பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
டோ ரா வினையே னுழலத் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே! - 16
//வீரா! முதுசூர் பட வேல் எறியும் சூரா! சுரலோக துரந்தரனே!//
ஒரு விஷயத்தைப் பற்றி விளக்கிச் சொல்லவேண்டுமெனில் அருணகிரிக்கு அருவியெனத் தமிழ் வந்து கொட்டும். திருப்புகழ், அலங்காரம், அனுபூதி என்று எல்லாவற்றிலும் அருணகிரியின் மொழியாளுமை கொட்டிக்கிடக்கின்றது. ஆனால் அவரோ இங்கே வீரா என்று எவ்வித அலங்காரமும் அன்றி விட்டிருக்கிறார். அருணகிரிக்கு வார்த்தைத் தட்டுப்பாடா? ஆம். தட்டுப்பாடுதான். ஏன்? முருகனின் வீரம் எப்பேர்ப்பட்டது? வார்த்தைகளில் வடிக்க முடியாதது. வீரன் என்றால் முருகன். அவனை மிஞ்சிய வீரன் கிடையாது. அதன்காரணமாகவே இங்கே வீரா என்று தொடங்கி...
முது என்பது பழமையைக் குறிப்பது. சூரபத்மனை ஏன் முதுமையான சூரன் என்று குறிப்பிடவேண்டும்? சூரத்தனம் சூரபத்மனின் பிறவிகுணம். சூரத்தனத்தில் முதியவன் அவன். நூற்றியெட்டு யுகங்களாய் அனைத்து பூவுலகங்களையும் ஆட்சிசெய்தான். ஆனால் திருப்தி ஏற்படவில்லை. சுரர்களையும் (தேவர்கள்) அடிமைப்படுத்தி அவர்களுடைய சுரலோகத்தை தன்வசப் படுத்தவேண்டும் என்று பேராசை கொண்டான். இந்த பேராசை என்னும் பிணி உண்டான நிலையில் அறிவுமழுங்கி இறைவனையே எதிர்க்க துணிந்தான். அதுவே அவனுடைய அழிவிற்கு வித்தானது. இப்படி பல்யுகங்கள் தன்னுடைய சூரத்தனத்தால் உலகங்களை ஆட்சிசெய்த சூரன் பேராசையின் பயனாய் தேவர்களை அடிமையாக்க, அவர்களைக் காக்கும் பொருட்டு அவதரித்து சூரன் மேல் வேல் தொடுத்து அவனுடைய ஆணவத்தை அழித்து தேவருலகத்தை காத்து அருளினான் கந்தன்.
//பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ?//
ஆசையில்லாமல் மனிதன் கிடையாது. அது அறியாதவரா அருணகிரி? ஆண்டவன் அநுபூதி வேண்டுவதும் ஆசைதானே? அது நியாயமான ஆசைதானே? அது எப்போது பேராசை ஆகிறது?
சிவலோக ப்ராப்திக்கு நாம் செய்யவேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கிறது என்கின்றன வேதங்களும் அறநெறி நூல்களும். தர்மநெறிகளின் படி வாழ்க்கை வாழ்வது, உடல் சுத்தம், பொய் புரட்டு அல்லாமல் இருப்பது, அடுத்தவரை ஏமாற்றாமல் இருப்பது, வறியவர்க்கு உதவுவது, உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தைத் தவிர நேர்மையற்ற வழிகளில் பணம் ஈட்டாமல் இருப்பது, அனைத்துயிரிலும் ஈஸ்வரனை காண்பது, பெற்றோர்களை மதிப்பது, முன்னோர்களுக்கு செய்யவேண்டியதைச் செய்வது, குருசொற்படி நடப்பது, மது மாது போன்றவற்றிற்கு அடிமையாகாமல் இருப்பது என்று நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்வியல் நெறிகள் எத்தனையோ. அவற்றில் முடிந்த அளவு பின்பற்றுவது அல்லது அப்படி இருப்பதற்குண்டான நேர்மையான முயற்சியாவது செய்வது; இவை இவ்வுலக பிறவிக்கென்றால் ஆத்ம சுத்திக்காக கொடுக்கப்பட்டிருக்கிற காரியங்கள் இன்னும் பல. இப்படி வாழமுற்படுவோர் இறைவனை அடையவேண்டும் என்று வேண்டுவது நியாயமான ஆசை.
அதுவே தர்மத்திற்கு நேரெதிர் கோணலாகவே வாழ்க்கை வாழ்ந்துவந்தாலும் நானும் முருகனடி சேரவேண்டும் என்றால் அது பேராசை. நான் என் நிலையை உயர்த்திக்கொள்ளவே மாட்டேன் ஆனாலும் என்னை வந்து இறைவன் ஆட்கொள்ளவேண்டும். அப்படியில்லாதவன் என்ன இறைவன் என்று கேட்கலாம். அதற்கு இறைவன் வந்து கண்முன்தோன்றி விடை சொல்லமாட்டான். சொல்லவேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை. கேட்க்ககூடிய அதிகாரமும் நமக்குக் கிடையாது. அப்படிப்பட்ட இறைவன் தேவையில்லை என்று கருதுவீர்களானால் தாராளமாக. இளமையும் உடல்வலியும் இருக்கும்வரை அனைத்துமே முறுக்குதான். ஆனால் 'விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன் கழுத்திற் சுருக்கிட்டிழுக்கின்ற' பொழுது முறுக்கு நமுத்துப்போயிருக்கும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்.
நம் கண்ணில் கோளாறை வைத்துக்கொண்டு அவனை நிந்திக்கும் நம்மீதும் அந்த "வைதாரையும் வாழவைக்கும்" கந்தன் கருணைகொண்டு நமக்கு வாழ்க்கையில் பல சம்பவங்களின் மூலம் பாடங்கள் சொல்லித்தருகிறான். சிலருக்கு முற்பிறவியின் பயனாய் காட்சியும் தருகிறான். ஏன், யாருக்கு, எதற்கு, எப்படியென்றெல்லாம் கேள்விகள் கேட்கலாம். அருணகிரிக்கு அருணை கோபுரத்தில் இறைவன் காட்சிகொடுத்தானே.. நாமும் ஈபில் கோபுரத்திலிருந்து குதிப்போமா என்று குதர்க்கம் பேசுவதற்கு முன் அடியார்களின் அந்த உயர்ந்த நிலையில் (டவரின் உச்சியில் அல்ல.. :)) ) நாம் இருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். எண்ணமும் செயலும் இறைவனையே குறித்து இருந்தால் தானே வருவான் கந்தன். அதுவரையில் எல்லாமே பேராசைதான்.
இங்கே அவனருளாலே அவன் தாள் வணங்கிய அருணகிரி சொல்வது: பேராசை எனும் பிணியில் பிணிபட்டு - உலக வாழ்வில் நமக்கு வரும் பேராசைகளைப் (தகுதியைத்தேட முற்படாமல் இறைவனை அடைய வேண்டும் என்பதும் சேர்த்து) பற்றிச் சொல்லி அப்பேர்ப்பட்ட பேராசைகளின் பிடியில் சிக்கிய எனக்கு அவற்றிலிருந்து விடுவித்துக்கொள்வது எப்படி என்று அறிந்துகொள்ள முடியாவண்ணம் என் அறிவு மழுங்கிப் போய் கிடக்கிறது. இந்த ஊசலில் சிக்கி நான் இன்னும் எத்தனை நாள் உழலுவது? வந்து அருளாயோ கந்தா....
--------------------------------------------------
முதுசூரனை அழித்து தேவருலகத்தை காத்த சூரா! வீரா! பேராசையின் பிடியில் சூரபத்மனைப் போல் சிக்கி, அதிலிருந்து விடுபட வழிதெரியாமல் உழலுவது இன்னும் எத்தனை நாளைக்குத்தானோ? வந்து காத்தருளாயோ?
Showing posts with label அநுபூதி. Show all posts
Showing posts with label அநுபூதி. Show all posts
Wednesday, September 12, 2007
Thursday, September 06, 2007
15. எட்டா எட்டு!
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே!
//பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ! எண்குண பஞ்சரனே//
தேவர்களின் தொழில் ஈசனின் கார்யத்தை முடிப்பது என்றால் அதைத் தடுப்பது அசுரரின் கார்யம். தேவர்களின் துயர்துடைக்கவே அவதரித்தவன் கந்தன். தங்களை அடிமையாக்கி சேவகம் புரியவைத்த சூரனையும் அவன் படையினரையும் வதைத்து தேவலோகத்தை மீட்டுத்தந்தவன் அந்த தேவசேனாதிபதி. ஆகவே தேவர்களின் நன்றிக்கு என்றென்றைக்கும் பாத்திரமானவன் குமரன். இதில் பொரு என்றால் போர். புங்கவர் என்பது தேவர்கள். போரின் போது தேவர்கள் தொழுது துணைக்கழைக்கும் பேராற்றல் பொருந்திய வீரனும்..
புவியும் பரவும் என்றால் அனைத்து புவனங்களும் தொழும் என்று பொருள். குருபுங்கவன் - குருவென்று அறியப்படுவர்களில் முதன்மையானவன். ஈசனுக்கே குருவானவனைத்தவிர இந்தத் தகுதியுடையவன் ஒருவனும் உளனோ? அந்தச் சுவாமிநாதனே குருபுங்கவன்.
இந்தக் குருபுங்கவன் எப்பேர்ப்பட்டவன்? அஷ்ட மாகுணங்கள் என்று மானிடர்தம் வாழ்வினிலே கடைபிடிக்கவேண்டிய உயர்ந்த குணங்களைக் சொல்வதுண்டு. ஆனால் இங்கே அருணகிரியார் குறிப்பிடுவது இறைவன் என்று அறியப்படுவதற்குண்டான எட்டு குணங்கள். அவை முற்றிலுமாக நாம் அறிந்துகொள்ள முடியாது. அவற்றை அறிந்துகொள்ள இறைவனின் அனுபூதி இன்றி முடியாது. எனினும் 1. உல்லாச நிராகுலன் 2. தணியா அதிமோகன், தயாபரன் 3. அவன் உண்மையான தன்மையை அவனருளால் அன்றி அறிய முடியாதவன் 4. சிந்தாகுலமானவை தீர்த்தருளவல்லவன் 5. நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள் சண்முகன்
6. சமரம் பொருதானவ நாசகன் என சிலவற்றை அருணகிரியின் பாடல்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
இதுதவிர யஜுர் வேதத்தில் நமகத்தில் அனைத்திற்கும் ஆதிபரம்பொருளான ஈசனின் குணங்களாய் பலவற்றைத் தொகுத்து மனிதர் அறியத் தரப்பட்டிருக்கிறது. (அதனாலேதான் வேத முழுவதும் கற்க முடியாதோர்கூட ருத்ராத்யாயம் செய்தாலே போதுமானது என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். அதுபற்றி பிறிதொரு சமயம்..)
இப்படி இறைவனின் குணங்களை வெவ்வெறு விதமாய் பெரியோர் தொகுத்திருக்கின்றனர். அனைத்தையும் அறிவதோ புரிந்துகொள்வதோ நம்மால் ஆகாத செயல். அதனால் எட்டுகுணங்கள் என்று அருணகிரி குறிப்பிடுபவை இறைவன் என்று அறியப்படுதற்கு அடிப்படை குணங்கள் என்று கொள்வோம். இப்படி சிறந்ததான எட்டுக்குணங்களை உடைய பஞ்சரன். பஞ்சரன் என்றால் உடல் அல்லது கூடு என்று பொருள். இந்த குணங்களை உடையவன் முருகன் என்று சொல்வது தவறு என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இறைவனின் குணங்களையும் விசேஷத்தையும் வரையறுக்க மூடர்களாகிய நாம் யார்? எட்டோ நூறோ, எண்களில்தான் எண்ணிவிட முடியுமா? அடியார்களின் தலைவன் அருணகிரி தாம் உணர்ந்து அறிந்ததை, நம் பொருட்டு எளிமைப்படுத்தி தந்திருப்பார் என்றே கொள்வோம்.
இறைக் குணங்களின் ஊற்று முருகன் என்று சொல்வதுதான் பொருத்தம். ஏனெனில் தெய்வங்களில் முதன்மையானவன் சர்வேஸ்வரன். சர்வம் சிவமயம் என்று சொல்லாமல் சிவமயம் என்றே அடியார்கள் கூறுவதன் தத்துவம் அனைத்துமான சர்வமும் சிவனுள் அடக்கம் என்பதனால்தான். அனைத்துயிரின் மேலும் ஈசனின் 'பால்நினைதூட்டும் தாயினும் சாலச்சிறந்த' கருணையின் வடிவே முருகன். ஆக அவனே அனைத்து இறை குணங்களுக்குமான ஊற்று.
இப்படி போர்சமயத்திற் தேவர்களால் தொழப்படுபவனும், அகிலபுவனங்களாலும் வணங்கப்படுபவனும், குருசிரேஷ்டனும், எட்டு இறைகுணங்களின் பிறப்பிடமானவனுமான அந்த ஞானபண்டிதனை......
//முருகன் குமரன் குகனென்று மொழிந்து உருகுஞ் செயல்தந்து உணர் வென்றருள்வாய்//
முருகன் என்ற சொல்லிற்கு மட்டும் ஒரு நாள் பொழுது பொருள் சொல்லிக்கொண்டே போகலாம். குமரன் குகன் என்றே உன் திருப்பெயர்களை மட்டுமே சதா சர்வகாலமும் வெறும் வாய்ப்பேச்சாய் மட்டும் அல்லாமல் எழுத்தாயும் எண்ணமாயும் கொண்டு (அதனாலேயே மொழிந்து) என் எலும்பெலாம் உருகும்படிச் செய்து மெய் வழியை அருளி எனக்கு அந்த பேரானந்த உணர்வை தந்தருளாயோ கந்தா என்று கேட்கிறார் அடிகளார்.
---------------
'தேவரும் மனிதரும் போற்றி வணங்கும் முருகனை, குருஸ்ரேஷ்டனை, எண்குணத்திற்கும் உறைவிடமாய் திகழ்பவனை; எந்நேரமும் அவன் நாமாக்களை மட்டுமே சொல்லும் திறத்தைத் தந்து; மெய்ப்பொருள் காணும் வழியை தாராயோ கந்தா' என்று வணங்குகிறார் அருணகிரியார்.
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே!
//பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ! எண்குண பஞ்சரனே//
தேவர்களின் தொழில் ஈசனின் கார்யத்தை முடிப்பது என்றால் அதைத் தடுப்பது அசுரரின் கார்யம். தேவர்களின் துயர்துடைக்கவே அவதரித்தவன் கந்தன். தங்களை அடிமையாக்கி சேவகம் புரியவைத்த சூரனையும் அவன் படையினரையும் வதைத்து தேவலோகத்தை மீட்டுத்தந்தவன் அந்த தேவசேனாதிபதி. ஆகவே தேவர்களின் நன்றிக்கு என்றென்றைக்கும் பாத்திரமானவன் குமரன். இதில் பொரு என்றால் போர். புங்கவர் என்பது தேவர்கள். போரின் போது தேவர்கள் தொழுது துணைக்கழைக்கும் பேராற்றல் பொருந்திய வீரனும்..
புவியும் பரவும் என்றால் அனைத்து புவனங்களும் தொழும் என்று பொருள். குருபுங்கவன் - குருவென்று அறியப்படுவர்களில் முதன்மையானவன். ஈசனுக்கே குருவானவனைத்தவிர இந்தத் தகுதியுடையவன் ஒருவனும் உளனோ? அந்தச் சுவாமிநாதனே குருபுங்கவன்.
இந்தக் குருபுங்கவன் எப்பேர்ப்பட்டவன்? அஷ்ட மாகுணங்கள் என்று மானிடர்தம் வாழ்வினிலே கடைபிடிக்கவேண்டிய உயர்ந்த குணங்களைக் சொல்வதுண்டு. ஆனால் இங்கே அருணகிரியார் குறிப்பிடுவது இறைவன் என்று அறியப்படுவதற்குண்டான எட்டு குணங்கள். அவை முற்றிலுமாக நாம் அறிந்துகொள்ள முடியாது. அவற்றை அறிந்துகொள்ள இறைவனின் அனுபூதி இன்றி முடியாது. எனினும் 1. உல்லாச நிராகுலன் 2. தணியா அதிமோகன், தயாபரன் 3. அவன் உண்மையான தன்மையை அவனருளால் அன்றி அறிய முடியாதவன் 4. சிந்தாகுலமானவை தீர்த்தருளவல்லவன் 5. நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள் சண்முகன்
6. சமரம் பொருதானவ நாசகன் என சிலவற்றை அருணகிரியின் பாடல்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
இதுதவிர யஜுர் வேதத்தில் நமகத்தில் அனைத்திற்கும் ஆதிபரம்பொருளான ஈசனின் குணங்களாய் பலவற்றைத் தொகுத்து மனிதர் அறியத் தரப்பட்டிருக்கிறது. (அதனாலேதான் வேத முழுவதும் கற்க முடியாதோர்கூட ருத்ராத்யாயம் செய்தாலே போதுமானது என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். அதுபற்றி பிறிதொரு சமயம்..)
இப்படி இறைவனின் குணங்களை வெவ்வெறு விதமாய் பெரியோர் தொகுத்திருக்கின்றனர். அனைத்தையும் அறிவதோ புரிந்துகொள்வதோ நம்மால் ஆகாத செயல். அதனால் எட்டுகுணங்கள் என்று அருணகிரி குறிப்பிடுபவை இறைவன் என்று அறியப்படுதற்கு அடிப்படை குணங்கள் என்று கொள்வோம். இப்படி சிறந்ததான எட்டுக்குணங்களை உடைய பஞ்சரன். பஞ்சரன் என்றால் உடல் அல்லது கூடு என்று பொருள். இந்த குணங்களை உடையவன் முருகன் என்று சொல்வது தவறு என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இறைவனின் குணங்களையும் விசேஷத்தையும் வரையறுக்க மூடர்களாகிய நாம் யார்? எட்டோ நூறோ, எண்களில்தான் எண்ணிவிட முடியுமா? அடியார்களின் தலைவன் அருணகிரி தாம் உணர்ந்து அறிந்ததை, நம் பொருட்டு எளிமைப்படுத்தி தந்திருப்பார் என்றே கொள்வோம்.
இறைக் குணங்களின் ஊற்று முருகன் என்று சொல்வதுதான் பொருத்தம். ஏனெனில் தெய்வங்களில் முதன்மையானவன் சர்வேஸ்வரன். சர்வம் சிவமயம் என்று சொல்லாமல் சிவமயம் என்றே அடியார்கள் கூறுவதன் தத்துவம் அனைத்துமான சர்வமும் சிவனுள் அடக்கம் என்பதனால்தான். அனைத்துயிரின் மேலும் ஈசனின் 'பால்நினைதூட்டும் தாயினும் சாலச்சிறந்த' கருணையின் வடிவே முருகன். ஆக அவனே அனைத்து இறை குணங்களுக்குமான ஊற்று.
இப்படி போர்சமயத்திற் தேவர்களால் தொழப்படுபவனும், அகிலபுவனங்களாலும் வணங்கப்படுபவனும், குருசிரேஷ்டனும், எட்டு இறைகுணங்களின் பிறப்பிடமானவனுமான அந்த ஞானபண்டிதனை......
//முருகன் குமரன் குகனென்று மொழிந்து உருகுஞ் செயல்தந்து உணர் வென்றருள்வாய்//
முருகன் என்ற சொல்லிற்கு மட்டும் ஒரு நாள் பொழுது பொருள் சொல்லிக்கொண்டே போகலாம். குமரன் குகன் என்றே உன் திருப்பெயர்களை மட்டுமே சதா சர்வகாலமும் வெறும் வாய்ப்பேச்சாய் மட்டும் அல்லாமல் எழுத்தாயும் எண்ணமாயும் கொண்டு (அதனாலேயே மொழிந்து) என் எலும்பெலாம் உருகும்படிச் செய்து மெய் வழியை அருளி எனக்கு அந்த பேரானந்த உணர்வை தந்தருளாயோ கந்தா என்று கேட்கிறார் அடிகளார்.
---------------
'தேவரும் மனிதரும் போற்றி வணங்கும் முருகனை, குருஸ்ரேஷ்டனை, எண்குணத்திற்கும் உறைவிடமாய் திகழ்பவனை; எந்நேரமும் அவன் நாமாக்களை மட்டுமே சொல்லும் திறத்தைத் தந்து; மெய்ப்பொருள் காணும் வழியை தாராயோ கந்தா' என்று வணங்குகிறார் அருணகிரியார்.
Friday, January 19, 2007
14. மெய்யா பொய்யா?
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே ஒழிவா யொழிவாய்!
மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம்
ஐவாய் வழிசெல்லும் அவாவினையே! (14)
//ஒழிவா யொழிவாய்! மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம் ஐவாய் வழிசெல்லும் அவாவினையே!//
இந்திரியங்கள் நமக்கு ஐந்து. அவை கண், காது, மூக்கு, வாய், உடல்.
உடல் என்பது இங்கே பிரதானம். அதைச் சார்ந்து மற்ற நான்கும் இருக்கின்றன. இப்போது சற்றே உடல் என்பது என்ன என்று பார்ப்போம். நம் ஆன்மா பிறவியெடுக்க ஒரு சாதனமாய் சற்றேறக்குறைய எழுபது ஆண்டுகள் மட்டுமே இருந்து அழுகும் ஒரு ஜடப்பொருள். இது இப்படியிருக்க உடலுக்கு நாம் வைத்திருக்கும் மற்றொரு பெயர்? மெய். நகைமுரணாக இல்லை? மெய் என்றால் என்றென்றைக்கும் நிலைத்து நிற்பது, அசையாதது, மாறாதது என்று பொருள். ஆனால் தோன்றி மறையும் ஒரு தேகத்திற்கு மெய் என்று பெயர் கொடுத்து கொண்டாடுவதிலிருந்தே அடிப்படையிலேயே கோணல் இருப்பது தெளிவாகிறதல்லவா? நிலையற்ற ஒரு வஸ்துவை நிலையானது, மெய்யானது என்று புகழ்வது அறிவார்ந்த செயலா?
மனித உடல் என்பது ஒரு மோட்டார் காரைப் போன்றது. பாகங்கள் நிறைந்தது. பழுதடையக்கூடியது. அழியக்கூடியது. இயங்க சக்தி தேவைப்படுவது. இப்படி பல பலவீனங்களைக் கொண்ட உடல் எப்படி மெய்யானதாக முடியும்? முன்னோர்கள் முட்டாள்களா என்ன? வெள்ளைத்துணியில் கரும்புள்ளியைப் போல இப்படி பளிச்சென்று ஒரு தவறைச் செய்தால் அது நம் கண்களில் படாமல் போய்விடாது என்று புரிந்துதான் செய்துள்ளார்கள். உடல் மெய்யல்ல என்பது - மெய் என்றால் என்ன, உடல் என்றால் என்ன என்று இம்மாதிரி ரெண்டு நிமிடம் சிந்தித்தாலே புரிந்துவிடும். பிறவாதிறவா இறைவனை மெய்ப்பொருள் யாதென கேட்க நினைக்கையில் பொய்யான இவ்வுடலை மெய்யென நினைந்து பலகாலம் திரிந்த காலமும் நினைவிற்கு வருமல்லவா? அப்படி வருகையிலேதான் அருணகிரி இங்கே சொல்கிறார்...
வாழ்க்கையில் துணையாய் இருக்கவேண்டிய இந்திரியங்கள் என்பது போய் இந்திரிய சுகத்திற்கென வாழ்வதே மெய்யெனும் பொய்யில் களித்து நிற்கவைப்பது ஆசையெனும் பேய். இப்பேய் துன்பத்திற்கெல்லாம் மூலாதாரம். இப்பேய் வெளிப்படுவது இந்திரியங்களின் மூலமாக. பெண், பொன், மண் என்று மூவாசைகள் தவிர இப்போது எதன்மேல் தான் ஆசைவைப்பது என்று தெரியாமல் தவிக்கும் அளவுக்கு நம்மை இந்திரியங்கள் ஆட்டிப்படைக்கின்றன. இதற்கு என்ன தீர்வு? எப்படி போக்குவது?
//கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனனே//
மெய்யறிவெனும் கதிர்முத்தி நினைத்தோர்க்கு முக்தியளிக்க காத்திருக்கும் ஞானவேலை தன் கையில் உடைய வேலவனின் செம்மையான பாதக்கழல்களை நினைந்து நினைந்து உய்திடுவாய் மனமே! அவற்றையே நினைத்து ஜபிப்பதன் மூலம் ஐந்து இந்திரியங்களின் வழியாக வெளிப்பட்டு நம் வாழ்வைப் பாழாக்கும் ஆசையை ஒழித்துக்கட்டுவாய்! என்று சுவாமிகள் ஆசைப்பிணியிலிருந்து விடுபெற முருகனின் பாதங்களை நினைத்து தியானம் செய்க என்று உபாயம் அருளுகிறார்.
றுய்வாய் மனனே ஒழிவா யொழிவாய்!
மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம்
ஐவாய் வழிசெல்லும் அவாவினையே! (14)
//ஒழிவா யொழிவாய்! மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம் ஐவாய் வழிசெல்லும் அவாவினையே!//
இந்திரியங்கள் நமக்கு ஐந்து. அவை கண், காது, மூக்கு, வாய், உடல்.
உடல் என்பது இங்கே பிரதானம். அதைச் சார்ந்து மற்ற நான்கும் இருக்கின்றன. இப்போது சற்றே உடல் என்பது என்ன என்று பார்ப்போம். நம் ஆன்மா பிறவியெடுக்க ஒரு சாதனமாய் சற்றேறக்குறைய எழுபது ஆண்டுகள் மட்டுமே இருந்து அழுகும் ஒரு ஜடப்பொருள். இது இப்படியிருக்க உடலுக்கு நாம் வைத்திருக்கும் மற்றொரு பெயர்? மெய். நகைமுரணாக இல்லை? மெய் என்றால் என்றென்றைக்கும் நிலைத்து நிற்பது, அசையாதது, மாறாதது என்று பொருள். ஆனால் தோன்றி மறையும் ஒரு தேகத்திற்கு மெய் என்று பெயர் கொடுத்து கொண்டாடுவதிலிருந்தே அடிப்படையிலேயே கோணல் இருப்பது தெளிவாகிறதல்லவா? நிலையற்ற ஒரு வஸ்துவை நிலையானது, மெய்யானது என்று புகழ்வது அறிவார்ந்த செயலா?
