைதவறாத, உறுதியான கொள்கையும்
//இறையாம் நீஎன்றும் எனைவிடா நிலையும்//
யாவர்க்கும் இறைவனான நீ என்னை மறவாமல், எந்நேரமும் என்னருகில் இருந்து அருளக் கூடிய உன்னத நிலையும்
//நான் என்றும்உள நினைவிடா நெறியும்//
நான் ஒரு நொடிகூட உள்ளத்தால் உன்னை மறவாமல், எந்நேரமும் உன்னையே சிந்தையில் வைத்து போற்றிப் பாடக் கூடிய பக்தி நெறியும்
//அயலார் நிதிஒன்றும் நயவாத மனமும் //
அடுத்தவர்களின் பொருள் மீது பேராசைப் பட்டு, அதனை கவர வேண்டாம். அதனை திருட வேண்டும் என்ற எண்ணம் கூட வாராத நல்ல மனமும்
//மெய்ந் நிலைநின்று நெகிழாத திடமும்//
மெய்யானாதான உனை அடையும் வழியிலிருந்து என்றென்றும் பிறழாமல், மனம் தளராமல் இருக்கக்கூடிய உறுதியும்
//உலகில்சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)தீங்குசொல் லாத்தெளிவும்//
அடுத்தவரை சீ, பேய், நாய் என்று இகழ்சொற்களால் தூற்றாமல் இருக்கக்கூடிய தெளிவான, அன்பான சிந்தனையும்இதில் பிறத்தமை என்று அர்த்தம் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதென் கருத்து.ஒருவரின் பிறப்பைக் கொண்டு அவரை வன்சொற்களால் இகழாத அன்பான சிந்தனையும்
//திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக் காளாக்குவாய்//
உறுதியாய் இவையெல்லாவற்றையும், அவற்றுடன் கூட முக்கியமாக சத்தியத்தையே என்றும் பேசும் தன்மையும், உடற்தூய்மையுடன் சேர்த்து மனத்தூய்மையும் எனக்கு அருளிச்செய்து, உன் அழகிய தெய்வீகத் திருவடிகளை அடையக் கூடிய தகுதியை உடையவனாக என்னை செய்வாய்!யார் இவையெல்லாம் தந்தருள வேண்டும்?
//தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே//
சென்னையிலிருக்கும் கந்தக்கோட்டத்தமெனும் போற்றப்படற்குரிய(வளர்) தலத்தில் அனைவரும் புகழ, என் தாயின் ஸ்தானத்தில் நிற்கும் கந்தவேளே!
//தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே!//
தனக்குள்ளேயே எல்லாமுமாய் நிற்கும் மணியே!உன்னையே நினைத்து, தம்முள் இழுத்து, நிறுத்தியிருப்போர்க்கு முடிவில்லாமல் அருளும் சைவ மணியே!ஆறுமுகத்தை உடைய என் தெய்வமணியே!
Subscribe to:
Posts (Atom)