மனித உடல் என்பது ஒரு மோட்டார் காரைப் போன்றது. பாகங்கள் நிறைந்தது. பழுதடையக்கூடியது. அழியக்கூடியது. இயங்க சக்தி தேவைப்படுவது. இப்படி பல பலவீனங்களைக் கொண்ட உடல் எப்படி மெய்யானதாக முடியும்? முன்னோர்கள் முட்டாள்களா என்ன? வெள்ளைத்துணியில் கரும்புள்ளியைப் போல இப்படி பளிச்சென்று ஒரு தவறைச் செய்தால் அது நம் கண்களில் படாமல் போய்விடாது என்று புரிந்துதான் செய்துள்ளார்கள். உடல் மெய்யல்ல என்பது - மெய் என்றால் என்ன, உடல் என்றால் என்ன என்று இம்மாதிரி ரெண்டு நிமிடம் சிந்தித்தாலே புரிந்துவிடும். பிறவாதிறவா இறைவனை மெய்ப்பொருள் யாதென கேட்க நினைக்கையில் பொய்யான இவ்வுடலை மெய்யென நினைந்து பலகாலம் திரிந்த காலமும் நினைவிற்கு வருமல்லவா? அப்படி வருகையிலேதான் அருணகிரி இங்கே சொல்கிறார்...
வாழ்க்கையில் துணையாய் இருக்கவேண்டிய இந்திரியங்கள் என்பது போய் இந்திரிய சுகத்திற்கென வாழ்வதே மெய்யெனும் பொய்யில் களித்து நிற்கவைப்பது ஆசையெனும் பேய். இப்பேய் துன்பத்திற்கெல்லாம் மூலாதாரம். இப்பேய் வெளிப்படுவது இந்திரியங்களின் மூலமாக. பெண், பொன், மண் என்று மூவாசைகள் தவிர இப்போது எதன்மேல் தான் ஆசைவைப்பது என்று தெரியாமல் தவிக்கும் அளவுக்கு நம்மை இந்திரியங்கள் ஆட்டிப்படைக்கின்றன. இதற்கு என்ன தீர்வு? எப்படி போக்குவது?
//கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனனே//
மெய்யறிவெனும் கதிர்முத்தி நினைத்தோர்க்கு முக்தியளிக்க காத்திருக்கும் ஞானவேலை தன் கையில் உடைய வேலவனின் செம்மையான பாதக்கழல்களை நினைந்து நினைந்து உய்திடுவாய் மனமே! அவற்றையே நினைத்து ஜபிப்பதன் மூலம் ஐந்து இந்திரியங்களின் வழியாக வெளிப்பட்டு நம் வாழ்வைப் பாழாக்கும் ஆசையை ஒழித்துக்கட்டுவாய்! என்று சுவாமிகள் ஆசைப்பிணியிலிருந்து விடுபெற முருகனின் பாதங்களை நினைத்து தியானம் செய்க என்று உபாயம் அருளுகிறார்.
Wednesday, November 22, 2006
13. இருக்கிறானா இல்லையா?
முருகன் தனிவேல் முனிநம் குருவென்று
அருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென நின்றதுவே. 13
//முருகன் தனி வேல்முனி நம் குரு என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ?//
அ, ஆ வென்று வெறும் எளிமையான எழுத்து எழுத பழக்கக் கூட ஆசிரியர் ஒருவர் வேண்டும். எழுத்துக்களை நாமே கற்றுக்கொள்ள முடியாதா? பாடங்களுக்குத்தான் புத்தகங்கள் இருக்கின்றனவே. சுயமாக படித்துக்கொள்ள முடியாதா? முடியாது. அதுதான் குருவின் மகத்துவம். ஒவ்வொரு பருவத்தில் நமக்கு ஒவ்வொரு பக்குவம். வைரத்தை தீட்டுவது போல் நிதானமாக, நேர்த்தியாக நம்மை தயார்படுத்துவது ஆசிரியர்களின் பணி. ஆரம்ப பள்ளி, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி அளவு பேராசிரியர்கள் என ஆசிரியர்களில் சிலவகை. ஆனால் அடிப்படை பணியென்னவோ ஒன்றுதான் அல்லவா? நிலையற்ற உலக வாழ்க்கைக்கே ஆசிரியர்கள் வழிகாட்டிகளாய்த் தேவைப்படும் போது, ஆன்மிகத்திற்கு வழிகாட்டிகள் வேண்டாமா? இறைவனைக் குறித்த நம் தேடலுக்கு? ஒரு குரு வேண்டாமா? வாரியார் சுவாமிகள் சொல்வார்கள். மாதா பிதாவை பிள்ளைக்கு அடையாளம் காட்டுவாள். பிதா நல்ல குருவை. குருவோ தெய்வத்தையே அடையாளம் காட்டுபவர். அதனால் தான் அந்த வரிசையில் நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று.
ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். குரு தெய்வத்தை அடைய வழி தான் காட்டுவாரே தவிர குருவே தெய்வம் கிடையாது. அப்படி எந்த ஒரு நேர்மையான குருவும் சொல்லிக்கொள்ள மாட்டார். இன்னொன்று இவர்கள் கடவுளுக்கும் நமக்குமிடையே ஆன இடைத்தரகர்கள் கிடையாது. இந்த குரு, ஆச்சாரியர்கள் யாருமே எனக்கு வேண்டாம், நானே இறைவனை அடைந்து கொள்கிறேன் என்று சொல்கிறீர்களா. அதுவும் நியாயம்தான். செய்யலாம். எப்படியென்றால் நானே சொந்தமாக E=mc^2 ப்ரூப் கண்டுபிடித்து அதன் பயனை என் சொந்த முயற்சியில் மட்டுமே அடைவேன் என்பது போன்றது. சொந்த முயற்சி என்பது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும், பலர் செய்து தெளிந்த காரியத்தை திரும்பவும் செய்தே தீர்வேன் என்பது தேவையற்ற காலவிரயம், அல்லவா? இன்னும் பல நூறு பிறப்புகள் தேவைப்படுமல்லவா?
பல கோடி யுகங்களாக நம் பாரதப் புண்ணியபூமியில் தோன்றி வந்துள்ள பல கோடி மகான்கள் அருந்தவங்களும், யோகமும் செய்து கற்றதுதான் இறைவனை அடையும் வழி. அவர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள சூத்திரங்களிலும் மார்க்க்ம் தான் சொல்கிறார்களே தவிர, இறைவனை நேரே நமக்கு டோர் டெலிவரி செய்யவில்லை. பல மார்க்கங்களில் எந்த மார்க்கம் நமக்கு சரிப்பட்டு வருமோ, அதற்கு தகுந்த குருவின் உதவியை நாடினால் அவர் நமக்கு உபாயங்கள் அருளுவார். வாய்ப்பாடு டேபிள்ஸும், லாக் டேபிள்ஸும், கால்குலேட்டரும் எப்படி பயன் படுகின்றனவோ, அது போலவே குருவின் அறிவுரைகளும் சாதகம் செய்தால் பயன் தர வல்லன. கால்குலேட்டர் கணக்குக்கான விடையைச் சொல்லுமேயொழிய problem க்கான் தீர்வைச் சொல்லாது. ஒரு கால்குலேட்டரையோ லாக் டேபிளையோ சரியாக பயன்படுத்தி விடை காணவேண்டியது நம் வேலை. அதுவே தான் ஆன்மிகத்திலும். இவ்வாறு குருவானவர் வழிகாட்டியாக கொண்டு, சொந்த முயற்சியில் கடைத்தேற வழிகாண வேண்டும். அதோடு கூட குருவானவரின் சத்சங்கமே ஒருவனின் முயற்சிகளை நல்வழிப்படுத்தி ஒழுங்குசெய்யும். அப்படி வருவதே குருவின் தீட்சை. அதுவும் முக்கியமான component இதில்.
குருவினுடைய மகிமையைப் பார்த்தோம். இங்கே அருணகிரியார் சொல்வது ஞானத்தின் வடிவான வேலை ஏந்தி, அண்ட சராசரங்கமெங்கும் வ்யாபித்து உலகில் உள்ளவை இல்லாதவை இனிவருபவை என முக்காலமும் காரியமும் உணர்ந்தவனாய், அனைத்து ஞானத்திற்கும் சுடராய் யோக நிலையில் நின்று அருள் தரும் ஒரே பெருமான் கந்தன். அப்படி தனியொருவனாக, அனைத்தும் அறிந்தவனாக தனிமையில் நிற்பவன் கந்தவேள் மட்டுமே என்பதைக் குறிக்கவே தனி என்னும் பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். அப்பெருமானை குருவாய் கொண்டவர்கள் மட்டுமே மெய்ப்பொருளை உணரமுடியும். அதுவும் அவனை குருவாய்க் கொள்வதே அவன் அருள் இல்லாமல் கிடைக்காது. அந்த முருகனைக் குருவாக கொள்வதற்கு அவனை நாம் எங்கே சென்று தேடுவது? சீடனாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நேரில் எங்கே பார்த்து விண்ணப்பம் கொடுப்பது? முருகனை எங்கே எவ்வாறு அடையாளம் காண்பது?
//உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என நின்றதுவே//
உருவம் அன்று. அருவம் அன்று. உளது அன்று. இலது அன்று. இருள் அன்று. ஒளியும் அன்று. இப்படி எதிலும் இருப்பவன். அதே நேரம் எங்குமே இல்லாதவன். அவனைத்தேடி எங்கே அலைந்தாலும் கிடைக்கமாட்டான். அப்படியென்றால் தேடி என்ன பயன் என்று எண்ணக்கூடாது. கந்தனை நம் அறிவிற்கு எட்டிய பொருட்களில் ஒன்றாக define செய்துவிடலாம் என்று தேடினால் கண்டிப்பாக கிடைக்க மாட்டான். அது ஆணவம். ஆணவ மலம் ஒழியும் வரை இறைவனைக் காண முடியாது என்பதை முன்னரே சில பாடல்களில் பார்த்துள்ளோம்.
"அங்கே இங்கே என்று அலையாதே மனமே!
ஆழ்ந்து பார் உன்னுள்ளே ப்ருந்தாவனமே!"
என்று ஒரு பாடல் உண்டு. கண்ணன் கோகுலத்தில் இருக்கிறான், துவாரகையில் இருக்கிறான், வைகுண்டத்தில் இருக்கிறான் என்று அலைந்து அயராதே மனமே. சும்மா இரு சொல் அற என்று சென்ற பாடலில் பார்த்தோமல்லவா? அப்படி சும்மா இருந்தால் உன்னுள்ளே உன் மனம் தான் ப்ருந்தாவனம் என்று புரியும். அங்கேயேதான் கண்ணனும் இருக்கிறான் என்று பொருள் வரும். அவ்வாறே அருணகிரியாரும் சற்று விளையாடுகிறார்.
அங்கே இல்லை, அதுவும் இல்லை, இதுவும் இல்லை, இங்கேயும் இல்லை. ஆணவத்தால் விளையும் தேவையற்ற தேடலை விட்டு சும்மாயிரு சொல்லற. உன்னுள்ளே நிற்கிறான் கந்தன். அவனை தேடு. கந்தனின் அநுபூதி நாம் வேண்டும் பயன். அந்த அநுபூதி எப்படி அடைவது? அந்த முருகனையே குருவாக கொண்டால் மட்டுமே அதற்கான வழி கிட்டும்.
அருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென நின்றதுவே. 13
//முருகன் தனி வேல்முனி நம் குரு என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ?//
அ, ஆ வென்று வெறும் எளிமையான எழுத்து எழுத பழக்கக் கூட ஆசிரியர் ஒருவர் வேண்டும். எழுத்துக்களை நாமே கற்றுக்கொள்ள முடியாதா? பாடங்களுக்குத்தான் புத்தகங்கள் இருக்கின்றனவே. சுயமாக படித்துக்கொள்ள முடியாதா? முடியாது. அதுதான் குருவின் மகத்துவம். ஒவ்வொரு பருவத்தில் நமக்கு ஒவ்வொரு பக்குவம். வைரத்தை தீட்டுவது போல் நிதானமாக, நேர்த்தியாக நம்மை தயார்படுத்துவது ஆசிரியர்களின் பணி. ஆரம்ப பள்ளி, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி அளவு பேராசிரியர்கள் என ஆசிரியர்களில் சிலவகை. ஆனால் அடிப்படை பணியென்னவோ ஒன்றுதான் அல்லவா? நிலையற்ற உலக வாழ்க்கைக்கே ஆசிரியர்கள் வழிகாட்டிகளாய்த் தேவைப்படும் போது, ஆன்மிகத்திற்கு வழிகாட்டிகள் வேண்டாமா? இறைவனைக் குறித்த நம் தேடலுக்கு? ஒரு குரு வேண்டாமா? வாரியார் சுவாமிகள் சொல்வார்கள். மாதா பிதாவை பிள்ளைக்கு அடையாளம் காட்டுவாள். பிதா நல்ல குருவை. குருவோ தெய்வத்தையே அடையாளம் காட்டுபவர். அதனால் தான் அந்த வரிசையில் நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று.
ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். குரு தெய்வத்தை அடைய வழி தான் காட்டுவாரே தவிர குருவே தெய்வம் கிடையாது. அப்படி எந்த ஒரு நேர்மையான குருவும் சொல்லிக்கொள்ள மாட்டார். இன்னொன்று இவர்கள் கடவுளுக்கும் நமக்குமிடையே ஆன இடைத்தரகர்கள் கிடையாது. இந்த குரு, ஆச்சாரியர்கள் யாருமே எனக்கு வேண்டாம், நானே இறைவனை அடைந்து கொள்கிறேன் என்று சொல்கிறீர்களா. அதுவும் நியாயம்தான். செய்யலாம். எப்படியென்றால் நானே சொந்தமாக E=mc^2 ப்ரூப் கண்டுபிடித்து அதன் பயனை என் சொந்த முயற்சியில் மட்டுமே அடைவேன் என்பது போன்றது. சொந்த முயற்சி என்பது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும், பலர் செய்து தெளிந்த காரியத்தை திரும்பவும் செய்தே தீர்வேன் என்பது தேவையற்ற காலவிரயம், அல்லவா? இன்னும் பல நூறு பிறப்புகள் தேவைப்படுமல்லவா?
பல கோடி யுகங்களாக நம் பாரதப் புண்ணியபூமியில் தோன்றி வந்துள்ள பல கோடி மகான்கள் அருந்தவங்களும், யோகமும் செய்து கற்றதுதான் இறைவனை அடையும் வழி. அவர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள சூத்திரங்களிலும் மார்க்க்ம் தான் சொல்கிறார்களே தவிர, இறைவனை நேரே நமக்கு டோர் டெலிவரி செய்யவில்லை. பல மார்க்கங்களில் எந்த மார்க்கம் நமக்கு சரிப்பட்டு வருமோ, அதற்கு தகுந்த குருவின் உதவியை நாடினால் அவர் நமக்கு உபாயங்கள் அருளுவார். வாய்ப்பாடு டேபிள்ஸும், லாக் டேபிள்ஸும், கால்குலேட்டரும் எப்படி பயன் படுகின்றனவோ, அது போலவே குருவின் அறிவுரைகளும் சாதகம் செய்தால் பயன் தர வல்லன. கால்குலேட்டர் கணக்குக்கான விடையைச் சொல்லுமேயொழிய problem க்கான் தீர்வைச் சொல்லாது. ஒரு கால்குலேட்டரையோ லாக் டேபிளையோ சரியாக பயன்படுத்தி விடை காணவேண்டியது நம் வேலை. அதுவே தான் ஆன்மிகத்திலும். இவ்வாறு குருவானவர் வழிகாட்டியாக கொண்டு, சொந்த முயற்சியில் கடைத்தேற வழிகாண வேண்டும். அதோடு கூட குருவானவரின் சத்சங்கமே ஒருவனின் முயற்சிகளை நல்வழிப்படுத்தி ஒழுங்குசெய்யும். அப்படி வருவதே குருவின் தீட்சை. அதுவும் முக்கியமான component இதில்.
குருவினுடைய மகிமையைப் பார்த்தோம். இங்கே அருணகிரியார் சொல்வது ஞானத்தின் வடிவான வேலை ஏந்தி, அண்ட சராசரங்கமெங்கும் வ்யாபித்து உலகில் உள்ளவை இல்லாதவை இனிவருபவை என முக்காலமும் காரியமும் உணர்ந்தவனாய், அனைத்து ஞானத்திற்கும் சுடராய் யோக நிலையில் நின்று அருள் தரும் ஒரே பெருமான் கந்தன். அப்படி தனியொருவனாக, அனைத்தும் அறிந்தவனாக தனிமையில் நிற்பவன் கந்தவேள் மட்டுமே என்பதைக் குறிக்கவே தனி என்னும் பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். அப்பெருமானை குருவாய் கொண்டவர்கள் மட்டுமே மெய்ப்பொருளை உணரமுடியும். அதுவும் அவனை குருவாய்க் கொள்வதே அவன் அருள் இல்லாமல் கிடைக்காது. அந்த முருகனைக் குருவாக கொள்வதற்கு அவனை நாம் எங்கே சென்று தேடுவது? சீடனாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நேரில் எங்கே பார்த்து விண்ணப்பம் கொடுப்பது? முருகனை எங்கே எவ்வாறு அடையாளம் காண்பது?
//உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என நின்றதுவே//
உருவம் அன்று. அருவம் அன்று. உளது அன்று. இலது அன்று. இருள் அன்று. ஒளியும் அன்று. இப்படி எதிலும் இருப்பவன். அதே நேரம் எங்குமே இல்லாதவன். அவனைத்தேடி எங்கே அலைந்தாலும் கிடைக்கமாட்டான். அப்படியென்றால் தேடி என்ன பயன் என்று எண்ணக்கூடாது. கந்தனை நம் அறிவிற்கு எட்டிய பொருட்களில் ஒன்றாக define செய்துவிடலாம் என்று தேடினால் கண்டிப்பாக கிடைக்க மாட்டான். அது ஆணவம். ஆணவ மலம் ஒழியும் வரை இறைவனைக் காண முடியாது என்பதை முன்னரே சில பாடல்களில் பார்த்துள்ளோம்.
"அங்கே இங்கே என்று அலையாதே மனமே!
ஆழ்ந்து பார் உன்னுள்ளே ப்ருந்தாவனமே!"
என்று ஒரு பாடல் உண்டு. கண்ணன் கோகுலத்தில் இருக்கிறான், துவாரகையில் இருக்கிறான், வைகுண்டத்தில் இருக்கிறான் என்று அலைந்து அயராதே மனமே. சும்மா இரு சொல் அற என்று சென்ற பாடலில் பார்த்தோமல்லவா? அப்படி சும்மா இருந்தால் உன்னுள்ளே உன் மனம் தான் ப்ருந்தாவனம் என்று புரியும். அங்கேயேதான் கண்ணனும் இருக்கிறான் என்று பொருள் வரும். அவ்வாறே அருணகிரியாரும் சற்று விளையாடுகிறார்.
அங்கே இல்லை, அதுவும் இல்லை, இதுவும் இல்லை, இங்கேயும் இல்லை. ஆணவத்தால் விளையும் தேவையற்ற தேடலை விட்டு சும்மாயிரு சொல்லற. உன்னுள்ளே நிற்கிறான் கந்தன். அவனை தேடு. கந்தனின் அநுபூதி நாம் வேண்டும் பயன். அந்த அநுபூதி எப்படி அடைவது? அந்த முருகனையே குருவாக கொண்டால் மட்டுமே அதற்கான வழி கிட்டும்.
Monday, November 06, 2006
12. திருடன் வருவானா? திருடிச் செல்வானா?
செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இரு சொல்லற வென்றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. (12)
//செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்//
அம்பாளின் அம்சமாய் வந்த சிவந்த மான் ஒன்று சிவமுனியின் பார்வை பட்டதால் கருவுற்று அவ்விடத்திலேயே வள்ளிக்கிழங்கு செடியொன்றின் அருகாமையில் ஈன்றுவிட்டு மறைந்தது. அவ்வழி வந்த வேடரின் அரசன் அம்மகளைத் தம்மகளாய் தத்தெடுத்து வளர்த்து வரலானான். அரசனுக்கு வள்ளிக்கு முன்னர் ஐந்து பிள்ளைகள். அவர்களும் முருக பக்தியில் சிறந்து விளங்கினர். குடும்பத்து ஒழுக்கம் குழந்தைக்கு வராதா? கண்ணனுக்கு ஒரு ருக்மிணி போல குறமகள் வள்ளியும் முருகவேளின் மனைவியாகவே தன்னை பாவித்து வாழ்ந்துவந்தாள். சதா சர்வகாலமும் முருகப்பெருமானையே நினைத்து நினைத்து நெக்குருகி ஆட்கொள்ள வேண்டி வந்த வள்ளியை தோழியர் 'அந்த முருகனா வருவான்? அதுவும் உன்னை மணக்க? பைத்தியக்காரி' என்று கிண்டல் செய்தனர்.
திருடன், கள்வன் என்று ஒருவனை இழிவாய்க் கூறுவார்கள். ஆனால் அந்தப் பட்டத்தையும் முருகன் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான். அருணகிரி முருகனின் கருணையை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறார். செம்மான் மகளை மணந்த மணாளன் என்று சொல்லாமல் திருடும் திருடன் என்று சொல்வதன் மூலம். இதற்கு நேரடியாக கந்த புராணத்தில் வேடர்க்கரசன் அவ்வாறு பெருமானை விளித்தமையால் அதே சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார் என்பதைவிட, தன்னையே நினைத்து உருகும் பக்தர்களின் மேல் முருகனுக்கு பேராசை என்பதைத் தான் குறிப்பால் சொல்கிறார் எனக்கொள்ள வேண்டும். அவனுக்கும் அவனடியார்க்கும் நடுவே யார் குறுக்கே நின்றாலும், நடுநிசியில் ஒரு திருடனைப் போல தெரியாமல் வந்து கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு, தன் அடியாரைக் கவர்ந்து சென்று தன்னுள் கலக்கச் செய்துவிடுவான் குமரன்.
வள்ளி என்ன தவயோகியா? இல்லை பூஜை பல செய்தாளா? கோயில் கோயிலாக சுற்றினாளா? மந்திர தந்திரங்கள் கற்றுத்தேர்ந்தவளா? இல்லியே. இவையொன்றுமேயில்லாத சாதாரண குறமகள். அவளுக்கு பின் எங்கேயிருந்து இந்த கீர்த்தி? எவ்வித பிரதிபலனும் எதிர்பாராத உண்மையான பக்திக்குத்தான் இறைவன் அடிமை என்பது தெளிவு ஆகிறது. நந்தனுக்குக்காக தன் உற்ற வாகனமான நந்திக்கே 'நகர்ந்து நில்' என்று பரமேஸ்வரன் ஆக்ஞையிடவில்லையா? சிதம்பரத்தையே பார்த்தறியாத, வேதத்தையே கேட்டறியாத பாமரனுக்கு சிவயோகம் அளித்துக்காக்கவில்லையா?
முருகன் சிவகுமரனேயல்ல, சிவனே தான் என்கிறது கந்தபுராணம். அதனாலே தான் அவன் பிறவான் இறவான். என்றுமே பிறப்பில்லாதவன். என்றென்றைக்கும் இறப்பில்லாதவன். சர்வேஸ்வரன் அவனே.
//சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே//
சும்மா இரு சொல் அற - என்று எளிய தமிழில் திருவண்ணாமலையில் கந்தன் அருணகிரிநாதருக்கு உபதேசித்தான். கேட்பதற்கு மிக எளிதான உபதேசம் தான். நடைமுறைப்படுத்துவதில் தான் பெருஞ்சிக்கல். ஒரு நிமிடம் கண்ணைமூடி சும்மா இருக்க முயற்சி செய்தாலே தெரியும். இந்த மனம் ஒரு குரங்கு விடயத்தை பல இடங்களில் சொல்லியாகிவிட்டது. வீட்டில் ஜாங்கிரி வாங்கி வைத்திருந்தார்களானால், இப்போதைக்கு ஜாங்கிரி சாப்பிடுவது ஒன்றேதான் இவ்வுலகிலேயே மிகப்பெரிய பொருளாய்த் தெரியும் நமக்கு. ஜாங்கிரி சாப்பிட்டு திகட்டிவிட்டதென்றால் அடுத்து விடயத்துக்குத்தாவும் நம் மனம். காரைப் பார்த்தால் கார் வாங்கவேண்டும், வீடு பார்த்தால் வீடு கட்டவேண்டும் என்று கிளைக்கு கிளை தாவும் மந்தியைப் போன்றதுதான் மனிதமனம். இப்படி ஒரு சமயத்தில் இருக்கும் ஆசை மட்டுமே அப்போதைக்கு உலகிலேயே மிகவும் முக்கியமானதாய் தெரியும். இதுதான் அ(ந்த) மா பொருள்.
ஆனால் வாயைக்கட்டி, மனத்தைக்கட்டி, மெய்யைக்கட்டி முருகன் அறிவுரைப்படி இருந்தவுடன் இந்த மா பொருட்கள் ஒன்றுமே தெரியாமல் சிந்தையிலிருந்து மறைந்து போய், முருகனுடன் கலந்துவிட்ட தவயோகநிலை ஒன்று மட்டுமே நிலைக்கிறதே! இது என்ன ஆச்சரியம் என்று வினவுகிறார் அருணகிரியார்.
------------------------------------------------
சிவந்த மானின் மகளைக் கள்வனைப்போல திருடியவன், அகிலாண்ட கோடிக்கும் பெருமான் முருகன், அவன் பிறப்பில்லாதவன், இறப்பில்லாதவன். அவன் சும்மா இரு சொல் அற என்று சொன்ன நொடியே, நான் இதுவரை பெரியவை, முக்கியமானவை என்று எண்ணிவந்த உலக வஸ்துக்கள் அனைத்தும் மறந்து அறியாமல் போனேனே! அவனுளே கலந்த மோன நிலை மட்டுமே கண்டேனே! என்ன ஆச்சரியம்!
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இரு சொல்லற வென்றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. (12)
//செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்//
அம்பாளின் அம்சமாய் வந்த சிவந்த மான் ஒன்று சிவமுனியின் பார்வை பட்டதால் கருவுற்று அவ்விடத்திலேயே வள்ளிக்கிழங்கு செடியொன்றின் அருகாமையில் ஈன்றுவிட்டு மறைந்தது. அவ்வழி வந்த வேடரின் அரசன் அம்மகளைத் தம்மகளாய் தத்தெடுத்து வளர்த்து வரலானான். அரசனுக்கு வள்ளிக்கு முன்னர் ஐந்து பிள்ளைகள். அவர்களும் முருக பக்தியில் சிறந்து விளங்கினர். குடும்பத்து ஒழுக்கம் குழந்தைக்கு வராதா? கண்ணனுக்கு ஒரு ருக்மிணி போல குறமகள் வள்ளியும் முருகவேளின் மனைவியாகவே தன்னை பாவித்து வாழ்ந்துவந்தாள். சதா சர்வகாலமும் முருகப்பெருமானையே நினைத்து நினைத்து நெக்குருகி ஆட்கொள்ள வேண்டி வந்த வள்ளியை தோழியர் 'அந்த முருகனா வருவான்? அதுவும் உன்னை மணக்க? பைத்தியக்காரி' என்று கிண்டல் செய்தனர்.
திருடன், கள்வன் என்று ஒருவனை இழிவாய்க் கூறுவார்கள். ஆனால் அந்தப் பட்டத்தையும் முருகன் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான். அருணகிரி முருகனின் கருணையை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறார். செம்மான் மகளை மணந்த மணாளன் என்று சொல்லாமல் திருடும் திருடன் என்று சொல்வதன் மூலம். இதற்கு நேரடியாக கந்த புராணத்தில் வேடர்க்கரசன் அவ்வாறு பெருமானை விளித்தமையால் அதே சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார் என்பதைவிட, தன்னையே நினைத்து உருகும் பக்தர்களின் மேல் முருகனுக்கு பேராசை என்பதைத் தான் குறிப்பால் சொல்கிறார் எனக்கொள்ள வேண்டும். அவனுக்கும் அவனடியார்க்கும் நடுவே யார் குறுக்கே நின்றாலும், நடுநிசியில் ஒரு திருடனைப் போல தெரியாமல் வந்து கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு, தன் அடியாரைக் கவர்ந்து சென்று தன்னுள் கலக்கச் செய்துவிடுவான் குமரன்.
வள்ளி என்ன தவயோகியா? இல்லை பூஜை பல செய்தாளா? கோயில் கோயிலாக சுற்றினாளா? மந்திர தந்திரங்கள் கற்றுத்தேர்ந்தவளா? இல்லியே. இவையொன்றுமேயில்லாத சாதாரண குறமகள். அவளுக்கு பின் எங்கேயிருந்து இந்த கீர்த்தி? எவ்வித பிரதிபலனும் எதிர்பாராத உண்மையான பக்திக்குத்தான் இறைவன் அடிமை என்பது தெளிவு ஆகிறது. நந்தனுக்குக்காக தன் உற்ற வாகனமான நந்திக்கே 'நகர்ந்து நில்' என்று பரமேஸ்வரன் ஆக்ஞையிடவில்லையா? சிதம்பரத்தையே பார்த்தறியாத, வேதத்தையே கேட்டறியாத பாமரனுக்கு சிவயோகம் அளித்துக்காக்கவில்லையா?
முருகன் சிவகுமரனேயல்ல, சிவனே தான் என்கிறது கந்தபுராணம். அதனாலே தான் அவன் பிறவான் இறவான். என்றுமே பிறப்பில்லாதவன். என்றென்றைக்கும் இறப்பில்லாதவன். சர்வேஸ்வரன் அவனே.
//சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே//
சும்மா இரு சொல் அற - என்று எளிய தமிழில் திருவண்ணாமலையில் கந்தன் அருணகிரிநாதருக்கு உபதேசித்தான். கேட்பதற்கு மிக எளிதான உபதேசம் தான். நடைமுறைப்படுத்துவதில் தான் பெருஞ்சிக்கல். ஒரு நிமிடம் கண்ணைமூடி சும்மா இருக்க முயற்சி செய்தாலே தெரியும். இந்த மனம் ஒரு குரங்கு விடயத்தை பல இடங்களில் சொல்லியாகிவிட்டது. வீட்டில் ஜாங்கிரி வாங்கி வைத்திருந்தார்களானால், இப்போதைக்கு ஜாங்கிரி சாப்பிடுவது ஒன்றேதான் இவ்வுலகிலேயே மிகப்பெரிய பொருளாய்த் தெரியும் நமக்கு. ஜாங்கிரி சாப்பிட்டு திகட்டிவிட்டதென்றால் அடுத்து விடயத்துக்குத்தாவும் நம் மனம். காரைப் பார்த்தால் கார் வாங்கவேண்டும், வீடு பார்த்தால் வீடு கட்டவேண்டும் என்று கிளைக்கு கிளை தாவும் மந்தியைப் போன்றதுதான் மனிதமனம். இப்படி ஒரு சமயத்தில் இருக்கும் ஆசை மட்டுமே அப்போதைக்கு உலகிலேயே மிகவும் முக்கியமானதாய் தெரியும். இதுதான் அ(ந்த) மா பொருள்.
ஆனால் வாயைக்கட்டி, மனத்தைக்கட்டி, மெய்யைக்கட்டி முருகன் அறிவுரைப்படி இருந்தவுடன் இந்த மா பொருட்கள் ஒன்றுமே தெரியாமல் சிந்தையிலிருந்து மறைந்து போய், முருகனுடன் கலந்துவிட்ட தவயோகநிலை ஒன்று மட்டுமே நிலைக்கிறதே! இது என்ன ஆச்சரியம் என்று வினவுகிறார் அருணகிரியார்.
------------------------------------------------
சிவந்த மானின் மகளைக் கள்வனைப்போல திருடியவன், அகிலாண்ட கோடிக்கும் பெருமான் முருகன், அவன் பிறப்பில்லாதவன், இறப்பில்லாதவன். அவன் சும்மா இரு சொல் அற என்று சொன்ன நொடியே, நான் இதுவரை பெரியவை, முக்கியமானவை என்று எண்ணிவந்த உலக வஸ்துக்கள் அனைத்தும் மறந்து அறியாமல் போனேனே! அவனுளே கலந்த மோன நிலை மட்டுமே கண்டேனே! என்ன ஆச்சரியம்!
Tuesday, September 05, 2006
11. உணர்வித்து உய்வித்தவன்!
கூகாஎன என்கிளை கூடியழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
த்யாகாசுர லோக சிகாமணியே (11)
//நாகாசல வேலவ! நாலுகவித் த்யாகா! சுரலோக சிகாமணியே!//
அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய புண்ணியத்தலமான திருச்செங்கோட்டிற்கு நாகாசலம் என்ற பெயரும் உண்டு. அதற்கான காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். முன்பொரு சமயம், ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்குமிடையில் சண்டை மூண்டது. மகாமேரு மலையை ஆதிசேஷன் சுற்றிக்கொள்ள, கடுமையாக நடந்த போரின் முடிவில் வாயு தன் வலியால் ஆதிசேஷனை ஊதித்தள்ள அவர் விழுந்த குன்று அவர் குறுதிபட்டு செந்நிறமாக மாறியதால் திருச்செங்குன்றூர் ஆயிற்று. அதுவே சேஷாசலம் என்றும் நாகாசலம் என்று வழங்கப்பட்டது. திருமலைக்கும் சேஷாசலம் என்ற பெயர் உண்டு, ஆனால் அருணகிரி குறிப்பிடுவது நாகாசலமான திருச்செங்கோடு என்றுதான் நினைக்கிறேன். அந்த ஊரின் செங்கோட்டு வேலவர் மிக பிரசித்தம்.
நாலு கவித் த்யாகா - நான்கு விதமான கவிதை வகைகள் தமிழில் உண்டு. அவற்றை தருபவனே! தென்னாடுடைய சிவனல்லவா. அவர் அம்சத்துடன் கூடிய குமரன் தமிழ்க்கடவுளல்லவா. சிலருக்கு பேச்சே வராது. பலருக்கு வரும். சிலருக்கு - இவருக்கு ஏன் வருகிறது என்று மற்றவர் மனம் குமுறும், சிலர் பேச ஆரம்பித்தாலோ மற்றவரெல்லாம் வாயை மூடிக்கொள்வர். இப்படி பலவிதமாய் பேசக்கூடிய மொழிப்புலமை பெற்றோர் இப்பூமியில் உண்டு. ஆனால், ஆயிரம் பேர் பாடினாலும் இறைவனாகத் தேடிவந்து 'இவன் பாடி நாம் கேட்கவேண்டுமே' என்கிற கருணையாலும், ஆசையாலும் வந்து சிலருக்கு தீட்சை கொடுப்பதுண்டு. அவர்களெல்லாம் புண்ணியவான்கள். அப்படி கொடுக்கப்பட்டவர் அருணகிரி. நாலுவிதமான கவிதைவகைகளையும் எனக்கு தந்த தயாபரா!
சுரலோக சிகாமணியே - "அசுரர்"க்கு எதிர்ப்பதம் சுரர். சுரர் என்றால் தேவர்கள். தேவர்களின் லோகங்களுக்கும் அவற்றில் வாழ்வோர்க்கும் முதன்மையான தலைவனே! மற்ற மேக்கப்பெல்லாம் போட்டுமுடித்துவிட்டு கடைசியாக பதவிசாக முடியில் சூடிக்கொள்ளும் ஆபரணம் தான் சிகாமணி. அதுவே மேலானது. மற்றவற்றிற்கும் மேலாய் இருப்பதனால் மட்டுமல்ல. மேன்மை பொருந்தியதாலும் தான்.
//கூகா என என்கிளை கூடி அழப்போகா வகை மெய்ப்பொருள் பேசியவா//
சென்ற பாடலில் தன்னை அழைத்துச் செல்ல யமனின் தூதர்கள் வருகையில் எதிரே வந்து ஆட்கொண்டருள்வாய் என்று அழைத்தார். ஒருவர் இறந்தால் சுற்றத்தவரும் உறவினரும் கூடி அழுது ஒப்பாரி பாடுவது வழக்கம். ஆன்மாவைப் பொறுத்தவரை இறப்பும் பிறப்பும் ஒன்றுதானே. உடல் தானே அழிகிறது. இங்கே இறக்கும் ஆன்மா, அது செய்த புண்ணிய பலன்களுக்கு ஏற்றவாறு மறுபிறப்போ, சிவானுபூதியோ அடைகிறது. ஒரு ஆன்மா பிறக்கையில் சந்தோஷப்படும் நாம், அது இறக்கையில் வருத்தப்படுகிறோம். பிறக்கையில் உண்மையில் பெற்றோர்கள் சந்தோஷப்படவேண்டிய காரியம் தான். வம்சம் வளர்க்க சந்ததி பிறந்ததை நினைத்தா சந்தோஷமா படவேண்டும்? அது மீண்டும் பந்தபாசங்களுக்கல்லவா நம்மை இட்டுச்செல்லும்? பிறந்த இந்த உயிருக்கு நம்மால் இயன்ற அளவு நற்புத்தியையும் நற்பண்பையும் கற்றுக்கொடுத்து, ஒரு ஆன்மாவை இந்த ஜென்மத்திலேயே கடைத்தேற வழிவகை செய்ய பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறதே; அந்தப் பரம்பொருளே "இந்த ஆத்மாவிற்கு ஒரு நல்லவழியை காட்டு என்று நம்மையும் நம்பிக்கொடுத்திருக்கிறானே" என்றல்லவா சந்தோஷப்படவேண்டும்.
இறக்கையில் யார் அழுவார்கள்? 'அய்யோ, தொண்ணூறு வயசு இருந்தாரே, பண்ணது முழுக்க பாவம். செய்தது முழுக்க துரோகம். இவராத்மா கடைத்தேற இன்னொரு ஜென்மா பிறக்க வேண்டியிருக்குமே' என்று சுற்றத்தவர்கள் எண்ணுகையில் தான் அய்யோ அம்மாவென்று கூச்சல் போட்டு (கூ கா) அழவேண்டும். அப்படி வாழ்க்கையையே பாவமாக கழித்தவர்களின் சுற்றத்தவர்கள் அழுவதிலலும் நியாயமுண்டு.
அடியாராய் ஆக்கிக்கொள்வதும் பின் அவரை தன்னிடம் அழைத்துக்கொள்வதும் இறைவன் சித்தம் அல்லவா. ஒரு அடியார் இறந்தால் கூச்சலிட்டா அழுவார்கள்? 'புண்ணியவான், சீக்கிரமே சிவலோகம் போய்ச்சேர்ந்துவிட்டாரே.. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இவரிருந்த நம் வீட்டிற்கு சாநித்தியம் இன்னும் சற்று அதிகமாகியிருக்குமே. பூவுடன் சேர்ந்த நாரைப்போல நாமும் இன்னும் கொஞ்சம் நற்கதி அடைந்திருக்கலாமே' என்று உருகுவர். அவர்களின் உருக்கத்தில் ஒப்பாரி இருக்காது. ஆதங்கமே இருக்கும். அப்படி என்னையும் அடியாராக்கிக் கொண்டு - என் சுற்றத்தவர் என் ஆத்மா அடுத்த பிறவியில் பாவஜென்மமாய் பிறக்குமே என்று எண்ணி எண்ணி ஒப்பாரி வைத்து அழாத வகையில் - எனக்கு இப்பிறவியிலேயே நற்கதியை, மெய்ப்பொருளைக் காட்டிய தலைவா என்று உருகுகிறார் அருணகிரி.
நற்கதியை நாமும் இப்பிறவியிலேயே அடையலாம். நிதமும் அந்த செங்கோட்டு வேலனைப் பணிந்தால்.
--
திருச்செங்கோட்டு வேலவா! தேவலோகத்தின் இறைவா! தமிழள்ளித்தந்த தலைவா! மறுபிறப்பென்று ஒன்று இல்லாமல், என்னையும் அடியாராக்கிக்கொண்டு, என் சுற்றத்தவர் நான் இறக்கையில் என் ஆன்மா முக்தி பெறுமோ என்று கூச்சலிட்டு ஒப்பாரி வைக்காமல் - எனக்கு பரமானந்தத்தை உபதேசம் செய்த ஞானப்பரம்பொருளே!
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
த்யாகாசுர லோக சிகாமணியே (11)
//நாகாசல வேலவ! நாலுகவித் த்யாகா! சுரலோக சிகாமணியே!//
அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய புண்ணியத்தலமான திருச்செங்கோட்டிற்கு நாகாசலம் என்ற பெயரும் உண்டு. அதற்கான காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். முன்பொரு சமயம், ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்குமிடையில் சண்டை மூண்டது. மகாமேரு மலையை ஆதிசேஷன் சுற்றிக்கொள்ள, கடுமையாக நடந்த போரின் முடிவில் வாயு தன் வலியால் ஆதிசேஷனை ஊதித்தள்ள அவர் விழுந்த குன்று அவர் குறுதிபட்டு செந்நிறமாக மாறியதால் திருச்செங்குன்றூர் ஆயிற்று. அதுவே சேஷாசலம் என்றும் நாகாசலம் என்று வழங்கப்பட்டது. திருமலைக்கும் சேஷாசலம் என்ற பெயர் உண்டு, ஆனால் அருணகிரி குறிப்பிடுவது நாகாசலமான திருச்செங்கோடு என்றுதான் நினைக்கிறேன். அந்த ஊரின் செங்கோட்டு வேலவர் மிக பிரசித்தம்.
நாலு கவித் த்யாகா - நான்கு விதமான கவிதை வகைகள் தமிழில் உண்டு. அவற்றை தருபவனே! தென்னாடுடைய சிவனல்லவா. அவர் அம்சத்துடன் கூடிய குமரன் தமிழ்க்கடவுளல்லவா. சிலருக்கு பேச்சே வராது. பலருக்கு வரும். சிலருக்கு - இவருக்கு ஏன் வருகிறது என்று மற்றவர் மனம் குமுறும், சிலர் பேச ஆரம்பித்தாலோ மற்றவரெல்லாம் வாயை மூடிக்கொள்வர். இப்படி பலவிதமாய் பேசக்கூடிய மொழிப்புலமை பெற்றோர் இப்பூமியில் உண்டு. ஆனால், ஆயிரம் பேர் பாடினாலும் இறைவனாகத் தேடிவந்து 'இவன் பாடி நாம் கேட்கவேண்டுமே' என்கிற கருணையாலும், ஆசையாலும் வந்து சிலருக்கு தீட்சை கொடுப்பதுண்டு. அவர்களெல்லாம் புண்ணியவான்கள். அப்படி கொடுக்கப்பட்டவர் அருணகிரி. நாலுவிதமான கவிதைவகைகளையும் எனக்கு தந்த தயாபரா!
சுரலோக சிகாமணியே - "அசுரர்"க்கு எதிர்ப்பதம் சுரர். சுரர் என்றால் தேவர்கள். தேவர்களின் லோகங்களுக்கும் அவற்றில் வாழ்வோர்க்கும் முதன்மையான தலைவனே! மற்ற மேக்கப்பெல்லாம் போட்டுமுடித்துவிட்டு கடைசியாக பதவிசாக முடியில் சூடிக்கொள்ளும் ஆபரணம் தான் சிகாமணி. அதுவே மேலானது. மற்றவற்றிற்கும் மேலாய் இருப்பதனால் மட்டுமல்ல. மேன்மை பொருந்தியதாலும் தான்.
//கூகா என என்கிளை கூடி அழப்போகா வகை மெய்ப்பொருள் பேசியவா//
சென்ற பாடலில் தன்னை அழைத்துச் செல்ல யமனின் தூதர்கள் வருகையில் எதிரே வந்து ஆட்கொண்டருள்வாய் என்று அழைத்தார். ஒருவர் இறந்தால் சுற்றத்தவரும் உறவினரும் கூடி அழுது ஒப்பாரி பாடுவது வழக்கம். ஆன்மாவைப் பொறுத்தவரை இறப்பும் பிறப்பும் ஒன்றுதானே. உடல் தானே அழிகிறது. இங்கே இறக்கும் ஆன்மா, அது செய்த புண்ணிய பலன்களுக்கு ஏற்றவாறு மறுபிறப்போ, சிவானுபூதியோ அடைகிறது. ஒரு ஆன்மா பிறக்கையில் சந்தோஷப்படும் நாம், அது இறக்கையில் வருத்தப்படுகிறோம். பிறக்கையில் உண்மையில் பெற்றோர்கள் சந்தோஷப்படவேண்டிய காரியம் தான். வம்சம் வளர்க்க சந்ததி பிறந்ததை நினைத்தா சந்தோஷமா படவேண்டும்? அது மீண்டும் பந்தபாசங்களுக்கல்லவா நம்மை இட்டுச்செல்லும்? பிறந்த இந்த உயிருக்கு நம்மால் இயன்ற அளவு நற்புத்தியையும் நற்பண்பையும் கற்றுக்கொடுத்து, ஒரு ஆன்மாவை இந்த ஜென்மத்திலேயே கடைத்தேற வழிவகை செய்ய பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறதே; அந்தப் பரம்பொருளே "இந்த ஆத்மாவிற்கு ஒரு நல்லவழியை காட்டு என்று நம்மையும் நம்பிக்கொடுத்திருக்கிறானே" என்றல்லவா சந்தோஷப்படவேண்டும்.
இறக்கையில் யார் அழுவார்கள்? 'அய்யோ, தொண்ணூறு வயசு இருந்தாரே, பண்ணது முழுக்க பாவம். செய்தது முழுக்க துரோகம். இவராத்மா கடைத்தேற இன்னொரு ஜென்மா பிறக்க வேண்டியிருக்குமே' என்று சுற்றத்தவர்கள் எண்ணுகையில் தான் அய்யோ அம்மாவென்று கூச்சல் போட்டு (கூ கா) அழவேண்டும். அப்படி வாழ்க்கையையே பாவமாக கழித்தவர்களின் சுற்றத்தவர்கள் அழுவதிலலும் நியாயமுண்டு.
அடியாராய் ஆக்கிக்கொள்வதும் பின் அவரை தன்னிடம் அழைத்துக்கொள்வதும் இறைவன் சித்தம் அல்லவா. ஒரு அடியார் இறந்தால் கூச்சலிட்டா அழுவார்கள்? 'புண்ணியவான், சீக்கிரமே சிவலோகம் போய்ச்சேர்ந்துவிட்டாரே.. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இவரிருந்த நம் வீட்டிற்கு சாநித்தியம் இன்னும் சற்று அதிகமாகியிருக்குமே. பூவுடன் சேர்ந்த நாரைப்போல நாமும் இன்னும் கொஞ்சம் நற்கதி அடைந்திருக்கலாமே' என்று உருகுவர். அவர்களின் உருக்கத்தில் ஒப்பாரி இருக்காது. ஆதங்கமே இருக்கும். அப்படி என்னையும் அடியாராக்கிக் கொண்டு - என் சுற்றத்தவர் என் ஆத்மா அடுத்த பிறவியில் பாவஜென்மமாய் பிறக்குமே என்று எண்ணி எண்ணி ஒப்பாரி வைத்து அழாத வகையில் - எனக்கு இப்பிறவியிலேயே நற்கதியை, மெய்ப்பொருளைக் காட்டிய தலைவா என்று உருகுகிறார் அருணகிரி.
நற்கதியை நாமும் இப்பிறவியிலேயே அடையலாம். நிதமும் அந்த செங்கோட்டு வேலனைப் பணிந்தால்.
--
திருச்செங்கோட்டு வேலவா! தேவலோகத்தின் இறைவா! தமிழள்ளித்தந்த தலைவா! மறுபிறப்பென்று ஒன்று இல்லாமல், என்னையும் அடியாராக்கிக்கொண்டு, என் சுற்றத்தவர் நான் இறக்கையில் என் ஆன்மா முக்தி பெறுமோ என்று கூச்சலிட்டு ஒப்பாரி வைக்காமல் - எனக்கு பரமானந்தத்தை உபதேசம் செய்த ஞானப்பரம்பொருளே!
Tuesday, August 08, 2006
10. மாயை மடியத் தொட்டான் முருகன்!
கார்மாமிசை காலன் வரிற்கலபத்
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே! (10)
//தார் மார்ப வலாரி தலாரியெனும் சூர்மா மடியத் தொடு வேலவனே//
தார் மார்ப - தார் என்றால் மாலை. அழகிய மாலை அணிந்த மார்பை உடையவா. வலாரி என்பது இந்திரன். வலாசுரன் என்ற அசுரனை அழித்ததால் இந்திரனுக்கு வலாரி என்ற பெயர் உண்டு. சூரபத்மன் இந்திரனுடைய பட்டணத்தைக் கொண்டவன். அதனால் அவன் வலாரியின் தலாரி (தலத்திற்கு). சூரபத்மன் நின்றது மா மர வடிவத்தில். மா வடிவத்தில் உயர்ந்து நின்ற இந்திர லோகத்தை அழித்த சூரனை..
மடியத் தொடு வேலவனே - முருகன் வேலால் அடித்தானா? அவனுடைய ஞானவேல் தொட்டவுடன் ஆணவ மலம் தூளாகி மடிந்தது. அடிக்க வேண்டியிருக்கவில்லை. வேலால் மெதுவாய்த் தொட்டான் முருகன். அதில் அழிந்தவன் சூரனா? இல்லை. சூரன் நற்கதியடைந்து முருகனின் அருகிலேயே என்றென்றும் நிற்கும் அருள் பெற்றான். அழிந்தது அவனின் ஆணவமே. இதைதான் நினைவில் கொள்ளவேண்டும். அவனை துதித்தால் நம்மை காத்து கெடுநிலையிலிருந்து ஏற்றுபவன் கந்தன். நம்மை அழிப்பவன் அல்ல. நம் பாவங்களும், அறியாமையும் தான் அவனைக் கண்டு பயப்படும். நாம் பயப்படத் தேவையில்லை. பக்தி செய்தாலே போதும். எத்தகைய தீய கதியிலிருந்தும் நம்மைக் காத்து தன்னருகிலேயே வைத்துக் கொள்பவன் அவன்.
//கார்மா மிசை காலன் வரின் கலபத்தேர்மா மிசை வந்து எதிரப் படுவாய்//
கார் என்றால் கரிய. கார்மேகம் என்று சொல்கிறோம் இல்லையா? மா என்றால் பெரிய மிருகம். கரிய பெரிய மிருகமான எருமை மீதேறி உயிரை எடுப்பவன் காலன். அவன் சத்தியசீலன். தர்மத்திற்கு நிஜமான தலைவன். நமக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவடைந்தால் அழைத்துச் செல்லவேண்டியது காலனின் கடமை. அதுதான் அவன் தர்மம். அவனைக் கொடியவன் என்றோ அவனிடமிருந்து நம்மைக் காத்திடு என்றோ யாரும் சொல்வதில்லை. (மார்க்கண்டேயர் கதை வேறு, அது இங்கே வேண்டாம்). பொதுவாக காலனிடமிருந்து காத்திடு என்றால் மரணபயத்திலிருந்து நம்மைக் காத்திடு என்றுதான் பொருள். மரணபயம் என்பது எல்லாருக்கும் இருப்பது. என்னைக் கேட்டால் இருப்பது நல்லதுதான். என்னடா இப்படி சொல்லுகிறேனே என்று டென்ஷன் ஆகவேண்டாம்.
இந்த பிறவியில் நல்ல மனிதப் பிறப்பாய் நோய் நொடியின்றி, ஆரோக்கியமான சவுகரியமான வாழ்வை பெற்ற நமக்கு அடுத்த ஜென்மம் என்று இருப்பின் அதில் எதுவாகப் பிறப்போமோ என்று பயம் இருக்கவேண்டாமா? இப்போதைய சுகமான மனித வாழ்க்கையாய் இல்லாமல் தினந்தோறும் மற்ற விலங்குகளுக்கு பயந்தோடிக் கொண்டிருக்கும் மானாகவோ, முயலாகவோ பிறக்க நேர்ந்தால்? இந்த நற்பிறவியிலேயே ஆண்டவனை ஒரு நொடி கூட நினைக்காத மனம், அப்போது மட்டும் நினைக்குமா? அதனால் மரணபயம் என்பது இந்தப் பிறவியிலேயே முருகனை அடைய இன்னும் சிரத்தையுடன் நாம் முயற்சி செய்ய உதவுமானால் இருப்பதில் தவறே இல்லை அல்லவா?
பாடலில் சொல்வது கரிய எருமையில் காலன் என்னை அழைத்துப்போக வருகையில், கலபத்தேர் - அழகான மயில் வாகனத்தில் நீ என்னெதிரில் தோன்றி ஆட்கொள்ளவேண்டும் என்று பாடுகிறார் அருணகிரி. அவருக்கு காரியசித்தி ஆகிவிட்டது. நமக்கு? தினமும் பாடிப் பிரார்த்தனை செய்யவேண்டிய பாடல்களில் ஒன்று இது.
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே! (10)
//தார் மார்ப வலாரி தலாரியெனும் சூர்மா மடியத் தொடு வேலவனே//
தார் மார்ப - தார் என்றால் மாலை. அழகிய மாலை அணிந்த மார்பை உடையவா. வலாரி என்பது இந்திரன். வலாசுரன் என்ற அசுரனை அழித்ததால் இந்திரனுக்கு வலாரி என்ற பெயர் உண்டு. சூரபத்மன் இந்திரனுடைய பட்டணத்தைக் கொண்டவன். அதனால் அவன் வலாரியின் தலாரி (தலத்திற்கு). சூரபத்மன் நின்றது மா மர வடிவத்தில். மா வடிவத்தில் உயர்ந்து நின்ற இந்திர லோகத்தை அழித்த சூரனை..
மடியத் தொடு வேலவனே - முருகன் வேலால் அடித்தானா? அவனுடைய ஞானவேல் தொட்டவுடன் ஆணவ மலம் தூளாகி மடிந்தது. அடிக்க வேண்டியிருக்கவில்லை. வேலால் மெதுவாய்த் தொட்டான் முருகன். அதில் அழிந்தவன் சூரனா? இல்லை. சூரன் நற்கதியடைந்து முருகனின் அருகிலேயே என்றென்றும் நிற்கும் அருள் பெற்றான். அழிந்தது அவனின் ஆணவமே. இதைதான் நினைவில் கொள்ளவேண்டும். அவனை துதித்தால் நம்மை காத்து கெடுநிலையிலிருந்து ஏற்றுபவன் கந்தன். நம்மை அழிப்பவன் அல்ல. நம் பாவங்களும், அறியாமையும் தான் அவனைக் கண்டு பயப்படும். நாம் பயப்படத் தேவையில்லை. பக்தி செய்தாலே போதும். எத்தகைய தீய கதியிலிருந்தும் நம்மைக் காத்து தன்னருகிலேயே வைத்துக் கொள்பவன் அவன்.
//கார்மா மிசை காலன் வரின் கலபத்தேர்மா மிசை வந்து எதிரப் படுவாய்//
கார் என்றால் கரிய. கார்மேகம் என்று சொல்கிறோம் இல்லையா? மா என்றால் பெரிய மிருகம். கரிய பெரிய மிருகமான எருமை மீதேறி உயிரை எடுப்பவன் காலன். அவன் சத்தியசீலன். தர்மத்திற்கு நிஜமான தலைவன். நமக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவடைந்தால் அழைத்துச் செல்லவேண்டியது காலனின் கடமை. அதுதான் அவன் தர்மம். அவனைக் கொடியவன் என்றோ அவனிடமிருந்து நம்மைக் காத்திடு என்றோ யாரும் சொல்வதில்லை. (மார்க்கண்டேயர் கதை வேறு, அது இங்கே வேண்டாம்). பொதுவாக காலனிடமிருந்து காத்திடு என்றால் மரணபயத்திலிருந்து நம்மைக் காத்திடு என்றுதான் பொருள். மரணபயம் என்பது எல்லாருக்கும் இருப்பது. என்னைக் கேட்டால் இருப்பது நல்லதுதான். என்னடா இப்படி சொல்லுகிறேனே என்று டென்ஷன் ஆகவேண்டாம்.
இந்த பிறவியில் நல்ல மனிதப் பிறப்பாய் நோய் நொடியின்றி, ஆரோக்கியமான சவுகரியமான வாழ்வை பெற்ற நமக்கு அடுத்த ஜென்மம் என்று இருப்பின் அதில் எதுவாகப் பிறப்போமோ என்று பயம் இருக்கவேண்டாமா? இப்போதைய சுகமான மனித வாழ்க்கையாய் இல்லாமல் தினந்தோறும் மற்ற விலங்குகளுக்கு பயந்தோடிக் கொண்டிருக்கும் மானாகவோ, முயலாகவோ பிறக்க நேர்ந்தால்? இந்த நற்பிறவியிலேயே ஆண்டவனை ஒரு நொடி கூட நினைக்காத மனம், அப்போது மட்டும் நினைக்குமா? அதனால் மரணபயம் என்பது இந்தப் பிறவியிலேயே முருகனை அடைய இன்னும் சிரத்தையுடன் நாம் முயற்சி செய்ய உதவுமானால் இருப்பதில் தவறே இல்லை அல்லவா?
பாடலில் சொல்வது கரிய எருமையில் காலன் என்னை அழைத்துப்போக வருகையில், கலபத்தேர் - அழகான மயில் வாகனத்தில் நீ என்னெதிரில் தோன்றி ஆட்கொள்ளவேண்டும் என்று பாடுகிறார் அருணகிரி. அவருக்கு காரியசித்தி ஆகிவிட்டது. நமக்கு? தினமும் பாடிப் பிரார்த்தனை செய்யவேண்டிய பாடல்களில் ஒன்று இது.
Wednesday, July 26, 2006
9. ஊசல் படும் பரிசு ஒழியுமா?
மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டூசல் படும்பரி சென்றொழிவேன்
தட்டூடற வேல்சயிலத் தெறியும்
நீட்டூர நிராகுலநிர்ப் பயனே!
//மட்டு ஊர் குழல் மங்கையர் மையல் வலைப்பட்டு ஊசல் படும் பரிசு என்றொழிவேன்?//
மட்டு - போதையூட்டும் நறுமணம். இந்த மாதிரி மட்டு ஊர் குழலாம். மட்டு ஊறுற மாதிரி குழல் மங்கையர்கிட்டதானே இருக்கும்? போதையூட்டும்னு இங்க பொருள்ள சேர்த்திருக்கே, அத நினவுல வச்சுக்கணும். திருவிளையாடல் பாட்டு மாதிரி இயற்கையிலேயே மணமிருந்ததோ, இல்லை செண்ட் போட்டுதான் வந்ததோ... வாசனையா இருக்கறது மங்கையரின் கூந்தல் தான். ஆனா, நற்குணம் உடைய பெண்களின் கூந்தலில் நறுமணம் இருக்கும். போதை இருக்காது. போதையூட்டும்படியான நறுமணத்தின் தேவை விலைமாதர்களுக்கே.
இந்த மாதிரி மயக்கும் நறுமணத்தை கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் மையல்வலையில் - சிலந்திகள் வலைபின்னி வச்சுருக்கும். அதுல போய் மாட்டிக்கறது பூச்சிகள் தானேயொழிய, சிலந்திகள் பூச்சிகளை பிடிக்கறதில்லை. வலைன்னாலே இதுதானே விசேஷம். ஈட்டியோ, அம்போ வேறொருவர் எய்து நம்மளை வீழ்த்த வேண்டாம். வலையில் விழுவதற்கு வேற வெளிகாரணிகளை blame செய்ய முடியாது. நாம் விழுவதற்கு நாமே தான் காரணமாகத்தான் இருக்க முடியும். நமக்கு அடுத்தவர்கள் மூலம் வரும் துன்பங்கள், கர்மபலன்கள் ஒருபுறம் என்றால் நாமே போய் விழும் வலைகள் மற்றவை. அவற்றில் முக்கியமானது காமம். இப்படி ஒருவன் சுயமாக போய் காமத்திலே விழுவதனாலேதான் காமவலை என்று பெயர் வைத்தார்கள். இதுவே இயல்பாய்த் தோன்றும் காதலை வருணிக்க காமபானம் தாக்கிற்று என்று சொல்வோம்.
ஆனா, மனித மனத்தோட இயல்ப அழகா சொல்லிருக்கார் சுவாமிகள். வலையில்பட்டு ஊசல் படும் பரிசு என்று ஒழிவேன்னு கேக்கறார். ஊசல்னா - ஊஞ்சல் மாதிரியான ஆட்டம்.
ஊஞ்சல் - அலுக்காத மகிழ்வு தரும் விளையாட்டு இல்லையா? கூட ஒருத்தர் ஆடக்கிடச்சுட்டா கேக்கவே வேணாம். ஆனா, ஊஞ்சல் விளையாட்டுல இருக்கற இடத்த விட்டு நகரவே மாட்டோம். முன்னயும் பின்னயும் போகிறா மாதிரி இருக்கும். எவ்வளவுக்கெவ்வளவு முன்னாடி போறோமோ, அவ்வளவு தூரம் மறுபடியும் நம்மை ஊஞ்சல் கயிறூ இழுத்து பின்னாடி தள்ளும். அதேபோல காமவலையில் விழுந்தவனையும் தப்பித்து போக முடியாதவாறு சிலந்தி வலையினைப் போல பிடித்துக்கொள்ளும்.
பொதுவாகவே குற்ற உணர்ச்சி என்பது மனித இயல்பில் மிகக்குறுகிய காலம் தான் நம் நினைவில் நிற்கும். இப்போ ஒரு திருட்டைச் செய்தோமானால், திருடிய ஐந்து நிமிடத்திற்கு திக் திக் என்று வேகமாக அடித்துக்கொள்ளும் மனது, அடுத்த ரெண்டு மணி நேரத்தில் ஒன்றும்தான் நடக்கவில்லையே, இன்னொரு பொருளைத் திருடித்தான் பார்ப்போமே என்று நினைக்கத் தயங்காது. அதுபோல "காமவலையிலிருந்து விடுபட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். ஆனால், அதற்குண்டான திடத்துடனும் ஒழுக்கத்துடனும் என் மனம் தொடர்ந்து நிற்க இயலாமல், மறுபடியும் மறுபடியும் பழைய வலையில் சிக்கிய நிலைக்கே சென்று ஊசலாடுவதைப் போல் ஆடுகிறேனே. இது என்று தீரும்?" என்று அருணகிரியார் கேட்கிறார். 'ருசி கண்ட பூனை' என்று நாம் சொல்கிறோமே. அதுபோலத்தான். இது இயல்பு. இத்தகைய வலைகளிலிருந்து மீண்டு வருவது இறையருளன்றி நடக்காது.
//தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்பயனே//சயிலம் என்றால் மலை. இங்கே குறிக்கப்படுவது கிரவுஞ்ச மலை. தட்டுன்னா தடைகள். தட்டுகளையெல்லாம் ஊடுருவி, அவற்றை அற்றுப்போக செய்யும் படியான வேலாயுதத்தை வைத்து சூரனை அழிக்க தடையாய் வந்த கிரவுஞ்சமென்னும் பர்வதத்தையே தூளாக்கிய வடிவேலா! இந்த சிலந்தி வலையைப் போன்ற காமவலையை தகர்த்தெறிய எவ்வளவு நேரம் ஆகும். ஏன் இன்னும் செய்யாமல் என்னை இப்படி ஊசலாட விட்டு விளையாடுகிறாய்?
நிராகுலனே - என்றும் துன்பம் என்பதே இல்லாமல் இருப்பவனே. நிர்பயனே - ஏதொன்றுக்கும் பயமொன்று இல்லாதவனே..
-------------
கிரவுஞ்ச மலையை அழித்தவா! துன்பமில்லாதவா! பயமற்றவா! முருகா! காமவலையில் விழுந்து ஊசலில் தத்தளிக்கும் என் துன்ப நிலை என்று அழியும்?
பட்டூசல் படும்பரி சென்றொழிவேன்
தட்டூடற வேல்சயிலத் தெறியும்
நீட்டூர நிராகுலநிர்ப் பயனே!
//மட்டு ஊர் குழல் மங்கையர் மையல் வலைப்பட்டு ஊசல் படும் பரிசு என்றொழிவேன்?//
மட்டு - போதையூட்டும் நறுமணம். இந்த மாதிரி மட்டு ஊர் குழலாம். மட்டு ஊறுற மாதிரி குழல் மங்கையர்கிட்டதானே இருக்கும்? போதையூட்டும்னு இங்க பொருள்ள சேர்த்திருக்கே, அத நினவுல வச்சுக்கணும். திருவிளையாடல் பாட்டு மாதிரி இயற்கையிலேயே மணமிருந்ததோ, இல்லை செண்ட் போட்டுதான் வந்ததோ... வாசனையா இருக்கறது மங்கையரின் கூந்தல் தான். ஆனா, நற்குணம் உடைய பெண்களின் கூந்தலில் நறுமணம் இருக்கும். போதை இருக்காது. போதையூட்டும்படியான நறுமணத்தின் தேவை விலைமாதர்களுக்கே.
இந்த மாதிரி மயக்கும் நறுமணத்தை கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் மையல்வலையில் - சிலந்திகள் வலைபின்னி வச்சுருக்கும். அதுல போய் மாட்டிக்கறது பூச்சிகள் தானேயொழிய, சிலந்திகள் பூச்சிகளை பிடிக்கறதில்லை. வலைன்னாலே இதுதானே விசேஷம். ஈட்டியோ, அம்போ வேறொருவர் எய்து நம்மளை வீழ்த்த வேண்டாம். வலையில் விழுவதற்கு வேற வெளிகாரணிகளை blame செய்ய முடியாது. நாம் விழுவதற்கு நாமே தான் காரணமாகத்தான் இருக்க முடியும். நமக்கு அடுத்தவர்கள் மூலம் வரும் துன்பங்கள், கர்மபலன்கள் ஒருபுறம் என்றால் நாமே போய் விழும் வலைகள் மற்றவை. அவற்றில் முக்கியமானது காமம். இப்படி ஒருவன் சுயமாக போய் காமத்திலே விழுவதனாலேதான் காமவலை என்று பெயர் வைத்தார்கள். இதுவே இயல்பாய்த் தோன்றும் காதலை வருணிக்க காமபானம் தாக்கிற்று என்று சொல்வோம்.
ஆனா, மனித மனத்தோட இயல்ப அழகா சொல்லிருக்கார் சுவாமிகள். வலையில்பட்டு ஊசல் படும் பரிசு என்று ஒழிவேன்னு கேக்கறார். ஊசல்னா - ஊஞ்சல் மாதிரியான ஆட்டம்.
ஊஞ்சல் - அலுக்காத மகிழ்வு தரும் விளையாட்டு இல்லையா? கூட ஒருத்தர் ஆடக்கிடச்சுட்டா கேக்கவே வேணாம். ஆனா, ஊஞ்சல் விளையாட்டுல இருக்கற இடத்த விட்டு நகரவே மாட்டோம். முன்னயும் பின்னயும் போகிறா மாதிரி இருக்கும். எவ்வளவுக்கெவ்வளவு முன்னாடி போறோமோ, அவ்வளவு தூரம் மறுபடியும் நம்மை ஊஞ்சல் கயிறூ இழுத்து பின்னாடி தள்ளும். அதேபோல காமவலையில் விழுந்தவனையும் தப்பித்து போக முடியாதவாறு சிலந்தி வலையினைப் போல பிடித்துக்கொள்ளும்.
பொதுவாகவே குற்ற உணர்ச்சி என்பது மனித இயல்பில் மிகக்குறுகிய காலம் தான் நம் நினைவில் நிற்கும். இப்போ ஒரு திருட்டைச் செய்தோமானால், திருடிய ஐந்து நிமிடத்திற்கு திக் திக் என்று வேகமாக அடித்துக்கொள்ளும் மனது, அடுத்த ரெண்டு மணி நேரத்தில் ஒன்றும்தான் நடக்கவில்லையே, இன்னொரு பொருளைத் திருடித்தான் பார்ப்போமே என்று நினைக்கத் தயங்காது. அதுபோல "காமவலையிலிருந்து விடுபட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். ஆனால், அதற்குண்டான திடத்துடனும் ஒழுக்கத்துடனும் என் மனம் தொடர்ந்து நிற்க இயலாமல், மறுபடியும் மறுபடியும் பழைய வலையில் சிக்கிய நிலைக்கே சென்று ஊசலாடுவதைப் போல் ஆடுகிறேனே. இது என்று தீரும்?" என்று அருணகிரியார் கேட்கிறார். 'ருசி கண்ட பூனை' என்று நாம் சொல்கிறோமே. அதுபோலத்தான். இது இயல்பு. இத்தகைய வலைகளிலிருந்து மீண்டு வருவது இறையருளன்றி நடக்காது.
//தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்பயனே//சயிலம் என்றால் மலை. இங்கே குறிக்கப்படுவது கிரவுஞ்ச மலை. தட்டுன்னா தடைகள். தட்டுகளையெல்லாம் ஊடுருவி, அவற்றை அற்றுப்போக செய்யும் படியான வேலாயுதத்தை வைத்து சூரனை அழிக்க தடையாய் வந்த கிரவுஞ்சமென்னும் பர்வதத்தையே தூளாக்கிய வடிவேலா! இந்த சிலந்தி வலையைப் போன்ற காமவலையை தகர்த்தெறிய எவ்வளவு நேரம் ஆகும். ஏன் இன்னும் செய்யாமல் என்னை இப்படி ஊசலாட விட்டு விளையாடுகிறாய்?
நிராகுலனே - என்றும் துன்பம் என்பதே இல்லாமல் இருப்பவனே. நிர்பயனே - ஏதொன்றுக்கும் பயமொன்று இல்லாதவனே..
-------------
கிரவுஞ்ச மலையை அழித்தவா! துன்பமில்லாதவா! பயமற்றவா! முருகா! காமவலையில் விழுந்து ஊசலில் தத்தளிக்கும் என் துன்ப நிலை என்று அழியும்?
Tuesday, April 18, 2006
8. பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா!
அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. (8)
//அமரும் பதிகேள் அகம் ஆம் எனும் இப்பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா//
அமரும் பதி - நாம் இருக்கற ஊர். கேள் னா நம் சொந்தங்கள். யாதும் ஊரே நியாபகம் வருதில்லையா? அகமாம் - அகம்+ஆம் - அகம் கறது இங்க குறிக்கறது நம் மனத்தை, நாம் என்னும் எண்ணத்தை. இப்போ மேல படிக்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம் பண்ணிப்பாருங்க. இப்போதைக்கு நீங்க எங்க இருக்கீங்க, என்ன சம்பாதிக்கறீங்க, ஸ்டேட்டஸ் இன்னபிற, எவ்ளோ வசதி வாய்ப்புகளோட இருக்கீங்கன்னெல்லாம் நினச்சு பாருங்க ஒரு நிமிஷம். சுகமா இருக்கா? எல்லாருக்கும் சுகமா இருக்கறதுதானே.. தப்பில்லை. உங்க மொபைல் போனிலோ, கணினியோ .. அதுல காலெண்டரத் தொறங்க. கொஞ்சம் டேட் மாத்துங்க. என்னோட விண்டோஸ் XP-ல 2099 ஆம் வருஷம் வரை இருக்கு. 2099-ல நான் இருக்கப்போறேனா? இல்லை என்னையப் பத்தி யாராவதுதான் ஒருநொடி யோசிக்க போறாங்களா? இப்போ நான் பெருமையா ஸொஸைட்டில இதுவாக்கும்னு தானே நாமெல்லாம் நினச்சுகிட்டிருக்கோம். அதுவே 2099 வேண்டாம், 2050 வரைக்குமாவது தாங்குமா? நம்ம பதவியும் பணமும் ஆடம்பரமும்? எதுக்கு காலெண்டர் பாக்கச் சொன்னேன்னா, வெறும்ன நினச்சு பாத்தா பெரிய விஷயமா இது தெரியது. அதுவே இதே ஏப்ரல் 17 ஆம் தேதின்னு ஒண்ணு 2099 லேயும் வரப்போது. அப்போ இப்ப நம்ம கிட்ட இருந்ததெல்லாம் எங்க போச்சு? நாம தான் எங்க போனோம்? இல்லை, நம்மகிட்ட இப்போ இருக்கறதெல்லாம் பொய்யா? னு நினைக்கத் தோணும்.
இது எதுவுமே நிரந்தரமில்லை, வெறும் மாயைங்கறதுதான் உண்மை. அதப் புரிஞ்சுக்கிட்டாலே இறைவனை பாதியடைஞ்சா மாதிரிதான். இதத்தான் என் ஊர், என் சொந்தம், நான் என்று எனக்குஇருக்கும் பிரமைகள் எல்லாம் முற்றிலும் கெட உண்மையான பொருளை, எது நிரந்தரமானதென்று என்னிடம் பேசியவான்னு முருகனைப் பாடறாரு இங்கே.
//குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே//
அடுத்த வரிக்கு வருவோம் இங்கே. இதில் மூன்று வித adjectives உபயோகப்படுத்தறாரு. குமரன். இதுக்கு பொருள் தேவையில்லை. கிரிராச குமாரி - நம்ம பர்வத ராஜனோட பொண்ணான பார்வதி. அவங்களோட மகனே.
சமரம் பொரு தானவ நாசகனே - போரிட வந்த அசுரர்களை அழித்தவனே.
சரி.. ஏன் இப்படி மூன்று உருவங்கள் கொடுக்கிறார் அருணகிரி? எது மெய்ப்பொருள் என்று அசரீரியாய் கந்தன் பேசவில்லையே. உங்களுக்கு எப்படியோ? அசரீரியெல்லாம் இந்தக்காலத்துல கேட்டா, யாராவது லவுட் ஸ்பீக்கர் வச்சு விளையாடறாங்களோன்னு நினச்சுட்டு போயிடுவேன். அப்படியெல்லாம் PA வில் அறிவிக்காமல், இங்க பாருங்க, கந்தன் என்ன செய்யறான்னா, வேலை மெனக்கெட்டு அருணகிரியும் உண்மையத் தெரிஞ்சுக்கணுமேங்கற ஆசையில் அவரும் உணரக்கூடிய ஒரு சிறு உருவம் எடுத்துகிட்டு நேர்ல வந்து, எது நிரந்தரம் எது உண்மையான பொருள்னு சொல்லிட்டு போயிருக்கான். அவருக்குச் சொன்னவன், நமக்கும் சொல்வான். அவரைப் போலவே நிதமும் அவன் தாள் பணிந்தால்.
----
பார்வதியின் மகனே! குமரனே! போரிடவந்த சூரரை அழித்தவனே! என் ஊர், என் சுற்றம், நான் என்பது மாதிரியான உலக மாயைகள் என்னைவிட்டு அகன்றொழிந்திட மெய்ப்பொருளை பேசியவா!
--------
கொஞ்சம் நாட்களாக வேலை காரணமாக முன்பு போல் பதிய முடிவதில்லை. பொதுப்பாட்டு மெதுப்பாட்டாய் ஆனதுக்கு அதான் காரணம். கூடிய சீக்கிரம் திரும்ப பார்முக்கு வருவேன்னு நம்பறேன். பாப்போம்.
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. (8)
//அமரும் பதிகேள் அகம் ஆம் எனும் இப்பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா//
அமரும் பதி - நாம் இருக்கற ஊர். கேள் னா நம் சொந்தங்கள். யாதும் ஊரே நியாபகம் வருதில்லையா? அகமாம் - அகம்+ஆம் - அகம் கறது இங்க குறிக்கறது நம் மனத்தை, நாம் என்னும் எண்ணத்தை. இப்போ மேல படிக்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம் பண்ணிப்பாருங்க. இப்போதைக்கு நீங்க எங்க இருக்கீங்க, என்ன சம்பாதிக்கறீங்க, ஸ்டேட்டஸ் இன்னபிற, எவ்ளோ வசதி வாய்ப்புகளோட இருக்கீங்கன்னெல்லாம் நினச்சு பாருங்க ஒரு நிமிஷம். சுகமா இருக்கா? எல்லாருக்கும் சுகமா இருக்கறதுதானே.. தப்பில்லை. உங்க மொபைல் போனிலோ, கணினியோ .. அதுல காலெண்டரத் தொறங்க. கொஞ்சம் டேட் மாத்துங்க. என்னோட விண்டோஸ் XP-ல 2099 ஆம் வருஷம் வரை இருக்கு. 2099-ல நான் இருக்கப்போறேனா? இல்லை என்னையப் பத்தி யாராவதுதான் ஒருநொடி யோசிக்க போறாங்களா? இப்போ நான் பெருமையா ஸொஸைட்டில இதுவாக்கும்னு தானே நாமெல்லாம் நினச்சுகிட்டிருக்கோம். அதுவே 2099 வேண்டாம், 2050 வரைக்குமாவது தாங்குமா? நம்ம பதவியும் பணமும் ஆடம்பரமும்? எதுக்கு காலெண்டர் பாக்கச் சொன்னேன்னா, வெறும்ன நினச்சு பாத்தா பெரிய விஷயமா இது தெரியது. அதுவே இதே ஏப்ரல் 17 ஆம் தேதின்னு ஒண்ணு 2099 லேயும் வரப்போது. அப்போ இப்ப நம்ம கிட்ட இருந்ததெல்லாம் எங்க போச்சு? நாம தான் எங்க போனோம்? இல்லை, நம்மகிட்ட இப்போ இருக்கறதெல்லாம் பொய்யா? னு நினைக்கத் தோணும்.
இது எதுவுமே நிரந்தரமில்லை, வெறும் மாயைங்கறதுதான் உண்மை. அதப் புரிஞ்சுக்கிட்டாலே இறைவனை பாதியடைஞ்சா மாதிரிதான். இதத்தான் என் ஊர், என் சொந்தம், நான் என்று எனக்குஇருக்கும் பிரமைகள் எல்லாம் முற்றிலும் கெட உண்மையான பொருளை, எது நிரந்தரமானதென்று என்னிடம் பேசியவான்னு முருகனைப் பாடறாரு இங்கே.
//குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே//
அடுத்த வரிக்கு வருவோம் இங்கே. இதில் மூன்று வித adjectives உபயோகப்படுத்தறாரு. குமரன். இதுக்கு பொருள் தேவையில்லை. கிரிராச குமாரி - நம்ம பர்வத ராஜனோட பொண்ணான பார்வதி. அவங்களோட மகனே.
சமரம் பொரு தானவ நாசகனே - போரிட வந்த அசுரர்களை அழித்தவனே.
சரி.. ஏன் இப்படி மூன்று உருவங்கள் கொடுக்கிறார் அருணகிரி? எது மெய்ப்பொருள் என்று அசரீரியாய் கந்தன் பேசவில்லையே. உங்களுக்கு எப்படியோ? அசரீரியெல்லாம் இந்தக்காலத்துல கேட்டா, யாராவது லவுட் ஸ்பீக்கர் வச்சு விளையாடறாங்களோன்னு நினச்சுட்டு போயிடுவேன். அப்படியெல்லாம் PA வில் அறிவிக்காமல், இங்க பாருங்க, கந்தன் என்ன செய்யறான்னா, வேலை மெனக்கெட்டு அருணகிரியும் உண்மையத் தெரிஞ்சுக்கணுமேங்கற ஆசையில் அவரும் உணரக்கூடிய ஒரு சிறு உருவம் எடுத்துகிட்டு நேர்ல வந்து, எது நிரந்தரம் எது உண்மையான பொருள்னு சொல்லிட்டு போயிருக்கான். அவருக்குச் சொன்னவன், நமக்கும் சொல்வான். அவரைப் போலவே நிதமும் அவன் தாள் பணிந்தால்.
----
பார்வதியின் மகனே! குமரனே! போரிடவந்த சூரரை அழித்தவனே! என் ஊர், என் சுற்றம், நான் என்பது மாதிரியான உலக மாயைகள் என்னைவிட்டு அகன்றொழிந்திட மெய்ப்பொருளை பேசியவா!
--------
கொஞ்சம் நாட்களாக வேலை காரணமாக முன்பு போல் பதிய முடிவதில்லை. பொதுப்பாட்டு மெதுப்பாட்டாய் ஆனதுக்கு அதான் காரணம். கூடிய சீக்கிரம் திரும்ப பார்முக்கு வருவேன்னு நம்பறேன். பாப்போம்.
Wednesday, March 29, 2006
7. வடிவேலிறைதாள் நினைவாய்
கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7
//கெடுவாய் மனனை கதிகேள்! கரவாது இடுவாய்! வடிவேல் இறைதாள் நினைவாய்//
தினந்தோறும் வயசு ஏறுகிறது நமக்கு. வயசு மட்டும் ஏறி நின்றால் பரவாயில்லியே. நாம் தினமும் பார்க்கும் உலக விஷயங்களாலும், அடுத்தவரின் நடத்தைகளாலும், நம் எண்ணங்களாலும் என்று பல வழிகளில் நம் மனசை கல்லாக்கி மாசுபடுத்திக்கொள்கிறோம். போன பாடலில், அவனை நினைத்தால் போதுமே, அவன் பாதத்தாமரைகள் நம் மனதில் ஒளிவீசுமே என்று சொன்னவுடன் அது மிகவும் எளிமையானது என்கிற மாதிரி ஒரு பிம்பம் ஏற்பட்டிருக்கும். அது எளிமையானதுதான், நம் மனம் மும்மலங்களினாலும் அழுக்காய் கல்லாய் ஆகாமல் போயிருந்தால். கல்லின் மேல் தானாய் தாமரைப் பூக்கும் என்று சொன்னாயே, என்றால் அதுவும் உண்மை தான். ஆனால் அவனை நினைக்க வேண்டுமே. அதுகூட ஒரு நொடி செய்ய மாட்டேனென்றல்லவா நம் மனமும், எண்ணமும் எப்பொழுதும் வேறெங்காவது ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு கடிவாளம் போடவேண்டாமா. அதனாலேயே தம் (நம்) மனதிற்கு ஆர்டர் போடுகிறார் அருணகிரி.
கெட்டுப்போய்க்கொண்டிருக்கிற மனமே! கதி கேள்! இதை விட்டால் நீ உய்வதற்கு வழி கிடையாது. இதைச் செய்து நற்கதி அடைவாய்.
1. கரவாது இடுவாய் - ஈயென்று உன்னிடம் வந்து கேட்போருக்கு இல்லையென்று சொல்லாமல் ஈதிடு. இது என்ன சம்பந்தமே இல்லாமல் திருக்குறள் அறத்துப்பால் மாதிரி லெக்சரெல்லாம் அருணகிரி அளிக்கிறாரென்று நினைக்க வேண்டாம். இதற்கும் பொருள் இருக்கிறது. காசிக்கு போனால் நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை விடுவோம், அல்லவா? (நானும் அப்ப காசிக்குப் போய் படிப்ப விட்டுடவான்னு கேட்டு பதிலுக்கு ஒரு 'இப்படியும் ஒரு அசடா' லுக் வாங்கிருக்கேன் ஸ்கூல் காலத்துல).
காசிக்கு போய் விடுவதற்கு உண்மையில் பொருள் என்ன? நமக்குப் பிடித்ததை விடுகிறோம் என்றால் பகவானுக்குக் கொடுக்கிறோம் என்று அர்த்தமில்லை. மாறாக நாம் அதுவரை ஒன்றின் மேல் இருந்த பற்றை விடுகிறோம் என்று அர்த்தம். இவ்வுலக விஷயங்களில் பற்றைவிடுவது மிகவும் அவசியமானதல்லவா? அதேபோல, ஒருவர் கேட்கும் பொருளை தானமாய்க் கொடுப்பதன் மூலம் அப்பொருளுடனான நமக்கிருந்த பற்றெனும் தளை அறுபட்டுப் போகின்றது. இதனால் நமக்கும் நன்மையே உண்டாகிறது. இந்தக் காரணத்தாலேயே நம் பெரியோர்கள் ஈதல் பற்றி அவ்வளவு சிலாகித்து சொல்லியிருக்கின்றனர்.
2. வடிவேலிறைதாள் நினைவாய் - இறைவனை நினையாது கொடுத்தால், நாம் கொடுக்கிறோம் என்று நினைக்கத்தோன்றும். அது அகம்பாவம். எதுவுமே நம்முடையதில்லை என்று உணர்ந்து நாம் என்னும் அகம்பாவம் - அதை விட்டொழிக்க எந்நேரமும் வடிவேலனின் இறைதாள்களை நினைப்பாய்.
//சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே.//
மெய்யடியார்க்கு தீவினைகள் அறவே வராது என்று
காதலாற்கழற் சேவடி கைதொழ அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே!
சிதம்பரத்தில் உறைபவன் மீது காதல் கொண்டு அவன் செவ்வடிகளை எந்நேரமும் கைதொழும் அடியாரிடம் வினைகள் அண்டாது என்று சம்பந்தப் பெருமான் பாடியிருக்கின்றார்.
அருணகிரிநாதரும் இப்படி மேற்கூறியதைச் செய்தால் நெடுவேதனை - பிறப்பும் இறப்பும் இவ்வுலகவாழ்க்கையும் - இவற்றால் நம் ஆன்மா படும் நீண்ட வேதனையும் - தன்னை சுட்டெரிப்பாய். இதற்கு கந்தர் அலங்காரத்தில் இன்னும் அழகாக, நான்முகனுக்கே சவால் விடுகிறார் அருணகிரியார்.
பங்கேருகன் எனைப் பட்டோலையில் இடப் ...
என்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இருவிலங்கே
பிரம்மாவே(பங்கேருகன்)! கேள்! என் தலையெழுத்தை எழுத வேண்டுமென்று நீ நினைத்து, அதை என் கோவலனான முருகன் அறிந்தான் என்றால், உன் காலில் முற்சமயம் ஒரு விலங்கு போட்டவன் இப்போது இரண்டாவது விலங்கும் போடுவான்!
அப்படி குமரன் தாள்கள் பணியும் அடியார்களிடம் பிரம்மனும் கூட விளையாட முடியாது என்கிற போது வினைகள் எம்மாத்திரம்?
இங்கே அடுத்து வரும் 'விடுவாய் விடுவாய் வினையாவையுமே' கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்தது - வினைகள் இரண்டுவகை. நல்வினை தீவினை. தீவினை விட வேண்டும் சரி. ஏன் நல்வினையும் விட வேண்டும்? நல்வினையை விடக்கூடாது. ஆனால் அவற்றால் பயன் வருமென்ற எண்ணத்தை விடவேண்டும் என்கிறார். கண்ணன் கீதையில் சொன்ன கர்ம யோகமும் இதுதான். பலனை எதிர்ப்பார்க்காமல் உன் வேலையைச் செய். வேதனைகள் தானாகவே தூளாகும் இறைவனின் அருளால்.
---
கெட்டுக்கொண்டிருக்கும் மனமே! உய்ய வழி கேள்! இல்லையென சொல்லாமல் ஈதிடுவாய்! எந்நேரமும் குமரன் தாள் நினைவாய்! அதைச் செய்தால் உன்னை அண்ட வரும் வினைகள் யாவும் தூளாய் போகும்.
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7
//கெடுவாய் மனனை கதிகேள்! கரவாது இடுவாய்! வடிவேல் இறைதாள் நினைவாய்//
தினந்தோறும் வயசு ஏறுகிறது நமக்கு. வயசு மட்டும் ஏறி நின்றால் பரவாயில்லியே. நாம் தினமும் பார்க்கும் உலக விஷயங்களாலும், அடுத்தவரின் நடத்தைகளாலும், நம் எண்ணங்களாலும் என்று பல வழிகளில் நம் மனசை கல்லாக்கி மாசுபடுத்திக்கொள்கிறோம். போன பாடலில், அவனை நினைத்தால் போதுமே, அவன் பாதத்தாமரைகள் நம் மனதில் ஒளிவீசுமே என்று சொன்னவுடன் அது மிகவும் எளிமையானது என்கிற மாதிரி ஒரு பிம்பம் ஏற்பட்டிருக்கும். அது எளிமையானதுதான், நம் மனம் மும்மலங்களினாலும் அழுக்காய் கல்லாய் ஆகாமல் போயிருந்தால். கல்லின் மேல் தானாய் தாமரைப் பூக்கும் என்று சொன்னாயே, என்றால் அதுவும் உண்மை தான். ஆனால் அவனை நினைக்க வேண்டுமே. அதுகூட ஒரு நொடி செய்ய மாட்டேனென்றல்லவா நம் மனமும், எண்ணமும் எப்பொழுதும் வேறெங்காவது ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு கடிவாளம் போடவேண்டாமா. அதனாலேயே தம் (நம்) மனதிற்கு ஆர்டர் போடுகிறார் அருணகிரி.
கெட்டுப்போய்க்கொண்டிருக்கிற மனமே! கதி கேள்! இதை விட்டால் நீ உய்வதற்கு வழி கிடையாது. இதைச் செய்து நற்கதி அடைவாய்.
1. கரவாது இடுவாய் - ஈயென்று உன்னிடம் வந்து கேட்போருக்கு இல்லையென்று சொல்லாமல் ஈதிடு. இது என்ன சம்பந்தமே இல்லாமல் திருக்குறள் அறத்துப்பால் மாதிரி லெக்சரெல்லாம் அருணகிரி அளிக்கிறாரென்று நினைக்க வேண்டாம். இதற்கும் பொருள் இருக்கிறது. காசிக்கு போனால் நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை விடுவோம், அல்லவா? (நானும் அப்ப காசிக்குப் போய் படிப்ப விட்டுடவான்னு கேட்டு பதிலுக்கு ஒரு 'இப்படியும் ஒரு அசடா' லுக் வாங்கிருக்கேன் ஸ்கூல் காலத்துல).
காசிக்கு போய் விடுவதற்கு உண்மையில் பொருள் என்ன? நமக்குப் பிடித்ததை விடுகிறோம் என்றால் பகவானுக்குக் கொடுக்கிறோம் என்று அர்த்தமில்லை. மாறாக நாம் அதுவரை ஒன்றின் மேல் இருந்த பற்றை விடுகிறோம் என்று அர்த்தம். இவ்வுலக விஷயங்களில் பற்றைவிடுவது மிகவும் அவசியமானதல்லவா? அதேபோல, ஒருவர் கேட்கும் பொருளை தானமாய்க் கொடுப்பதன் மூலம் அப்பொருளுடனான நமக்கிருந்த பற்றெனும் தளை அறுபட்டுப் போகின்றது. இதனால் நமக்கும் நன்மையே உண்டாகிறது. இந்தக் காரணத்தாலேயே நம் பெரியோர்கள் ஈதல் பற்றி அவ்வளவு சிலாகித்து சொல்லியிருக்கின்றனர்.
2. வடிவேலிறைதாள் நினைவாய் - இறைவனை நினையாது கொடுத்தால், நாம் கொடுக்கிறோம் என்று நினைக்கத்தோன்றும். அது அகம்பாவம். எதுவுமே நம்முடையதில்லை என்று உணர்ந்து நாம் என்னும் அகம்பாவம் - அதை விட்டொழிக்க எந்நேரமும் வடிவேலனின் இறைதாள்களை நினைப்பாய்.
//சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே.//
மெய்யடியார்க்கு தீவினைகள் அறவே வராது என்று
காதலாற்கழற் சேவடி கைதொழ அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே!
சிதம்பரத்தில் உறைபவன் மீது காதல் கொண்டு அவன் செவ்வடிகளை எந்நேரமும் கைதொழும் அடியாரிடம் வினைகள் அண்டாது என்று சம்பந்தப் பெருமான் பாடியிருக்கின்றார்.
அருணகிரிநாதரும் இப்படி மேற்கூறியதைச் செய்தால் நெடுவேதனை - பிறப்பும் இறப்பும் இவ்வுலகவாழ்க்கையும் - இவற்றால் நம் ஆன்மா படும் நீண்ட வேதனையும் - தன்னை சுட்டெரிப்பாய். இதற்கு கந்தர் அலங்காரத்தில் இன்னும் அழகாக, நான்முகனுக்கே சவால் விடுகிறார் அருணகிரியார்.
பங்கேருகன் எனைப் பட்டோலையில் இடப் ...
என்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இருவிலங்கே
பிரம்மாவே(பங்கேருகன்)! கேள்! என் தலையெழுத்தை எழுத வேண்டுமென்று நீ நினைத்து, அதை என் கோவலனான முருகன் அறிந்தான் என்றால், உன் காலில் முற்சமயம் ஒரு விலங்கு போட்டவன் இப்போது இரண்டாவது விலங்கும் போடுவான்!
அப்படி குமரன் தாள்கள் பணியும் அடியார்களிடம் பிரம்மனும் கூட விளையாட முடியாது என்கிற போது வினைகள் எம்மாத்திரம்?
இங்கே அடுத்து வரும் 'விடுவாய் விடுவாய் வினையாவையுமே' கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்தது - வினைகள் இரண்டுவகை. நல்வினை தீவினை. தீவினை விட வேண்டும் சரி. ஏன் நல்வினையும் விட வேண்டும்? நல்வினையை விடக்கூடாது. ஆனால் அவற்றால் பயன் வருமென்ற எண்ணத்தை விடவேண்டும் என்கிறார். கண்ணன் கீதையில் சொன்ன கர்ம யோகமும் இதுதான். பலனை எதிர்ப்பார்க்காமல் உன் வேலையைச் செய். வேதனைகள் தானாகவே தூளாகும் இறைவனின் அருளால்.
---
கெட்டுக்கொண்டிருக்கும் மனமே! உய்ய வழி கேள்! இல்லையென சொல்லாமல் ஈதிடுவாய்! எந்நேரமும் குமரன் தாள் நினைவாய்! அதைச் செய்தால் உன்னை அண்ட வரும் வினைகள் யாவும் தூளாய் போகும்.
Monday, March 27, 2006
6. கல்லில் தாமரைப் பூப்பதும் ஆச்சரியமோ?
6. கல்லில் தாமரைப் பூப்பதும் ஆச்சரியமா?
திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோக தயா பரனே. 6
//திணியான மனோ சிலை மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ//
திணியான மனோசிலை - நம்மனசை மிகவும் உறுதியான கனமான கல்லென்று சொல்லிதான் அநுபூதியையே ஆரம்பித்தார் அருணகிரி சுவாமிகள். நெஞ்சக்கன கல்லுஞ் நினைவுக்கு வருகிறதா? ஏன் கல்லென்று சொன்னார்னு அந்தப் பதிவுலேயே (கடவுள் வாழ்த்து (காப்பு)) பாத்துட்டோம். அதனால் சுருக்கமாக.. சிலை என்றால் கல். சிலையை வடிக்கக் கற்கள் தானே பயன்படுத்தறோம். திடமாக இருக்கும் உறுதியான கல் போன்று இருக்கிறது நம் மனம்.
இந்தக் கல்நெஞ்சோட ரெண்டு வழியில போகலாம். முத வழி ரொம்ப ஈஸி வழி. என்னது? டமார்னு எடுத்து தரைல போடறது. முன்னாடி சொன்னா மாதிரி தூளாகிப்போன கல்லால யாருக்காவது எதாவது பயன் இருக்கா? நாம இருந்தா என்ன செய்வோம்? அந்த மாதிரி குட்டிக்கல்லையெல்லாம் பொறுக்கி பாதைக்கு வெளிய, யார் கால்லேயும் படாத மாதிரி தூக்கிப்போட்டுட்டு நம்ம வேலையப் பாக்கப்போய்டுவோம்.
இரண்டாவது பக்தி வழி. முருகன நினச்சா, அவனே நமக்கு பொற்கொல்லன். அருணகிரியவே அவன் செதுக்கி வெறும் கல்லை ரத்தினமாக்கலையா? அதுவே தான். வைரம் கிடைக்கும் போது வெறும் கல்லாதான் கிடைக்கும். எடுத்துத் தூக்கிப்போட்டுடுவோம். அதுக்கு ஒரு மதிப்பும் கிடையாது. ஆனா சுத்திகரிச்சு பட்டை தீட்டினா அத வெறும் கல்னு புறந்தள்ள முடியுமா? நம்மள நாமே பட்டை தீட்டிக்கறதுதான் பக்தி. அந்தப் பக்தியை நமக்கு தரவனும், அதன் பயனான அருளைத் தருபவனும் கந்தனே. அவன் தான் நமக்கு சிற்பி, பொற்கொல்லன் எப்படி வேணா வச்சுக்கோங்க. அப்படி வைரமான நாம் அப்புறம் என்னாவோம்? அவனுக்கே அணிகலனாவோம். இங்கே அணிகலனால் அவனுக்கு சிறப்பு கிடையாது. ஆனால், அவனால் நமக்கு முக்தி. அவனில்லாம அவனருள் இல்லாம நாம ஒருநாளும் வைரமாக முடியாது. மனசு யாருக்கும் பிரயோஜனமே இல்லாத கல்லாத்தான் இருக்கும்.
இதுவே அபிராமி பட்டர் கொஞ்சம் வேற மாதிரி
வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே
னு பாடியிருக்கார். என்னதான் புதுவீட்டுக்கு போனாலும், நாம பிறந்து வளர்ந்த பழைய சொந்த வீடு மாதிரி வருமா? அந்த மாதிரி அபிராமியே வந்து பட்டரின் மனசை அவளோட பழைய வீடு மாதிரி நினைச்சு வந்து உட்கார்ந்துகொள்கிறாள்.
அதையே தான் இங்கே அருணகிரிநாதர் 'உன் பொற்பாதங்களையே நினைந்துருகும் அடியார்களின் மனதில் தாமரைபோல நீ மலர்வதில் ஆச்சரியமும் உண்டோ?னு கேக்கறார்.
நாம் குமரனின் பொற்பாதங்களை பணிகிறோம். அவனுக்கும் ஒரு மேலிடம் இருக்கணுமே. கால்ல விழ. அவன் யார் கால்ல விழுகிறான்னு கேள்வி.
//பணி யாவென வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே//
நம்ம 'அம்மா' கால்ல மந்திரிங்க விழற போட்டோக்கள பாத்துருக்கீங்களா? அவங்க பார்வையே ஆயிரம் கவித சொல்லும். பயபக்தியா சாஷ்டாங்கமா விழுந்து எழுந்து, பவ்யமா கையக்கட்டிகிட்டு 'நீங்க சொல்லுங்க, என்ன செய்யட்டும்'னு லுக் விடுவாங்க. அம்மா என்ன நினைக்கறாங்களோ, நாம அதச் சரியா செய்யணுமே அப்டி இப்டினு அவங்க மண்டைக்குள்ள ட்ரெயின் ஓடிகிட்டுருக்கும். அதுமாதிரி முருகனுக்கு சுப்ரீம் கோர்ட் வள்ளி தானே? அதான் அவ கால்ல விழறச்சேயே நான் இப்ப என்ன செய்யணும்னு சொல்லும்மான்னு ஆசையா கேட்கிறான் கந்தன். ஏன் இப்படி? பின்ன மனைவி சொல்றத கேக்கலேனா எப்படி. இராத்திரிக்கு தினைமாவு கிடைக்காதே. மேலோகத்துலேர்ந்து பாதாள லோகம் வரை அம்மாக்களோட பவர் பாயுது. இல்லியா? ஏன்னா, வள்ளி மேல அவ்ளோ அன்பு. தணியாத அன்பு. அன்பைக் காட்டறதுல எப்படிப் பட்டவன்? தயாபரன். கருணையே வடிவானவன்.
வள்ளியின் மேல் கொண்ட காதலினால் அவள் பதம் பணிபவனின் பாதத்தை நாம் பற்றுடன் பற்றினால் நம் கல்மனம் அவனாய் அவனருளால் தாமரையாய் மலரும். அப்படி மலர்வதில் தான் ஆச்சரியமும் உண்டோ?
திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோக தயா பரனே. 6
//திணியான மனோ சிலை மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ//
திணியான மனோசிலை - நம்மனசை மிகவும் உறுதியான கனமான கல்லென்று சொல்லிதான் அநுபூதியையே ஆரம்பித்தார் அருணகிரி சுவாமிகள். நெஞ்சக்கன கல்லுஞ் நினைவுக்கு வருகிறதா? ஏன் கல்லென்று சொன்னார்னு அந்தப் பதிவுலேயே (கடவுள் வாழ்த்து (காப்பு)) பாத்துட்டோம். அதனால் சுருக்கமாக.. சிலை என்றால் கல். சிலையை வடிக்கக் கற்கள் தானே பயன்படுத்தறோம். திடமாக இருக்கும் உறுதியான கல் போன்று இருக்கிறது நம் மனம்.
இந்தக் கல்நெஞ்சோட ரெண்டு வழியில போகலாம். முத வழி ரொம்ப ஈஸி வழி. என்னது? டமார்னு எடுத்து தரைல போடறது. முன்னாடி சொன்னா மாதிரி தூளாகிப்போன கல்லால யாருக்காவது எதாவது பயன் இருக்கா? நாம இருந்தா என்ன செய்வோம்? அந்த மாதிரி குட்டிக்கல்லையெல்லாம் பொறுக்கி பாதைக்கு வெளிய, யார் கால்லேயும் படாத மாதிரி தூக்கிப்போட்டுட்டு நம்ம வேலையப் பாக்கப்போய்டுவோம்.
இரண்டாவது பக்தி வழி. முருகன நினச்சா, அவனே நமக்கு பொற்கொல்லன். அருணகிரியவே அவன் செதுக்கி வெறும் கல்லை ரத்தினமாக்கலையா? அதுவே தான். வைரம் கிடைக்கும் போது வெறும் கல்லாதான் கிடைக்கும். எடுத்துத் தூக்கிப்போட்டுடுவோம். அதுக்கு ஒரு மதிப்பும் கிடையாது. ஆனா சுத்திகரிச்சு பட்டை தீட்டினா அத வெறும் கல்னு புறந்தள்ள முடியுமா? நம்மள நாமே பட்டை தீட்டிக்கறதுதான் பக்தி. அந்தப் பக்தியை நமக்கு தரவனும், அதன் பயனான அருளைத் தருபவனும் கந்தனே. அவன் தான் நமக்கு சிற்பி, பொற்கொல்லன் எப்படி வேணா வச்சுக்கோங்க. அப்படி வைரமான நாம் அப்புறம் என்னாவோம்? அவனுக்கே அணிகலனாவோம். இங்கே அணிகலனால் அவனுக்கு சிறப்பு கிடையாது. ஆனால், அவனால் நமக்கு முக்தி. அவனில்லாம அவனருள் இல்லாம நாம ஒருநாளும் வைரமாக முடியாது. மனசு யாருக்கும் பிரயோஜனமே இல்லாத கல்லாத்தான் இருக்கும்.
இதுவே அபிராமி பட்டர் கொஞ்சம் வேற மாதிரி
வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே
னு பாடியிருக்கார். என்னதான் புதுவீட்டுக்கு போனாலும், நாம பிறந்து வளர்ந்த பழைய சொந்த வீடு மாதிரி வருமா? அந்த மாதிரி அபிராமியே வந்து பட்டரின் மனசை அவளோட பழைய வீடு மாதிரி நினைச்சு வந்து உட்கார்ந்துகொள்கிறாள்.
அதையே தான் இங்கே அருணகிரிநாதர் 'உன் பொற்பாதங்களையே நினைந்துருகும் அடியார்களின் மனதில் தாமரைபோல நீ மலர்வதில் ஆச்சரியமும் உண்டோ?னு கேக்கறார்.
நாம் குமரனின் பொற்பாதங்களை பணிகிறோம். அவனுக்கும் ஒரு மேலிடம் இருக்கணுமே. கால்ல விழ. அவன் யார் கால்ல விழுகிறான்னு கேள்வி.
//பணி யாவென வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே//
நம்ம 'அம்மா' கால்ல மந்திரிங்க விழற போட்டோக்கள பாத்துருக்கீங்களா? அவங்க பார்வையே ஆயிரம் கவித சொல்லும். பயபக்தியா சாஷ்டாங்கமா விழுந்து எழுந்து, பவ்யமா கையக்கட்டிகிட்டு 'நீங்க சொல்லுங்க, என்ன செய்யட்டும்'னு லுக் விடுவாங்க. அம்மா என்ன நினைக்கறாங்களோ, நாம அதச் சரியா செய்யணுமே அப்டி இப்டினு அவங்க மண்டைக்குள்ள ட்ரெயின் ஓடிகிட்டுருக்கும். அதுமாதிரி முருகனுக்கு சுப்ரீம் கோர்ட் வள்ளி தானே? அதான் அவ கால்ல விழறச்சேயே நான் இப்ப என்ன செய்யணும்னு சொல்லும்மான்னு ஆசையா கேட்கிறான் கந்தன். ஏன் இப்படி? பின்ன மனைவி சொல்றத கேக்கலேனா எப்படி. இராத்திரிக்கு தினைமாவு கிடைக்காதே. மேலோகத்துலேர்ந்து பாதாள லோகம் வரை அம்மாக்களோட பவர் பாயுது. இல்லியா? ஏன்னா, வள்ளி மேல அவ்ளோ அன்பு. தணியாத அன்பு. அன்பைக் காட்டறதுல எப்படிப் பட்டவன்? தயாபரன். கருணையே வடிவானவன்.
வள்ளியின் மேல் கொண்ட காதலினால் அவள் பதம் பணிபவனின் பாதத்தை நாம் பற்றுடன் பற்றினால் நம் கல்மனம் அவனாய் அவனருளால் தாமரையாய் மலரும். அப்படி மலர்வதில் தான் ஆச்சரியமும் உண்டோ?
Tuesday, March 07, 2006
5. சகமாயையுள் நின்று தயங்குவதேன்?
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5
இதுவும் போன பாட்டோட தொடர்ச்சியாக கொள்ளலாம். அந்தப் பதிவில் மாயையினால் பந்தத்திலும் பாசத்திலும் மட்டுமே பற்று வைப்போருக்கு இறைவனடி நினைய தடையாக இருப்பதாய் பார்த்தோம். அதற்கு ஜெயஸ்ரீ அவர்களும் தி.இரா.ச அவர்களும் மேல் விளக்கங்கள் கொடுத்திருந்தனர். அதுவே இந்தப் பாட்டிலும்.
மகமாயை களைந்திட வல்ல பிரான்
மகமாயைன்னா எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி மயக்கும் மாயைன்னு அர்த்தம். அதாவது இறைவனைக் காண நம் கண்களுக்கு தடையாய் இருந்து மறைக்கும் திரை. கண்களால்னா புறக்கண்கள் கிடையாது. ஏன்னா, அவற்றால் ஒருநாளும் அவனைக் காண முடியாது. இதையே தான் சில தினங்களுக்கு முன் (2. எனையிழந்த நலஞ்சொல்லாய்) பதிவில் பார்த்தோம், நினைவுக்கு வருகிறதா? இறைவன் தன்னைக் குறுக்கிக் கொண்டு சிலைகளாக நம் புறக்கண்களுக்கும், பின்னர் நமக்கு உண்மையான அன்பு அவன் மேல் வருகையில் பரம்பொருளாய் நம் அகக்கண்ணுக்கும் காட்சி தருகிறான். ஆனால், அம்மாதிரி அவனை புறக்கண்களால் காண்பது எளிது. கோயிலுக்கு போனால் பார்க்கலாம். ஆனால் அப்போதும் அவனைப் பார்க்காமல் காஸ் அணைத்தோமா, வீட்டைப் பூட்டினோமா என்று மனம் அலைபாயும். இத்தனைக்கும் அர்ச்சகர் மணியெல்லாம் அடித்து, கற்பூரம் எல்லாம் காட்டி எப்படியாவது நம் attention-ஐ இறைவன் மேல் திருப்பப் பெரும் பாடுபடுவார். அப்படியும் நாம் சொல்வதை கேட்டால் தானே நம் மனம்? மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். அப்படி கண்முன்னே நிற்கும் கடவுளின் உருவத்தைப் பார்த்தாலும், அவனை உண்மையாக பார்க்க முடிவதில்லை. கண்முன்னே தெரியும் தெய்வத்தை காண்பதற்கே இவ்வளவு தடைகள் என்றால் அகக்கண்ணால் காணவேண்டிய தெய்வத்தைக் காண குறுக்கே எத்தனை விஷயங்கள் இருக்கும்? இதையே தான், கந்தர் அலங்காரத்தில்
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை யொழித்தரு ள்வாய்
என்று சொல்கிறார். இருபுறமும் பற்றி எரியும் மூங்கில் கிளையின் நடுவில் சிக்கிய எறும்பதனைப் போல் இங்கும் மகிழ்ச்சியில்லாமல், உய்யவும் வழியில்லாமல் தவிக்கும் என்னுடைய துயரை அழித்தருளாயோ என்று. அதுபோல நம் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள். பற்றுகள். தளைகள். அப்படி இவ்வாழ்க்கையில் சிக்கியிருக்கும் நமக்கு, எறும்பின் உய்விற்கு தடையாய் இருக்கும் நெருப்பைப் போல், தடையாய் இருப்பதில் முக்கியமானது மாயை. அதனூடாக பாசம், பந்தம் ஆகிய பற்றுகள். இப்படிப்பட்ட உலக மாயைகளை நொடிப்பொழுதில் களைந்திட வல்லவனான எம்பிரான்...
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
முகமாறு - தன் ஆறுமுகங்களைக் கொண்டும் மாயையைப் நாம் கைப்பற்றும் வழியைச் சொல்லியும் இன்னும் இந்த மகத்தான மாயையினை ஒழித்தழிக்க இயலாமல் தவிக்கிறேனே.
அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே.
அகம் என்றால் வீடு. மாடு என்றால் செல்வம். மடந்தையர் என்றால் பெண்டிர். போன பதிவில் சொன்ன படியே இவற்றின் மேல் கொண்ட பற்றைப் பற்றியே அருணகிரியார் குறிப்பிடுகிறார். இவற்றின் மேல் கொள்ளும் பற்று எத்தகையானது? அயர்ச்சி தரக்கூடியது. அவ்வயர்ச்சியினால் என்ன தீமை விளைகிறது? புறக்கண்ணாலும், அகக்கண்ணாலும் இறைவனைக் காண முடியாத அளவுக்கு மன அயர்ச்சியும், உடல் அயர்ச்சியும் தரக்கூடியது இந்த பற்றுகள் எனப்படும் அடிமைத்தளைகள். இந்த அடிமைத்தளைகளே நாம் இந்த உலகத்தின் மாயையினில் சிக்கித் திண்டாடுவதற்கான அடிப்படைக் காரணங்களாகும். இவ்வாறு தன் ஆறுமுகங்களில் இருக்கும் செவ்விதழ்களுடைய ஞான ஊற்றான அவன் வாயிலிருந்து உலக மாயைகளிலிருந்து தப்பித்துய்யும் வழியை முருகப்பெருமானே சொல்லியும், நான் இன்னும் உய்ய வழியில்லாமல், அவனை அடைய கதியில்லாமல் அலைகிறேனே!
இராகவனின் பதிவு
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5
இதுவும் போன பாட்டோட தொடர்ச்சியாக கொள்ளலாம். அந்தப் பதிவில் மாயையினால் பந்தத்திலும் பாசத்திலும் மட்டுமே பற்று வைப்போருக்கு இறைவனடி நினைய தடையாக இருப்பதாய் பார்த்தோம். அதற்கு ஜெயஸ்ரீ அவர்களும் தி.இரா.ச அவர்களும் மேல் விளக்கங்கள் கொடுத்திருந்தனர். அதுவே இந்தப் பாட்டிலும்.
மகமாயை களைந்திட வல்ல பிரான்
மகமாயைன்னா எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி மயக்கும் மாயைன்னு அர்த்தம். அதாவது இறைவனைக் காண நம் கண்களுக்கு தடையாய் இருந்து மறைக்கும் திரை. கண்களால்னா புறக்கண்கள் கிடையாது. ஏன்னா, அவற்றால் ஒருநாளும் அவனைக் காண முடியாது. இதையே தான் சில தினங்களுக்கு முன் (2. எனையிழந்த நலஞ்சொல்லாய்) பதிவில் பார்த்தோம், நினைவுக்கு வருகிறதா? இறைவன் தன்னைக் குறுக்கிக் கொண்டு சிலைகளாக நம் புறக்கண்களுக்கும், பின்னர் நமக்கு உண்மையான அன்பு அவன் மேல் வருகையில் பரம்பொருளாய் நம் அகக்கண்ணுக்கும் காட்சி தருகிறான். ஆனால், அம்மாதிரி அவனை புறக்கண்களால் காண்பது எளிது. கோயிலுக்கு போனால் பார்க்கலாம். ஆனால் அப்போதும் அவனைப் பார்க்காமல் காஸ் அணைத்தோமா, வீட்டைப் பூட்டினோமா என்று மனம் அலைபாயும். இத்தனைக்கும் அர்ச்சகர் மணியெல்லாம் அடித்து, கற்பூரம் எல்லாம் காட்டி எப்படியாவது நம் attention-ஐ இறைவன் மேல் திருப்பப் பெரும் பாடுபடுவார். அப்படியும் நாம் சொல்வதை கேட்டால் தானே நம் மனம்? மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். அப்படி கண்முன்னே நிற்கும் கடவுளின் உருவத்தைப் பார்த்தாலும், அவனை உண்மையாக பார்க்க முடிவதில்லை. கண்முன்னே தெரியும் தெய்வத்தை காண்பதற்கே இவ்வளவு தடைகள் என்றால் அகக்கண்ணால் காணவேண்டிய தெய்வத்தைக் காண குறுக்கே எத்தனை விஷயங்கள் இருக்கும்? இதையே தான், கந்தர் அலங்காரத்தில்
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை யொழித்தரு ள்வாய்
என்று சொல்கிறார். இருபுறமும் பற்றி எரியும் மூங்கில் கிளையின் நடுவில் சிக்கிய எறும்பதனைப் போல் இங்கும் மகிழ்ச்சியில்லாமல், உய்யவும் வழியில்லாமல் தவிக்கும் என்னுடைய துயரை அழித்தருளாயோ என்று. அதுபோல நம் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள். பற்றுகள். தளைகள். அப்படி இவ்வாழ்க்கையில் சிக்கியிருக்கும் நமக்கு, எறும்பின் உய்விற்கு தடையாய் இருக்கும் நெருப்பைப் போல், தடையாய் இருப்பதில் முக்கியமானது மாயை. அதனூடாக பாசம், பந்தம் ஆகிய பற்றுகள். இப்படிப்பட்ட உலக மாயைகளை நொடிப்பொழுதில் களைந்திட வல்லவனான எம்பிரான்...
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
முகமாறு - தன் ஆறுமுகங்களைக் கொண்டும் மாயையைப் நாம் கைப்பற்றும் வழியைச் சொல்லியும் இன்னும் இந்த மகத்தான மாயையினை ஒழித்தழிக்க இயலாமல் தவிக்கிறேனே.
அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே.
அகம் என்றால் வீடு. மாடு என்றால் செல்வம். மடந்தையர் என்றால் பெண்டிர். போன பதிவில் சொன்ன படியே இவற்றின் மேல் கொண்ட பற்றைப் பற்றியே அருணகிரியார் குறிப்பிடுகிறார். இவற்றின் மேல் கொள்ளும் பற்று எத்தகையானது? அயர்ச்சி தரக்கூடியது. அவ்வயர்ச்சியினால் என்ன தீமை விளைகிறது? புறக்கண்ணாலும், அகக்கண்ணாலும் இறைவனைக் காண முடியாத அளவுக்கு மன அயர்ச்சியும், உடல் அயர்ச்சியும் தரக்கூடியது இந்த பற்றுகள் எனப்படும் அடிமைத்தளைகள். இந்த அடிமைத்தளைகளே நாம் இந்த உலகத்தின் மாயையினில் சிக்கித் திண்டாடுவதற்கான அடிப்படைக் காரணங்களாகும். இவ்வாறு தன் ஆறுமுகங்களில் இருக்கும் செவ்விதழ்களுடைய ஞான ஊற்றான அவன் வாயிலிருந்து உலக மாயைகளிலிருந்து தப்பித்துய்யும் வழியை முருகப்பெருமானே சொல்லியும், நான் இன்னும் உய்ய வழியில்லாமல், அவனை அடைய கதியில்லாமல் அலைகிறேனே!
இராகவனின் பதிவு
Wednesday, March 01, 2006
4. தளைபட் டழியத் தகுமோ?
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூர் ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே. (4)
அநுபூதிக்கு திருப்புகழ், அலங்காரம் இவற்றைவிடவும் சிறப்பு உண்டு. அநுபூதியை உபநிஷத்துகளில் ஒன்றென்றும் சொல்லுவோர் உண்டு. ஏனென்றால் சிக்கலில்லாத, எளிமையான பாக்களின் மூலம் மெய்ப்பொருள் தத்துவத்தையே வெறும் ஐம்பத்தியொரு பாக்களில் சொல்லியிருக்கிறார் அருணகிரி. இவை ஒரே சமயத்தில் ஒரு நூலாக எழுதப்பட்டதில்லை. மாறாக பல்வேறு காலகட்டங்களில் திரட்டப்பட்டவை இந்தப் பாடல்கள். சரி இந்த அருமையான பாடலுக்கும் பொருள் பார்ப்போமா?
//கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே//
முருகப் பெருமான் சூரபத்மனை கொன்ற கதை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். ஒரு சின்ன recap பார்ப்போமா? சூரபத்மன் தோல்வியின் விளிம்பில் ஒரு மாமரத்தின் வடிவம் எடுத்தான். பல கிளைகள் விட்டு பரந்து வளர்ந்து மரத்தின் வடிவில் இருந்த சூரனையும்.. கிரியும் - இது க்ரௌஞ்சனைக் குறிக்கும். க்ரௌஞ்சன் என்பவன் சூரனின் தளபதிகளில் ஒருவன். அவன் மலை உருவத்தில் நின்றான். இந்த இரண்டு பேரையும் துளை விழும் அளவிற்கு வேலால் அடிக்கக்கூட வேண்டியிருக்கவில்லை. முருகனின் வேல் அவர்களின் மேல் பட்டவுடனேயே அவர்கள் அழிந்தார்கள்.
இப்படியும் எடுத்துக்கலாம். கிளைன்னா உறவுகள் னும் ஒரு பொருள் வரும். தாரகன், சிம்மமுகன் என்று இரு சகோதரர்களுடன் வந்த சூரபத்மனையும்..
கடைசியா.. இதுதான் இவ்வரிகளுக்கு உண்மையான பொருள். உறவுகளினால் வரும் சூரையும் (துன்பம்), ஆணவம் என்னும் நம்முள் வளர்ந்து நிற்கும் கிரியும் (மலை)யையும் அழிக்க ஞானமெனும் வேலை எறியவேண்டாம். தொட்டாலே போறும். எப்படி வேலால் தொடப்படுவது? அவனை நினைத்தாலே மட்டுமே அது சாத்தியம். அப்படிப்பட்ட வேலை உடைய வேலாயுதனே...
இப்போது புரிகிறதா? ஏன் அநுபூதியை உபநிஷத்துகளில் ஒன்றாக கருதுகிறோம் என்று. மேலோட்டமாக படிப்போருக்கும் பொருள் புரியும். அதுவும் நல்ல பொருள் தான். கொஞ்சம் படித்தோருக்கு இன்னும் தத்துவார்த்தமான பொருளும் உள்ளே அடங்கியிருக்கும். யாருக்கு என்ன லெவலோ அந்த அளவிலேயே, மெய்ப்பொருளை விளக்குபவர் அருணகிரிநாதர்.
//வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ//
இது ரொம்ப ஈஸி புரிஞ்சுக்கறதுக்கு.
வளைகள் நிறைய அணிந்த கைகளை உடைய மாது (மனைவி) மற்றும் மக்கள் - நம் குழந்தைகள். பெண்ணீயவாதிகள்லாம் அடிக்க வரதுக்கு முன்னாடி சொல்லிடறேன். இதே வரியை 'தாலிகட்டு கையுடை பதியும்'னு இதைப் படிக்கும் பெண்கள் மாத்திக்கலாம். முக்கியம் பெண்களோ, ஆண்களோ, குழந்தைகள் இல்லை. பந்தம், பாசம் போன்ற தளைகள் தான். இராகவன் சொன்னது போலவே அடிமைத்தளையை நினைவில் வைத்துக்கொள்வோம். பெண்களோ, குழந்தைகளோ, திருமணம் செய்வதோ பிரச்சனையா? திருமணம் தான் பிரச்சனைன்னா முருகனைப் பாடிய நம் தமிழ் முன்னோர்கள் அதை இன்னமும் சடங்காக வைத்திருப்பார்களா? க்ருஹஸ்தர்களுக்கென்று முக்கியமான இடமும் வடமொழியை முக்கியமாக உடைய சமயங்களிலும் சொல்லிருக்கிறார்கள். case in point: சீதையின் தந்தை சீரத்துவஜ ஜனகன்.
மேலும், வாரியாரின் சொற்படி இறைவன் நமக்கு ஆசிரியனாக இருக்கவே மீனாஷியை மணம் புரிந்தான். ஏன்? விரல்விட்டு எண்ணுவது குழந்தைகளுக்கு எளிது. அதனால் ஆசிரியரும் விரல்விட்டு எண்ணிக்காண்பிப்பார். அதற்காக ஆசிரியருக்கும் விரல் விட்டு எண்ணினால் தான் இரண்டும் இரண்டும் எவ்வளவென்று தெரியும் என்று சொல்லமுடியுமா? அப்படியே முருகனும் வள்ளியையும், தெய்வானையும் மணந்தான். அப்படி அவனே மணவாளனாய் இருக்கையில் திருமணம் வேண்டாமென்று சொல்ல முடியுமா?
பிறகு ஏன் இப்படி அருணகிரி சொல்லுகிறார்? காரணம் இருக்கிறதே. மனைவியும் மக்களும் முக்கியந்தான். இதை கல்யாணமவர்களும் ஏன் ஆகாதவர்களும் உங்களில் புரிந்திருப்பீர்கள். கோயிலுக்கு போனால் கூட தந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறதோ, நம் மகளுக்கு நல்ல கணவன் வாய்ப்பானா, மகன் தவறான வழியில் போகாமல் இருப்பானா, நம் மனைவி சந்தோஷமாக இருக்கிறாளா, அம்மா சவுக்கியமாக இருக்கிறாளா இப்படித்தான் கண்ணை மூடியவுடன் தோன்றும். இது தவறில்லை. ஏனென்றால் நம் நிலை அதான். இறைவனை நினைக்கக்கூட இவை (நினைப்புகள்) இடையிலே நிற்கும்போது அவனை அடையவும் முடியுமா? இவை முக்கியமில்லையா? முக்கியம் தான். ஆனால் அவைகளை விட முக்கியம் இறைவன். இப்படியாக இந்த உலகச் சழக்கைகளில் (materialistic என்றும் கொள்ளலாம்) சிக்கித் இறைவனை நினையாமல் இவற்றில் மட்டுமே அடிமையாக இருந்துவிடும் நிலை தகுமா? ஏன் தகுமோ தகுமோ என்று இருமுறை கேட்கிறார்? ஏனென்றால், கூப்பிடாமலேயே ஓடிவந்து அருளும் கருணைக்கடலான கந்தனை நினைந்தும் நான் இன்னும் விமோசனம் பெறாமல் இந்த அடிமைச் சங்கிலிகளில் சிக்கி சுழல்வது நியாயமா முருகா? இது உனக்கே அடுக்குமோ? இப்படி நான் இருப்பது உனக்குத்தானே இழுக்கு என்று emphasize செய்கிறார் அருணகிரியார்.
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூர் ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே. (4)
அநுபூதிக்கு திருப்புகழ், அலங்காரம் இவற்றைவிடவும் சிறப்பு உண்டு. அநுபூதியை உபநிஷத்துகளில் ஒன்றென்றும் சொல்லுவோர் உண்டு. ஏனென்றால் சிக்கலில்லாத, எளிமையான பாக்களின் மூலம் மெய்ப்பொருள் தத்துவத்தையே வெறும் ஐம்பத்தியொரு பாக்களில் சொல்லியிருக்கிறார் அருணகிரி. இவை ஒரே சமயத்தில் ஒரு நூலாக எழுதப்பட்டதில்லை. மாறாக பல்வேறு காலகட்டங்களில் திரட்டப்பட்டவை இந்தப் பாடல்கள். சரி இந்த அருமையான பாடலுக்கும் பொருள் பார்ப்போமா?
//கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே//
முருகப் பெருமான் சூரபத்மனை கொன்ற கதை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். ஒரு சின்ன recap பார்ப்போமா? சூரபத்மன் தோல்வியின் விளிம்பில் ஒரு மாமரத்தின் வடிவம் எடுத்தான். பல கிளைகள் விட்டு பரந்து வளர்ந்து மரத்தின் வடிவில் இருந்த சூரனையும்.. கிரியும் - இது க்ரௌஞ்சனைக் குறிக்கும். க்ரௌஞ்சன் என்பவன் சூரனின் தளபதிகளில் ஒருவன். அவன் மலை உருவத்தில் நின்றான். இந்த இரண்டு பேரையும் துளை விழும் அளவிற்கு வேலால் அடிக்கக்கூட வேண்டியிருக்கவில்லை. முருகனின் வேல் அவர்களின் மேல் பட்டவுடனேயே அவர்கள் அழிந்தார்கள்.
இப்படியும் எடுத்துக்கலாம். கிளைன்னா உறவுகள் னும் ஒரு பொருள் வரும். தாரகன், சிம்மமுகன் என்று இரு சகோதரர்களுடன் வந்த சூரபத்மனையும்..
கடைசியா.. இதுதான் இவ்வரிகளுக்கு உண்மையான பொருள். உறவுகளினால் வரும் சூரையும் (துன்பம்), ஆணவம் என்னும் நம்முள் வளர்ந்து நிற்கும் கிரியும் (மலை)யையும் அழிக்க ஞானமெனும் வேலை எறியவேண்டாம். தொட்டாலே போறும். எப்படி வேலால் தொடப்படுவது? அவனை நினைத்தாலே மட்டுமே அது சாத்தியம். அப்படிப்பட்ட வேலை உடைய வேலாயுதனே...
இப்போது புரிகிறதா? ஏன் அநுபூதியை உபநிஷத்துகளில் ஒன்றாக கருதுகிறோம் என்று. மேலோட்டமாக படிப்போருக்கும் பொருள் புரியும். அதுவும் நல்ல பொருள் தான். கொஞ்சம் படித்தோருக்கு இன்னும் தத்துவார்த்தமான பொருளும் உள்ளே அடங்கியிருக்கும். யாருக்கு என்ன லெவலோ அந்த அளவிலேயே, மெய்ப்பொருளை விளக்குபவர் அருணகிரிநாதர்.
//வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ//
இது ரொம்ப ஈஸி புரிஞ்சுக்கறதுக்கு.
வளைகள் நிறைய அணிந்த கைகளை உடைய மாது (மனைவி) மற்றும் மக்கள் - நம் குழந்தைகள். பெண்ணீயவாதிகள்லாம் அடிக்க வரதுக்கு முன்னாடி சொல்லிடறேன். இதே வரியை 'தாலிகட்டு கையுடை பதியும்'னு இதைப் படிக்கும் பெண்கள் மாத்திக்கலாம். முக்கியம் பெண்களோ, ஆண்களோ, குழந்தைகள் இல்லை. பந்தம், பாசம் போன்ற தளைகள் தான். இராகவன் சொன்னது போலவே அடிமைத்தளையை நினைவில் வைத்துக்கொள்வோம். பெண்களோ, குழந்தைகளோ, திருமணம் செய்வதோ பிரச்சனையா? திருமணம் தான் பிரச்சனைன்னா முருகனைப் பாடிய நம் தமிழ் முன்னோர்கள் அதை இன்னமும் சடங்காக வைத்திருப்பார்களா? க்ருஹஸ்தர்களுக்கென்று முக்கியமான இடமும் வடமொழியை முக்கியமாக உடைய சமயங்களிலும் சொல்லிருக்கிறார்கள். case in point: சீதையின் தந்தை சீரத்துவஜ ஜனகன்.
மேலும், வாரியாரின் சொற்படி இறைவன் நமக்கு ஆசிரியனாக இருக்கவே மீனாஷியை மணம் புரிந்தான். ஏன்? விரல்விட்டு எண்ணுவது குழந்தைகளுக்கு எளிது. அதனால் ஆசிரியரும் விரல்விட்டு எண்ணிக்காண்பிப்பார். அதற்காக ஆசிரியருக்கும் விரல் விட்டு எண்ணினால் தான் இரண்டும் இரண்டும் எவ்வளவென்று தெரியும் என்று சொல்லமுடியுமா? அப்படியே முருகனும் வள்ளியையும், தெய்வானையும் மணந்தான். அப்படி அவனே மணவாளனாய் இருக்கையில் திருமணம் வேண்டாமென்று சொல்ல முடியுமா?
பிறகு ஏன் இப்படி அருணகிரி சொல்லுகிறார்? காரணம் இருக்கிறதே. மனைவியும் மக்களும் முக்கியந்தான். இதை கல்யாணமவர்களும் ஏன் ஆகாதவர்களும் உங்களில் புரிந்திருப்பீர்கள். கோயிலுக்கு போனால் கூட தந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறதோ, நம் மகளுக்கு நல்ல கணவன் வாய்ப்பானா, மகன் தவறான வழியில் போகாமல் இருப்பானா, நம் மனைவி சந்தோஷமாக இருக்கிறாளா, அம்மா சவுக்கியமாக இருக்கிறாளா இப்படித்தான் கண்ணை மூடியவுடன் தோன்றும். இது தவறில்லை. ஏனென்றால் நம் நிலை அதான். இறைவனை நினைக்கக்கூட இவை (நினைப்புகள்) இடையிலே நிற்கும்போது அவனை அடையவும் முடியுமா? இவை முக்கியமில்லையா? முக்கியம் தான். ஆனால் அவைகளை விட முக்கியம் இறைவன். இப்படியாக இந்த உலகச் சழக்கைகளில் (materialistic என்றும் கொள்ளலாம்) சிக்கித் இறைவனை நினையாமல் இவற்றில் மட்டுமே அடிமையாக இருந்துவிடும் நிலை தகுமா? ஏன் தகுமோ தகுமோ என்று இருமுறை கேட்கிறார்? ஏனென்றால், கூப்பிடாமலேயே ஓடிவந்து அருளும் கருணைக்கடலான கந்தனை நினைந்தும் நான் இன்னும் விமோசனம் பெறாமல் இந்த அடிமைச் சங்கிலிகளில் சிக்கி சுழல்வது நியாயமா முருகா? இது உனக்கே அடுக்குமோ? இப்படி நான் இருப்பது உனக்குத்தானே இழுக்கு என்று emphasize செய்கிறார் அருணகிரியார்.
Monday, February 20, 2006
3. மெய்ப்பொருளாவது யாது?
வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே. 3
எளிமையான தமிழ். எல்லாருக்கும் புரியும் வகையில். ஆனா, எது மெய்ப்பொருள்? எப்ப அது புரியுங்கற முக்கியமான தத்துவத்தை சொல்கிறார் அருணகிரிநாதர். அது புரிஞ்சா போதும். வேறொன்னும் தேவையில்லை. சரி, ஸ்கூல் தமிழ் வகுப்பு ஸ்டைல்ல பார்ப்போமா? யார்கிட்ட என்ன கேக்கறார்?
சண்முகனே - ஆறுமுகத்தோனே!
வானோ - ஆகாசமோ?
புனல் - நீர் நிலைகளோ?
பார் - இந்த உலகமோ?
கனல் - நெருப்போ?
மாருதமோ - காற்றோ?
ஞானோதயமோ - ஞானம் (விஷய) பெறும் நேரமோ?
நவில்நான் மறையோ - எல்லாரும் படிக்கும் நான்கு வேதங்களோ?
யானோ - நானா?
மனமோ - என் மனமா?
எனையாண் டவிடந்தானோ - இந்தப் பாட்டுலேயே முக்கியமானது இதுதான்.
ஆறுமுகா. மெய்ப்பொருள்னா என்ன? பஞ்ச பூதங்களா? இருக்க முடியாது. ஏன்னா, பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அதிபதி நீ தானேப்பா. உனக்குள்ள அடங்கற விஷயங்கள் மெய்ப்பொருளா இருக்க வாய்ப்பில்லை. அதே மாதிரி தான் வேதங்களும், ஞானமும். அவையும் உனக்குள்ள அடங்கிடும். நான்? 'நான்'கறத விட்டதால தானே எனக்கே மெய்ப்பொருளச் சொன்னாய். ஸோ, அதுவா இருக்க சான்ஸில்லை. என் மனமா? அதுக்கும் வாய்ப்பில்லை. ஏன்னா, போன பாட்டுல பார்த்த மாதிரி மனசுக்குள்ள கட்டுப்படறது பரம்பொருள் அல்ல. அதனுடைய ஒரு சின்ன அம்சமே. சரி அப்ப எதுதான் மெய்ப்பொருள்? எங்க தான் இருக்கு?
எனையாண் டவிடந்தானோ தான் இங்க முக்கியம். தானேன்னு சொல்லிருக்கணும். புதிரா இருக்கட்டுமேன்னு தானோன்னு சொல்லிட்டார் அருணகிரி. ஒருவேளை அவருக்கும் சந்தேகம் இருந்ததோ என்னவோ? ஆனா அநுபூதி எழுதுனவருக்கு சந்தேகம் வருமா? எவ்வளவு பெரிய ஞானி அவர்? மிச்ச எல்லாத்துக்கும் இல்லாம எனை ஆண்ட இடத்துக்கு மட்டும் 'தானோ' போட்டுருக்கார்? ஏன்னா, இதுல இடம் கறது physical location அ குறிக்கவில்லை. மாறாக என்னை நீ ஆட்கொண்ட சமயம்னு (event) பொருள் கொள்ளலாம். ஆட்கொண்ட சமயம்னா என்ன? போன பாட்டுல பார்த்தோமே. "என்னை யிழந்த நலம்" அதுவே தான். அதாவது நானென்பது மறைந்து பரமாத்மாவோடு ஒன்றாக கலக்கும் சமயம். அந்த நிலை. மெய்ப்பொருள்னா என்னன்னு அப்பதான் புரியும். மிச்ச எல்லாமே காலத்தால் அழிய/மாறக்கூடியவைன்னு சொல்றாரு. இதுல பொருளாவது சண்முகனேன்னு சொன்னாலும், அதாவது இதுதான் பொருளா சண்முகான்னு கேள்வி கேட்டாலும்: கேள்வி கந்தனுக்கில்லை. நமக்கே.
ஜிராவின் பதிவு
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே. 3
எளிமையான தமிழ். எல்லாருக்கும் புரியும் வகையில். ஆனா, எது மெய்ப்பொருள்? எப்ப அது புரியுங்கற முக்கியமான தத்துவத்தை சொல்கிறார் அருணகிரிநாதர். அது புரிஞ்சா போதும். வேறொன்னும் தேவையில்லை. சரி, ஸ்கூல் தமிழ் வகுப்பு ஸ்டைல்ல பார்ப்போமா? யார்கிட்ட என்ன கேக்கறார்?
சண்முகனே - ஆறுமுகத்தோனே!
வானோ - ஆகாசமோ?
புனல் - நீர் நிலைகளோ?
பார் - இந்த உலகமோ?
கனல் - நெருப்போ?
மாருதமோ - காற்றோ?
ஞானோதயமோ - ஞானம் (விஷய) பெறும் நேரமோ?
நவில்நான் மறையோ - எல்லாரும் படிக்கும் நான்கு வேதங்களோ?
யானோ - நானா?
மனமோ - என் மனமா?
எனையாண் டவிடந்தானோ - இந்தப் பாட்டுலேயே முக்கியமானது இதுதான்.
ஆறுமுகா. மெய்ப்பொருள்னா என்ன? பஞ்ச பூதங்களா? இருக்க முடியாது. ஏன்னா, பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அதிபதி நீ தானேப்பா. உனக்குள்ள அடங்கற விஷயங்கள் மெய்ப்பொருளா இருக்க வாய்ப்பில்லை. அதே மாதிரி தான் வேதங்களும், ஞானமும். அவையும் உனக்குள்ள அடங்கிடும். நான்? 'நான்'கறத விட்டதால தானே எனக்கே மெய்ப்பொருளச் சொன்னாய். ஸோ, அதுவா இருக்க சான்ஸில்லை. என் மனமா? அதுக்கும் வாய்ப்பில்லை. ஏன்னா, போன பாட்டுல பார்த்த மாதிரி மனசுக்குள்ள கட்டுப்படறது பரம்பொருள் அல்ல. அதனுடைய ஒரு சின்ன அம்சமே. சரி அப்ப எதுதான் மெய்ப்பொருள்? எங்க தான் இருக்கு?
எனையாண் டவிடந்தானோ தான் இங்க முக்கியம். தானேன்னு சொல்லிருக்கணும். புதிரா இருக்கட்டுமேன்னு தானோன்னு சொல்லிட்டார் அருணகிரி. ஒருவேளை அவருக்கும் சந்தேகம் இருந்ததோ என்னவோ? ஆனா அநுபூதி எழுதுனவருக்கு சந்தேகம் வருமா? எவ்வளவு பெரிய ஞானி அவர்? மிச்ச எல்லாத்துக்கும் இல்லாம எனை ஆண்ட இடத்துக்கு மட்டும் 'தானோ' போட்டுருக்கார்? ஏன்னா, இதுல இடம் கறது physical location அ குறிக்கவில்லை. மாறாக என்னை நீ ஆட்கொண்ட சமயம்னு (event) பொருள் கொள்ளலாம். ஆட்கொண்ட சமயம்னா என்ன? போன பாட்டுல பார்த்தோமே. "என்னை யிழந்த நலம்" அதுவே தான். அதாவது நானென்பது மறைந்து பரமாத்மாவோடு ஒன்றாக கலக்கும் சமயம். அந்த நிலை. மெய்ப்பொருள்னா என்னன்னு அப்பதான் புரியும். மிச்ச எல்லாமே காலத்தால் அழிய/மாறக்கூடியவைன்னு சொல்றாரு. இதுல பொருளாவது சண்முகனேன்னு சொன்னாலும், அதாவது இதுதான் பொருளா சண்முகான்னு கேள்வி கேட்டாலும்: கேள்வி கந்தனுக்கில்லை. நமக்கே.
ஜிராவின் பதிவு
Tuesday, February 14, 2006
2. எனையிழந்த நல்ஞ் சொல்லாய்
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே. (2)
உல்லாச நிராகுல யோகவிதச் சல்லாப விநோதனு நீயலையோ?
எப்போதும் சந்தோஷமா, கவலைகளே இல்லாம இருக்கறவன் முருகன். கவலையா இருக்கும்போது முருகனோட பிம்பத்த நினச்சு பாருங்க. பன்னிரண்டு கை ஆறுமுகனோ, இல்லை கோவணத்தோட நிற்கும் பழனியாண்டியோ. உங்களுக்கு எந்த உருவம் பிடிக்குமோ அதை நினைச்சுக்கலாம். தெளிவு கிடைக்கும். அமைதி வரும். சும்மா ஒரு ஆபீஸ்ல மேனேஜருக்கே எவ்வளவு கஷ்டம். நம்ம ஜோசப் சார் 'திரும்பிப் பாக்கறேன்' படிச்சீங்கன்னா புரியும். எத்தன பேர்னால எத்தன பிரச்சனைகள். அப்படி பாத்தா, முருகன் யாரு? அண்டசராசரங்களும் அதிபதி. எல்லாதுக்கும் CEO அவன்தான். சுரபூபதி. இதுக்கு ஜிரா ஏற்கனவே சொல்லிட்டார். அதாவது தேவர்களின் தலைவன். அவர்களின் சேனாதிபதி. அவங்களோட மாப்பிள்ளை. அவன் எப்படி எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கான்? எப்படி எப்பவும் கோவமோ எரிச்சலோ படாம யோக நிலையில் இருந்துகிட்டு இதமா, பதமா அடியார்களுக்கு அருளுகிறான்? அதுக்கு அடுத்த வரிகளை படிச்சா புரியும்.
எல்லாமற என்னை யிழந்த நலஞ்சொல்லாய் முருகா சுரபூ பதியே
முருகன குழந்தைன்னு சொல்றோம். அப்படித்தான் பாக்கறோம். நினைக்கறோம். சிலைகளா வடிச்சி வெச்சுருக்கோம். அவனும் அப்படிதான் வந்து பழநி ல நிக்கலையா? ஏன் குழந்தை? ஏன் குமரன்? உருவமும் அரூபமும் எல்லாமுமாய் பிரகாசிக்கும் பரமாத்மாவுக்கு கையும், காலும் வரைஞ்சு நாம எளிதா identify பண்ணிக்கறா மாதிரி முருகனுக்கு உருவம் கொடுத்து வச்சிருக்கோம். அவ்வளவு தான். தெய்வத்தை புரிஞ்சுக்கறதுல ரெண்டு வகை இருக்கு. இதுக்கு பரமாச்சாரியாள் அழகா விளக்கம் சொல்லுவார்.
கடவுளை எப்படி புரிஞ்சிக்கிறது? பக்தி மூலமா மட்டும் தான் முடியும். ஆனா, எதுமேல பக்தி வைக்கணும், என்னன்னு பக்தி வைக்கணும்னு தெரியாம எப்படி பக்தி பண்ணுவது? இது ஒரு contradiction, இல்லியா? அதுக்காக Starter Kit மாதிரி தான் முருகன், கண்ணன், சிவன், பார்வதின்னு ஒரு உருவம் கொடுத்து, அதுல நமக்கு எது பிடிச்சிருக்கோ அதுமேல பக்தி பண்ணலாம். ஒண்ணுமேயில்லாம எப்படி செய்யறது? பக்தியில் சில நிலைகள் இருக்கு. முதல் நிலைதான் நம்முடையது. அதாவது, நான் வேறு கடவுள் வேறு பூதங்கள் வேறு என்று பிரித்து இதில் 'நான்' முக்கியமாக போய்விடுகிறது. இந்த 'நான்' இருக்கறவரைக்கும் உண்மையாக கடவுளை, அவன் தத்துவத்தை அறிய முடியாது. நான் இருக்கறவரைக்கும் பஞ்சபூதங்களால் ஆனது மட்டும் தான் புரியும், தெரியும் நமக்கு. அதனாலேயே, நம்ம மேல இருக்கற ஆசையினால இப்படி எளிதா புரிஞ்சிக்கறா மாதிரி பரமாத்மா தன் மாயையினாலே எளிய, சிறிய வடிவங்களில் நம்முன் வருகிறது. ஏன்னா, குறைஞ்சு வராமல் போனால் அவருடைய முழு சுவரூபத்தை நம்மால் comprehend பண்ண முடியாது. நம் அறிவு அவ்வளவுதான்.
எளிய உதாரணம். நிறைய பேர் உங்க டேபிள்ல globe வச்சுருப்பீங்க. அது இந்த உலகத்தோட desktop version. நமக்கு எளிதா புரியறதுக்காக simplify பண்ணி வச்சுருக்கோம். அதுவே உலகமாகாது. அதுவே உலகம்னும் நினைக்கமுடியாது. அதே மாதிரி தான். கிருஷணனை யசோதா உரலில் கட்டிப்போட்டாளா? அவ கட்டிப்போட்டது வேதங்களின் சாரம், உபநிஷத்துகள் பேசும் தத்துவம் மற்றும் எல்லாம் இருப்பதுவும் இல்லாததுமாக இருக்கற பரமாத்மாவா? அவ்ளோ பெரிய பரமாத்மாவை வெறும் உரலில் கட்டிப்போட முடியுமா? முடியாதில்லியா? அப்புறம் எப்படி கண்ணனைக் கட்டிப்போட்டாள்? உபநிஷத்துகளின் தத்துவத்தை கட்டிப்போட முடியுமா? ஏன் கட்டிப்போட முடிஞ்சதுன்னா, வந்தது முழு ரூபம் இல்ல. தன் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட சுயரூபத்தை சின்னதாக நமக்கு புரியும் வகையில் தன்னைக் குறுக்கிக்கொண்டு வந்ததால் தான் கட்டிப்போட முடிந்தது. அது மாதிரி 'நான்' இன்னும் இருக்கும்வரையில் நம் மனசுக்குள் பூரணமான பரமாத்மாவைக் கட்டிப்போட முடியுமா? முடியவே முடியாது. நாம் அவனை பார்க்கவேண்டும் என்கிற ஆசையினால் தன்னைக் குறுக்கிக்கொண்டு, நமக்கு புரியும் வகையில், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் வந்து காட்சி தருகிறான் இறைவன். நம்மால் கட்டிப்போடக் கூடிய குட்டி சைஸில் வந்து நம் மனதில் உக்கார்ந்து கொள்கிறான். இது ஆரம்ப நிலை. இந்த நிலையில் கடவுள் மேலும் அன்பு உண்டு. மற்ற worldly விஷயங்களிலும் அன்பு சம அளவில் இருக்கும்.
அடுத்த நிலையில், மற்ற அன்புகள் மறைந்து முழுமையாக இறைவன் மேல் மட்டுமே அன்பு வைத்தால், 'நாம், நான்' என்பதெல்லாம் மறைந்துவிடும். 'ஆஹா, இத்தன நாள் உன்னை இதுன்னு நினச்சேனே. நீயாரு, உன் தத்துவம் என்ன என்று புரிகிறதே' என்று பாடத்தோன்றும். பரமாத்மாவோடு முழுமையாக கலந்துவிடும் உன்னத நிலையது. அவனுடைய தத்துவம் புரியும் சரி, அப்ப என்ன விசேஷமா புரியும்? பார்க்கறதெல்லாம் பரமாத்மா என்ற தெளிவோடு, பார்க்கிறதும் பரமாத்மா என்று புதிதாக புரிய வரும். கடலில் மிதக்கும் ஐஸ்கட்டி மாதிரி தான் நாமும் இருக்கிறோம்னு புரியும். அது என்னிக்கு புரிகிறதோ, நான் என்பது மறைந்து, ஐஸ்கட்டி உடனே பரமாத்மா என்னும் கடலில் கலந்துவிடும். அப்படி கரைஞ்சவர் அருணகிரிநாதர். அதைத்தான் "எனை இழந்த நலம்"னு சொல்றார். அவருக்கு புரிஞ்சுடுச்சு. ஆனா, அடுத்தவங்களுக்கு, நம்மளப் போன்ற சாமானியர்களுக்கு எப்படி விளக்கறதுன்னு நீயே சொல்லிடுப்பா முருகான்னு முருகன் கிட்ட சொல்றாரு.
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே. (2)
உல்லாச நிராகுல யோகவிதச் சல்லாப விநோதனு நீயலையோ?
எப்போதும் சந்தோஷமா, கவலைகளே இல்லாம இருக்கறவன் முருகன். கவலையா இருக்கும்போது முருகனோட பிம்பத்த நினச்சு பாருங்க. பன்னிரண்டு கை ஆறுமுகனோ, இல்லை கோவணத்தோட நிற்கும் பழனியாண்டியோ. உங்களுக்கு எந்த உருவம் பிடிக்குமோ அதை நினைச்சுக்கலாம். தெளிவு கிடைக்கும். அமைதி வரும். சும்மா ஒரு ஆபீஸ்ல மேனேஜருக்கே எவ்வளவு கஷ்டம். நம்ம ஜோசப் சார் 'திரும்பிப் பாக்கறேன்' படிச்சீங்கன்னா புரியும். எத்தன பேர்னால எத்தன பிரச்சனைகள். அப்படி பாத்தா, முருகன் யாரு? அண்டசராசரங்களும் அதிபதி. எல்லாதுக்கும் CEO அவன்தான். சுரபூபதி. இதுக்கு ஜிரா ஏற்கனவே சொல்லிட்டார். அதாவது தேவர்களின் தலைவன். அவர்களின் சேனாதிபதி. அவங்களோட மாப்பிள்ளை. அவன் எப்படி எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கான்? எப்படி எப்பவும் கோவமோ எரிச்சலோ படாம யோக நிலையில் இருந்துகிட்டு இதமா, பதமா அடியார்களுக்கு அருளுகிறான்? அதுக்கு அடுத்த வரிகளை படிச்சா புரியும்.
எல்லாமற என்னை யிழந்த நலஞ்சொல்லாய் முருகா சுரபூ பதியே
முருகன குழந்தைன்னு சொல்றோம். அப்படித்தான் பாக்கறோம். நினைக்கறோம். சிலைகளா வடிச்சி வெச்சுருக்கோம். அவனும் அப்படிதான் வந்து பழநி ல நிக்கலையா? ஏன் குழந்தை? ஏன் குமரன்? உருவமும் அரூபமும் எல்லாமுமாய் பிரகாசிக்கும் பரமாத்மாவுக்கு கையும், காலும் வரைஞ்சு நாம எளிதா identify பண்ணிக்கறா மாதிரி முருகனுக்கு உருவம் கொடுத்து வச்சிருக்கோம். அவ்வளவு தான். தெய்வத்தை புரிஞ்சுக்கறதுல ரெண்டு வகை இருக்கு. இதுக்கு பரமாச்சாரியாள் அழகா விளக்கம் சொல்லுவார்.
கடவுளை எப்படி புரிஞ்சிக்கிறது? பக்தி மூலமா மட்டும் தான் முடியும். ஆனா, எதுமேல பக்தி வைக்கணும், என்னன்னு பக்தி வைக்கணும்னு தெரியாம எப்படி பக்தி பண்ணுவது? இது ஒரு contradiction, இல்லியா? அதுக்காக Starter Kit மாதிரி தான் முருகன், கண்ணன், சிவன், பார்வதின்னு ஒரு உருவம் கொடுத்து, அதுல நமக்கு எது பிடிச்சிருக்கோ அதுமேல பக்தி பண்ணலாம். ஒண்ணுமேயில்லாம எப்படி செய்யறது? பக்தியில் சில நிலைகள் இருக்கு. முதல் நிலைதான் நம்முடையது. அதாவது, நான் வேறு கடவுள் வேறு பூதங்கள் வேறு என்று பிரித்து இதில் 'நான்' முக்கியமாக போய்விடுகிறது. இந்த 'நான்' இருக்கறவரைக்கும் உண்மையாக கடவுளை, அவன் தத்துவத்தை அறிய முடியாது. நான் இருக்கறவரைக்கும் பஞ்சபூதங்களால் ஆனது மட்டும் தான் புரியும், தெரியும் நமக்கு. அதனாலேயே, நம்ம மேல இருக்கற ஆசையினால இப்படி எளிதா புரிஞ்சிக்கறா மாதிரி பரமாத்மா தன் மாயையினாலே எளிய, சிறிய வடிவங்களில் நம்முன் வருகிறது. ஏன்னா, குறைஞ்சு வராமல் போனால் அவருடைய முழு சுவரூபத்தை நம்மால் comprehend பண்ண முடியாது. நம் அறிவு அவ்வளவுதான்.
எளிய உதாரணம். நிறைய பேர் உங்க டேபிள்ல globe வச்சுருப்பீங்க. அது இந்த உலகத்தோட desktop version. நமக்கு எளிதா புரியறதுக்காக simplify பண்ணி வச்சுருக்கோம். அதுவே உலகமாகாது. அதுவே உலகம்னும் நினைக்கமுடியாது. அதே மாதிரி தான். கிருஷணனை யசோதா உரலில் கட்டிப்போட்டாளா? அவ கட்டிப்போட்டது வேதங்களின் சாரம், உபநிஷத்துகள் பேசும் தத்துவம் மற்றும் எல்லாம் இருப்பதுவும் இல்லாததுமாக இருக்கற பரமாத்மாவா? அவ்ளோ பெரிய பரமாத்மாவை வெறும் உரலில் கட்டிப்போட முடியுமா? முடியாதில்லியா? அப்புறம் எப்படி கண்ணனைக் கட்டிப்போட்டாள்? உபநிஷத்துகளின் தத்துவத்தை கட்டிப்போட முடியுமா? ஏன் கட்டிப்போட முடிஞ்சதுன்னா, வந்தது முழு ரூபம் இல்ல. தன் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட சுயரூபத்தை சின்னதாக நமக்கு புரியும் வகையில் தன்னைக் குறுக்கிக்கொண்டு வந்ததால் தான் கட்டிப்போட முடிந்தது. அது மாதிரி 'நான்' இன்னும் இருக்கும்வரையில் நம் மனசுக்குள் பூரணமான பரமாத்மாவைக் கட்டிப்போட முடியுமா? முடியவே முடியாது. நாம் அவனை பார்க்கவேண்டும் என்கிற ஆசையினால் தன்னைக் குறுக்கிக்கொண்டு, நமக்கு புரியும் வகையில், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் வந்து காட்சி தருகிறான் இறைவன். நம்மால் கட்டிப்போடக் கூடிய குட்டி சைஸில் வந்து நம் மனதில் உக்கார்ந்து கொள்கிறான். இது ஆரம்ப நிலை. இந்த நிலையில் கடவுள் மேலும் அன்பு உண்டு. மற்ற worldly விஷயங்களிலும் அன்பு சம அளவில் இருக்கும்.
அடுத்த நிலையில், மற்ற அன்புகள் மறைந்து முழுமையாக இறைவன் மேல் மட்டுமே அன்பு வைத்தால், 'நாம், நான்' என்பதெல்லாம் மறைந்துவிடும். 'ஆஹா, இத்தன நாள் உன்னை இதுன்னு நினச்சேனே. நீயாரு, உன் தத்துவம் என்ன என்று புரிகிறதே' என்று பாடத்தோன்றும். பரமாத்மாவோடு முழுமையாக கலந்துவிடும் உன்னத நிலையது. அவனுடைய தத்துவம் புரியும் சரி, அப்ப என்ன விசேஷமா புரியும்? பார்க்கறதெல்லாம் பரமாத்மா என்ற தெளிவோடு, பார்க்கிறதும் பரமாத்மா என்று புதிதாக புரிய வரும். கடலில் மிதக்கும் ஐஸ்கட்டி மாதிரி தான் நாமும் இருக்கிறோம்னு புரியும். அது என்னிக்கு புரிகிறதோ, நான் என்பது மறைந்து, ஐஸ்கட்டி உடனே பரமாத்மா என்னும் கடலில் கலந்துவிடும். அப்படி கரைஞ்சவர் அருணகிரிநாதர். அதைத்தான் "எனை இழந்த நலம்"னு சொல்றார். அவருக்கு புரிஞ்சுடுச்சு. ஆனா, அடுத்தவங்களுக்கு, நம்மளப் போன்ற சாமானியர்களுக்கு எப்படி விளக்கறதுன்னு நீயே சொல்லிடுப்பா முருகான்னு முருகன் கிட்ட சொல்றாரு.
Wednesday, February 01, 2006
8. பாடும் பணியே பணியா யருள்வாய்!
ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே. (1)
//ஆடும் பரிவே லணிசே வலெனப்//
இதுல பரியென்று மயிலைத்தான் குறிப்பிடுகிறார் அருணகிரியார். பரின்னா குதிரையாச்சே? ஏன் மயில்னு சொல்றார்னு நானும் குழம்பியியிருந்தேன். ஆனால் நம்ம ஜிரா அழகா சொல்லிட்டாரு. அழகிய நடனமாடும் மயில். முருகப்பெருமானின் மயில் என்ன வகை நடனமாடும்? தஞ்சாவூர் கோயிலைப் பார்த்தவர்களுக்கு விளக்கவே வேண்டாம். ஓம் எனும் மந்திரத்திற்கு ஒப்ப வடிவில், அந்த சூட்சும மந்திரத்தையே விளக்கும் வகையில் ஆடும் மயிலும்...
முருகன் தன் சின்னமாய் அணிந்திருக்கும் சேவலின் வேலை எத்தகையது? அவனையே நினைத்துருகும் அன்பர்களுக்கு அவன் அருள் கிட்டியது குறித்து கொக்கரித்து அவர்களுக்கு உணர்த்துவதே ஆகும். கொஞ்சம் சிந்திப்போமாயின் (அதான், என் கற்பனை!)
தினமும் காலைல சேவல் கூவுதே, எதுக்கு? 'மனிதர்களே கேளுங்கள்! முருகனின் அருள் உங்களை என்றென்றும் காக்கும்' என்று சொல்வதற்கே. ஏன் அருள் பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவாய் பின்னே கொக்கரிக்கிறது? 'முருகன் அருள் பெறுவதொன்றும் கஷ்டமான காரியமில்லை. உங்க ஊரிலேயே நிறைய பேர் பெற்றிருக்கின்றனர்.' அதனால, அவங்களை எழுப்புற சாக்குல.. முருகன் தாளை நினைக்காதவங்களுக்கும் அறைகூவலாய் முருகனைப் பணிந்து நற்கதி அடையுங்கள் என்று தினந்தினமும் காலையில் நமக்கு சொல்கிறது சேவல். தன்னைப் பணிந்தோர் மட்டுமன்றி, மற்றோரும் தம்மை நாடி நற்கதி அடையவேண்டும் என்ற கந்தனது அளவற்ற கருணையே அதற்கு காரணம். (இதற்கும் குமரனும் தி.இரா.சவும் வேறு அழகிய விளக்கங்களை இராகவனின் பதிவில் சொல்லியிருக்கின்றனர்)
மேலும் சேவல்-சேவகம்-சேவகன் என்பது போன்ற சொற்களிலிருந்து அடிப்படை பொருளை அறிந்து கொள்ளலாம். முருகனுக்கு சேவகம் என்பதே கருத்து. இவற்றிற்கு மூலம் எல்லாம் ஆராயாமல், மேலோட்டமாக பார்க்கையில் தோன்றுவதைத்தான் எழுதுகிறேன்.
இப்படி ஆடிடும் மயிலையும் வேலையும் சேவலையும் அணிந்திருப்பவனே..
பாடும் பணியே பணியா யருள்வாய்
இப்படி முருகனுக்கு சேவகம் புரியும் மயிலும் சேவலும்.. இதில் சேவல் யார்? சூரபத்மனின் நீட்சியல்லவா? தன்னை எதிர்த்து சண்டை போட்டவனேயே தன் பக்கத்தில வச்சுக்கறவர் நாம பக்தியோட தினமும் அவர் புகழ் பாடுனா வேணாம்னா சொல்லப் போறாரு?
என்றென்றும் உன்னைப்பாடும் பணியே என் வாழ்வின் தலையாய பணியாய் அருள்வாய்...
'நின் இணையடிகள் மறவாத மனம் மாத்திரம் எனக்கடைதல் வேண்டுமரசே' என்று அடிகளார் கூட இதே போன்ற கருத்தை உடைய பாடலை பாடியிருக்கிறார். எத்தனை பிறவியெடுத்தாலும் நல்லது/கெட்டது,செல்வம்/வறுமை எதுவந்தாலும் உனை மறவாத நிலையொன்றை மட்டுமே வேண்டுவேன் என்று. அதுபத்தி விரிவா இன்னொரு நாளைக்கு.
தேடுங் கயமா முகனைச் செருவிற் காடுந் தனியா னைசகோ தரனே
கயமா முகன்னு அருணகிரிநாதர் சொல்றது ஒரு நல்ல கதை. கஜமுகாஸுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். பல அசுரர்களைப் போல early days இல் சிவனைக்குறித்து கடுந்தவம் புரிந்தான். அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழின்னு சொல்லிருக்காங்களே. முருகனின் கருணையெல்லாவற்றிற்கும் ஊற்று அந்த பரமேஸ்வரனே அல்லவா? சர்வேஸ்வரனும் கஜமுகாசுரன் கேட்ட வரங்களை அளித்தார். ஒரு விஷயம், சிவபெருமான் வரம் கொடுக்கும் விஷயத்தில் கொஞ்சம் மக்குன்னு நம்ம புராணங்கள கேட்டாலே புரிஞ்சிக்கலாம். எவ்வளவு மோசமான வில்லன் கேரக்டர் வந்தாலும், அவனுக்கு இவ்ளோ சக்தி கொடுத்தா அடுத்து அவன் என்ன பண்ணுவான்னு தெரிஞ்சும், நமச்சிவாயன்னு நாலுவாட்டி சொன்னா "பக்தா உன் பக்தியை மெச்சினோம். கேள், என்ன வேண்டும்?"னு கேட்டுக்கொடுத்துட்டு போயிடுவார். அப்புறமா யாராவது இப்படி செஞ்சிட்டேங்களேன்னு அவர்கிட்ட போய் அழுதா, 'எல்லாம் என் விளையாட்டு'ன்னு ஒரு பிட்டு போட்டுடுவார். இராவணன் தொடங்கி பல அசுரர்கள் குதியாட்டம் போட்டதுக்கு காரணமே சிவனின் வெள்ளை மனம் தான். (இது விளையாட்டுக்காக சொல்வது. பிரணவத்தின் தத்துவமான அவருக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?) அதேமாதிரி, பெரும்பாலான அசுரர்களைப் போல பின்னாளில் தன் பலத்தின் போதை தலைக்கேறி தேடித் தேடிச் சென்று முனிவர்களையும் அவர்களின் தவங்களையும் அழிக்க, கஜமுகாசுரனை ஒழிக்க சிவபெருமான் பிள்ளையாரை தன் கணங்களோடு (அவர்தான் கணபதி ஆயிற்றே) அனுப்பினார். பிள்ளையார் பற்றி பல்வேறு கதைகள் உண்டென்றாலும்... க.மு.அசுரன்(:)) சிவபெருமானிடத்து பெற்ற வரத்தின் படி எந்தவொரு ஆயுதத்தாலும் அழிக்கமுடியாதவனாய் இருந்தான். அதனாலேயே விநாயகர் தன் வலது தந்தத்தை உடைத்து அதைக்கொண்டு அவனைக்கொன்றார் என்று ஒரு கதை. விநாயகரின் வரலாற்றில் பல வித கதைகள் உண்டு. இந்துமதத்தின் பிதாமகரான வேதவியாசர் பாரதத்தை எழுதச் சொன்ன போது தன் தந்தத்தை உடைத்து எழுதினார் என்றும் ஒரு கதை உண்டு. எதுவாகினும்....
நல்லோர்களைத் தேடிச் சென்று தொல்லைக் கொடுத்த கஜமுகாசுரனை, சிவனின் ஆணையால் அழித்தொழித்த யானைமுகத்தானின் சகோதரனே!
----
நல்லோர்களைத் தேடிச் சென்று தொல்லைக் கொடுத்த கஜமுகாசுரனை, சிவனின் ஆணையால் அழித்தொழித்த யானைமுகத்தானின் சகோதரனே!
ஆடிடும் மயிலையும் வேலையும் சேவலையும் அணிந்திருப்பவனே..
என்றென்றும் உன்னைப்பாடும் பணியே என் வாழ்வின் தலையாய பணியாய் அருள்வாய்...
--
தமிழ்மணத்தில் சேர்வதற்கு முன் கருத்துள்ள (!) மூன்று நான்கு பதிவுகளாவது போட்டிருக்க வேண்டும் என்ற விதியால் நேற்றைக்கு ஏகப்பட்ட பதிவுகள் போட்டு ஓவர்டோஸ் கொடுத்துட்டேன். இதுக்கே உஷா அக்கா ஞே ன்னு விழிச்சதால, இனிமே தினமும் ஒரு பதிவுக்கு மேல போடப்போறதில்லை. :)
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே. (1)
//ஆடும் பரிவே லணிசே வலெனப்//
இதுல பரியென்று மயிலைத்தான் குறிப்பிடுகிறார் அருணகிரியார். பரின்னா குதிரையாச்சே? ஏன் மயில்னு சொல்றார்னு நானும் குழம்பியியிருந்தேன். ஆனால் நம்ம ஜிரா அழகா சொல்லிட்டாரு. அழகிய நடனமாடும் மயில். முருகப்பெருமானின் மயில் என்ன வகை நடனமாடும்? தஞ்சாவூர் கோயிலைப் பார்த்தவர்களுக்கு விளக்கவே வேண்டாம். ஓம் எனும் மந்திரத்திற்கு ஒப்ப வடிவில், அந்த சூட்சும மந்திரத்தையே விளக்கும் வகையில் ஆடும் மயிலும்...
முருகன் தன் சின்னமாய் அணிந்திருக்கும் சேவலின் வேலை எத்தகையது? அவனையே நினைத்துருகும் அன்பர்களுக்கு அவன் அருள் கிட்டியது குறித்து கொக்கரித்து அவர்களுக்கு உணர்த்துவதே ஆகும். கொஞ்சம் சிந்திப்போமாயின் (அதான், என் கற்பனை!)
தினமும் காலைல சேவல் கூவுதே, எதுக்கு? 'மனிதர்களே கேளுங்கள்! முருகனின் அருள் உங்களை என்றென்றும் காக்கும்' என்று சொல்வதற்கே. ஏன் அருள் பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவாய் பின்னே கொக்கரிக்கிறது? 'முருகன் அருள் பெறுவதொன்றும் கஷ்டமான காரியமில்லை. உங்க ஊரிலேயே நிறைய பேர் பெற்றிருக்கின்றனர்.' அதனால, அவங்களை எழுப்புற சாக்குல.. முருகன் தாளை நினைக்காதவங்களுக்கும் அறைகூவலாய் முருகனைப் பணிந்து நற்கதி அடையுங்கள் என்று தினந்தினமும் காலையில் நமக்கு சொல்கிறது சேவல். தன்னைப் பணிந்தோர் மட்டுமன்றி, மற்றோரும் தம்மை நாடி நற்கதி அடையவேண்டும் என்ற கந்தனது அளவற்ற கருணையே அதற்கு காரணம். (இதற்கும் குமரனும் தி.இரா.சவும் வேறு அழகிய விளக்கங்களை இராகவனின் பதிவில் சொல்லியிருக்கின்றனர்)
மேலும் சேவல்-சேவகம்-சேவகன் என்பது போன்ற சொற்களிலிருந்து அடிப்படை பொருளை அறிந்து கொள்ளலாம். முருகனுக்கு சேவகம் என்பதே கருத்து. இவற்றிற்கு மூலம் எல்லாம் ஆராயாமல், மேலோட்டமாக பார்க்கையில் தோன்றுவதைத்தான் எழுதுகிறேன்.
இப்படி ஆடிடும் மயிலையும் வேலையும் சேவலையும் அணிந்திருப்பவனே..
பாடும் பணியே பணியா யருள்வாய்
இப்படி முருகனுக்கு சேவகம் புரியும் மயிலும் சேவலும்.. இதில் சேவல் யார்? சூரபத்மனின் நீட்சியல்லவா? தன்னை எதிர்த்து சண்டை போட்டவனேயே தன் பக்கத்தில வச்சுக்கறவர் நாம பக்தியோட தினமும் அவர் புகழ் பாடுனா வேணாம்னா சொல்லப் போறாரு?
என்றென்றும் உன்னைப்பாடும் பணியே என் வாழ்வின் தலையாய பணியாய் அருள்வாய்...
'நின் இணையடிகள் மறவாத மனம் மாத்திரம் எனக்கடைதல் வேண்டுமரசே' என்று அடிகளார் கூட இதே போன்ற கருத்தை உடைய பாடலை பாடியிருக்கிறார். எத்தனை பிறவியெடுத்தாலும் நல்லது/கெட்டது,செல்வம்/வறுமை எதுவந்தாலும் உனை மறவாத நிலையொன்றை மட்டுமே வேண்டுவேன் என்று. அதுபத்தி விரிவா இன்னொரு நாளைக்கு.
தேடுங் கயமா முகனைச் செருவிற் காடுந் தனியா னைசகோ தரனே
கயமா முகன்னு அருணகிரிநாதர் சொல்றது ஒரு நல்ல கதை. கஜமுகாஸுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். பல அசுரர்களைப் போல early days இல் சிவனைக்குறித்து கடுந்தவம் புரிந்தான். அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழின்னு சொல்லிருக்காங்களே. முருகனின் கருணையெல்லாவற்றிற்கும் ஊற்று அந்த பரமேஸ்வரனே அல்லவா? சர்வேஸ்வரனும் கஜமுகாசுரன் கேட்ட வரங்களை அளித்தார். ஒரு விஷயம், சிவபெருமான் வரம் கொடுக்கும் விஷயத்தில் கொஞ்சம் மக்குன்னு நம்ம புராணங்கள கேட்டாலே புரிஞ்சிக்கலாம். எவ்வளவு மோசமான வில்லன் கேரக்டர் வந்தாலும், அவனுக்கு இவ்ளோ சக்தி கொடுத்தா அடுத்து அவன் என்ன பண்ணுவான்னு தெரிஞ்சும், நமச்சிவாயன்னு நாலுவாட்டி சொன்னா "பக்தா உன் பக்தியை மெச்சினோம். கேள், என்ன வேண்டும்?"னு கேட்டுக்கொடுத்துட்டு போயிடுவார். அப்புறமா யாராவது இப்படி செஞ்சிட்டேங்களேன்னு அவர்கிட்ட போய் அழுதா, 'எல்லாம் என் விளையாட்டு'ன்னு ஒரு பிட்டு போட்டுடுவார். இராவணன் தொடங்கி பல அசுரர்கள் குதியாட்டம் போட்டதுக்கு காரணமே சிவனின் வெள்ளை மனம் தான். (இது விளையாட்டுக்காக சொல்வது. பிரணவத்தின் தத்துவமான அவருக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?) அதேமாதிரி, பெரும்பாலான அசுரர்களைப் போல பின்னாளில் தன் பலத்தின் போதை தலைக்கேறி தேடித் தேடிச் சென்று முனிவர்களையும் அவர்களின் தவங்களையும் அழிக்க, கஜமுகாசுரனை ஒழிக்க சிவபெருமான் பிள்ளையாரை தன் கணங்களோடு (அவர்தான் கணபதி ஆயிற்றே) அனுப்பினார். பிள்ளையார் பற்றி பல்வேறு கதைகள் உண்டென்றாலும்... க.மு.அசுரன்(:)) சிவபெருமானிடத்து பெற்ற வரத்தின் படி எந்தவொரு ஆயுதத்தாலும் அழிக்கமுடியாதவனாய் இருந்தான். அதனாலேயே விநாயகர் தன் வலது தந்தத்தை உடைத்து அதைக்கொண்டு அவனைக்கொன்றார் என்று ஒரு கதை. விநாயகரின் வரலாற்றில் பல வித கதைகள் உண்டு. இந்துமதத்தின் பிதாமகரான வேதவியாசர் பாரதத்தை எழுதச் சொன்ன போது தன் தந்தத்தை உடைத்து எழுதினார் என்றும் ஒரு கதை உண்டு. எதுவாகினும்....
நல்லோர்களைத் தேடிச் சென்று தொல்லைக் கொடுத்த கஜமுகாசுரனை, சிவனின் ஆணையால் அழித்தொழித்த யானைமுகத்தானின் சகோதரனே!
----
நல்லோர்களைத் தேடிச் சென்று தொல்லைக் கொடுத்த கஜமுகாசுரனை, சிவனின் ஆணையால் அழித்தொழித்த யானைமுகத்தானின் சகோதரனே!
ஆடிடும் மயிலையும் வேலையும் சேவலையும் அணிந்திருப்பவனே..
என்றென்றும் உன்னைப்பாடும் பணியே என் வாழ்வின் தலையாய பணியாய் அருள்வாய்...
--
தமிழ்மணத்தில் சேர்வதற்கு முன் கருத்துள்ள (!) மூன்று நான்கு பதிவுகளாவது போட்டிருக்க வேண்டும் என்ற விதியால் நேற்றைக்கு ஏகப்பட்ட பதிவுகள் போட்டு ஓவர்டோஸ் கொடுத்துட்டேன். இதுக்கே உஷா அக்கா ஞே ன்னு விழிச்சதால, இனிமே தினமும் ஒரு பதிவுக்கு மேல போடப்போறதில்லை. :)
Tuesday, January 31, 2006
7. கந்தர் அநுபூதி - கடவுள் வாழ்த்து (காப்பு)
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்!
//நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக்கு//
சின்னக் குழந்தைகளின் மனசை நாம் லேசானது என்கிறோம். ஆனால் அதுவே, விவரம் புரிந்தால்.. இதிலேயே எனக்கு ஒப்புதல் கிடையாது. விவரம் புரிகிறது என்றால் பரம்பொருளைக் குறித்த உண்மையைப் பற்றி அறியும் போதே விவரம் புரிவது என்றிருக்க வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு உலகம் தெரிவது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். எது எப்படியாயினும்.. நமக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம்? ஆசாபாசங்கள், கோபம், குரோதம், பொறாமை, பேராசை போன்றவையே. அவர்களுக்கும் அவை உண்டு. ஆனால் அவை நம்முள்ளே சில வருடங்களுக்கு நிலைத்து நிற்குமென்றால், குழந்தைகளுக்கு சில விநாடிகளே இருந்து மறைந்துவிடும். எதற்கு குழந்தைகள் பற்றியென்றால்...
அருணகிரி சுவாமிகள் சொல்வது நாம் இவ்வுலக சழக்கைகளில் சுழன்று மனம் திரிந்து, ஆண்டவன் பிறப்பில் நமக்கு அளித்த லேசான மனத்தை இம்மாதிரி காமம், குரோதம் போன்றவற்றைக் கொண்டு பெரும்பாறாங்கல்லாய் வளர்த்துவைத்திருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டவே.
ஆனால் இப்படி நாமே வளர்த்துவிட்ட / வளர்ந்துவிட்ட தீய மனதிற்கு உய்ய வழியுண்டா?
உண்டே. அதை உடனே அடுத்த வரியிலேயே சொல்லிவிடுகிறார். அருணகிரியாரே அவரின் வாழ்க்கையின் பெரும்பான்மையை தீயவற்றில் கழித்தவர். விலைமாதுக்களிடமும் மதுவிலுமே திளைத்திருந்தார். முருகனின் அருளென்ற ஒன்றில்லாமல் போயிருந்தால், இரத்தக்கண்ணீர் எம். ஆர். இராதாவின் கதாப்பாத்திரத்தை அருணகிரி வாழ்ந்தே காட்டினார் என்று சொல்லியிருப்போம். எப்படி ஒரு திருடனின் வாழ்க்கையை வால்மீகி வாழ்ந்து பின் இறையருளால் இராமாயணத்தைப் படைத்தாரோ அதைப் போலவே, அருணகிரியின் வாழ்க்கையில் முருகனின் இச்சைப்படி; தமிழ் நாட்டில் முருகனென்றால் அவனுக்கு அடுத்து அருணகிரியே நினைவுக்கு வரும்வகையில், அவருக்கு தன்னுடைய தன்னிகரில்லா கருணை மூலம், இரண்டாம் இடத்தை அளித்துள்ளான் கந்தன். நாமெல்லாம் அருணகிரி தன் முன்வாழ்க்கையில் இருந்த அளவு மோசமானவர்களாய் இன்னும் ஆகவில்லை (அவரைப் போல ஞானமும் பெறவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்!). ஆனாலும் அருணகிரியாரைப் போன்ற ஒருவருக்கே கந்தன் தன் அருளால் முக்தி அளிக்க வல்லவன் என்றால் அவன் கருணை எத்தகையான தொன்றாக இருக்க வேண்டும்? "Like Taking Candy From a Baby" என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. ஒரு குழந்தையிடமிருந்து மிக எளிதாக ஒரு மிட்டாயை வயதில் முதிர்ந்தவர்களான நாம் அபகரித்து விட முடியுமல்லவா? அதே போல தான் குமரனும். ஆனால், இவனிடத்தில் கயமைத்தனம், அறிவுஜீவித்தனங்கள் எல்லாம் செல்லுபடியாகாது. அன்பென்ற ஒன்று மட்டுமே போதும். அதை முழுமையாய் அவனிடத்தில் வைத்தால் அவன் குழந்தையேதான். நம்மை நம்பி அருளிக் காத்தருள்வதற்கு.
'கந்தா, குமரா, முருகா' என்று சொல்லி முடிக்குமுன் வந்து அருள் செய்யும் ஆறுமுகத்தானுக்கு...
//கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே//
அவனுடைய பண்புகளை, கருணையை இந்த அழகிய தமிழ்சொற்களை கொண்டு நான் தொடுத்த இந்த எளிய பாக்களாலான மாலையின் புகழ் மேலும் மேலும் சிறந்திடவே...
//பஞ்சக் கரவானை பதம் பணிவாம்//
உங்களின் தம்பியை/தங்கையைப் பற்றி மூன்றாவது மனிதர் ஒருவர் உங்களிடம் வந்து புகழ்ந்தால் உங்களுக்கு எவ்வளவு பெருமிதமாய் இருக்கும்? உங்கள் மனம் எவ்வளவு குளிர்ச்சி பெறும்? முருகா, கந்தா என்ற சொற்களே தேன் போல இனிக்கையில், அவனைக் குறித்துப் உண்மையான பக்தியில் பாடப்படும் பாடல்கள் கசக்கத்தான் செய்யுமோ? இயற்கையிலேயே அமுதைப் போன்ற இனிமையை உடையவையாயினும் தன் அன்புத்தம்பியான குமரனைக் குறித்த இப்பாடல் மாலை மேலும் சிறப்புபெறவும் சுவைபெறவும் அருளுமாறு ஐந்துகரங்களை உடைய ஆனைமுகத்தானின் தாள்களுக்கு அர்ப்பணம் செய்கின்றேன் என்கிறார் அருணகிரியார்.
இராகவனின் விளக்கம்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்!
//நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக்கு//
சின்னக் குழந்தைகளின் மனசை நாம் லேசானது என்கிறோம். ஆனால் அதுவே, விவரம் புரிந்தால்.. இதிலேயே எனக்கு ஒப்புதல் கிடையாது. விவரம் புரிகிறது என்றால் பரம்பொருளைக் குறித்த உண்மையைப் பற்றி அறியும் போதே விவரம் புரிவது என்றிருக்க வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு உலகம் தெரிவது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். எது எப்படியாயினும்.. நமக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம்? ஆசாபாசங்கள், கோபம், குரோதம், பொறாமை, பேராசை போன்றவையே. அவர்களுக்கும் அவை உண்டு. ஆனால் அவை நம்முள்ளே சில வருடங்களுக்கு நிலைத்து நிற்குமென்றால், குழந்தைகளுக்கு சில விநாடிகளே இருந்து மறைந்துவிடும். எதற்கு குழந்தைகள் பற்றியென்றால்...
அருணகிரி சுவாமிகள் சொல்வது நாம் இவ்வுலக சழக்கைகளில் சுழன்று மனம் திரிந்து, ஆண்டவன் பிறப்பில் நமக்கு அளித்த லேசான மனத்தை இம்மாதிரி காமம், குரோதம் போன்றவற்றைக் கொண்டு பெரும்பாறாங்கல்லாய் வளர்த்துவைத்திருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டவே.
ஆனால் இப்படி நாமே வளர்த்துவிட்ட / வளர்ந்துவிட்ட தீய மனதிற்கு உய்ய வழியுண்டா?
உண்டே. அதை உடனே அடுத்த வரியிலேயே சொல்லிவிடுகிறார். அருணகிரியாரே அவரின் வாழ்க்கையின் பெரும்பான்மையை தீயவற்றில் கழித்தவர். விலைமாதுக்களிடமும் மதுவிலுமே திளைத்திருந்தார். முருகனின் அருளென்ற ஒன்றில்லாமல் போயிருந்தால், இரத்தக்கண்ணீர் எம். ஆர். இராதாவின் கதாப்பாத்திரத்தை அருணகிரி வாழ்ந்தே காட்டினார் என்று சொல்லியிருப்போம். எப்படி ஒரு திருடனின் வாழ்க்கையை வால்மீகி வாழ்ந்து பின் இறையருளால் இராமாயணத்தைப் படைத்தாரோ அதைப் போலவே, அருணகிரியின் வாழ்க்கையில் முருகனின் இச்சைப்படி; தமிழ் நாட்டில் முருகனென்றால் அவனுக்கு அடுத்து அருணகிரியே நினைவுக்கு வரும்வகையில், அவருக்கு தன்னுடைய தன்னிகரில்லா கருணை மூலம், இரண்டாம் இடத்தை அளித்துள்ளான் கந்தன். நாமெல்லாம் அருணகிரி தன் முன்வாழ்க்கையில் இருந்த அளவு மோசமானவர்களாய் இன்னும் ஆகவில்லை (அவரைப் போல ஞானமும் பெறவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்!). ஆனாலும் அருணகிரியாரைப் போன்ற ஒருவருக்கே கந்தன் தன் அருளால் முக்தி அளிக்க வல்லவன் என்றால் அவன் கருணை எத்தகையான தொன்றாக இருக்க வேண்டும்? "Like Taking Candy From a Baby" என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. ஒரு குழந்தையிடமிருந்து மிக எளிதாக ஒரு மிட்டாயை வயதில் முதிர்ந்தவர்களான நாம் அபகரித்து விட முடியுமல்லவா? அதே போல தான் குமரனும். ஆனால், இவனிடத்தில் கயமைத்தனம், அறிவுஜீவித்தனங்கள் எல்லாம் செல்லுபடியாகாது. அன்பென்ற ஒன்று மட்டுமே போதும். அதை முழுமையாய் அவனிடத்தில் வைத்தால் அவன் குழந்தையேதான். நம்மை நம்பி அருளிக் காத்தருள்வதற்கு.
'கந்தா, குமரா, முருகா' என்று சொல்லி முடிக்குமுன் வந்து அருள் செய்யும் ஆறுமுகத்தானுக்கு...
//கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே//
அவனுடைய பண்புகளை, கருணையை இந்த அழகிய தமிழ்சொற்களை கொண்டு நான் தொடுத்த இந்த எளிய பாக்களாலான மாலையின் புகழ் மேலும் மேலும் சிறந்திடவே...
//பஞ்சக் கரவானை பதம் பணிவாம்//
உங்களின் தம்பியை/தங்கையைப் பற்றி மூன்றாவது மனிதர் ஒருவர் உங்களிடம் வந்து புகழ்ந்தால் உங்களுக்கு எவ்வளவு பெருமிதமாய் இருக்கும்? உங்கள் மனம் எவ்வளவு குளிர்ச்சி பெறும்? முருகா, கந்தா என்ற சொற்களே தேன் போல இனிக்கையில், அவனைக் குறித்துப் உண்மையான பக்தியில் பாடப்படும் பாடல்கள் கசக்கத்தான் செய்யுமோ? இயற்கையிலேயே அமுதைப் போன்ற இனிமையை உடையவையாயினும் தன் அன்புத்தம்பியான குமரனைக் குறித்த இப்பாடல் மாலை மேலும் சிறப்புபெறவும் சுவைபெறவும் அருளுமாறு ஐந்துகரங்களை உடைய ஆனைமுகத்தானின் தாள்களுக்கு அர்ப்பணம் செய்கின்றேன் என்கிறார் அருணகிரியார்.
இராகவனின் விளக்கம்
Subscribe to:
Posts (Atom)
